Tuesday, 13 May 2025

இசை கலைஞன் நடுகல் - தற்போது அருங்காட்சியகத்தில்

தமிழகத்தில் குறைவாகவே கிடைக்கும் இசை கலைஞனின் நடுகல் இது. ஜெகதேவி ஒரு தொழிற்சாலையின் பின் பக்கம் இருந்ததை அருங்காட்சியத்துக்கு எடுததச் செல்ல கேட்டவுடன் கொடுத்துவிட்டார்கள். இன்று அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. போர்களத்தில் முரசு, சங்கு, கொம்பு, ஆகிய இசைக்கருவிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. போர்களத்தில் இந்த இசைக்கலைஞர்கள் இல்லாது போர் நடக்காது. வீரர்களுக்கு உற்சாகமுட்டுவது இவைததான். இப்படி ஒரு இசைக்கலைஞர் ஒரு கையில் வாள் ஏந்தி ஒரு கையில் தான் இசைக்கும் கொம்பை மாட்டியிருக்கிறான் அந்த பட்டியையும் தெளிவாக காட்டியிருக்கிறார்கள்.உடை அமைப்பு அணிகலன்கள் ஆகியவையும் நாம் அறிந்து கொள்ளலாம். இவன் ஒரு போர்களத்தில் இறந்திருக்கிறான். இதனால் இவன் மனைவியும் இவனுக்கு மூட்டிய தீயில் வீழ்ந்து இறந்துவிடுகிறாள் என்பதை குறிக்கும் வகையில் கையில் மதுக்குடுவையுடன் காட்டப்பட்டுள்ளாள்.எனவே இது சதிக்கல் ஆகும். இறந்த வீரனின் வீரத்தை போற்றும் வகையில் இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/at4t9zllGzA
https://maps.app.goo.gl/XHsScE5p6e2UBXDP8

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...