Thursday 26 August 2021

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதல் உரல் கல்வெட்டு

 





கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல் உரல் கல்வெட்டு

 

 

உலகத்தில் இருந்து ராயகோட்டை செல்லும் வழியில் 3 கிமி தொலைவில்   இலகம்பதி என்ற இடம் உள்ளது அந்த இடத்தில் பழைமையான கோவில் இருப்பதாக கூறினார்கள் அவ்விடத்தை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வு செய்தது ஆய்வின் போது அந்த கோவில் மண்மேடாகத்தான் காட்சியளித்தது  500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என்பதை அருங்காப்பாச்சியர் கூறினார். அந்த இடந்தினை ஆய்வு செய்த போது பூதேவி சிலை ஒன்று பாதி மண்ணில் புதைந்திருந்தது இந்த சிலை 500 வருடங்கள் பழைமையானது இது இந்த கோவிலுக்கு சொந்தமானதாக இருக்கும் என கூறினார் .சரவணக்குமார் அவர்கள் உரலில் ஓர் கல்வெட்டு இருப்பதை கண்டறிந்தார். கோவிந்தராஜ் அவர்கள் கூறும் போது உடனே அந்த இடத்தினை சுத்தம் செய்து அந்த கல்வெட்டு படிஎடுக்கப்பட்டு தற்போது போல அக்காலத்தில் எண்ணை ஆட்ட இயந்திரங்கள் கிடையாது இதுபோன்ற உரல் செக்கில் மாடுகட்டியே எண்ணை எடுத்தார்கள். இந்த உரலின் கிழக்குபக்கத்தில் 8 வரிகளை கொண்ட தமிழ்கல்வெட்டு ஆகும் .இது 250 முதல் 300 ஆண்டுகள் பழைமையானதாகும் .இந்த செக்கு உரலை பார்த்திப வருசத்தில ஆடி மாதம் முன்றாம் தேதி இலம்பாதன் என்பவருக்காக உரல் செய்து தானமாக அளித்த செய்தியை கூறுகிறது இந்த பகுதி இன்றும் இக்கம்பதி என்று அழைக்கப்படுவதாக ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர் இது இந்த ஆய்வில் சதாநந்தகிருஷ்ணகுமார் , சரவணகுமார், தமிழ்செல்வன் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

 










Sunday 22 August 2021

ஊரும் பேரும் -கிருஷ்ணகிரி மாவட்டம்

 


 பெயரிலேயே அழகினை கொண்ட ஊர் நமது சிங்காரப்பேட்டை ஆனால் அந்த பெயர் எப்படி வந்தது என ஆராயும் போது கிடைத்த தகவல் ஒரு தலைவனின் பெயராலே இந்த ஊர் அழைக்கப்பட்டு இப்படி அழகான பெயரான சிங்காப்பேட்டை என மாறி இருக்கிறது.

https://youtu.be/eKmcUfsk0nk

 

இயல்பான செயல்களும் சினைப்பெயர்கள் போல - காரணம் கருதி வழங்கி வருகின்ற பெயர்களுல் ஒன்று 620 வருடங்கள் பழமையான செறியன்பள்ளி என்ற குரியனப்பள்ளி கல்வெட்டு ஆதாரத்துடன். தேவர்குந்தாணி கோவில் திருவிழாக்களில் வரிசை எடுக்கும் உரிமையும் திருக்கல்யாணத்திற்கு கங்கணம் கட்டிக் கொள்ளும் உரிமையும் இந்த ஊரார் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

https://youtu.be/vTmrNsbzZ50

 

ஊரும் பேரும் – தோற்றத்தினை வைத்து அந்த ஊரின் பெயர் அமைந்திருந்தாலும் 700 ஆண்டுகளுக்கு முந்தய புகழ்பெற்ற வரதராசர் ஆலையமும்,,. பழைமையான சிவன் கோவிலும் பாளையக்காரர்கள் வரலாறும் கொண்டது தான் #சூளகிரி – சூலகிரி என்பதே சூளகிரி என அழைக்கப்படுகிறது.

https://youtu.be/9AiFUJzLCDE

 

 

17. காப்பாச்சியரின் ஆய்வுக்கு பின் #பந்திகுறி  833 ஆண்டுகள் பழமையான #பன்றிகுறுக்கி  என்பதும் இந்த கல்வெட்டு குந்தாணி கோவிலுக்கு தானம் கொடுத்ததை குறிப்பதும் பழமையான உருக்காலை , நடுகற்களும் அந்த ஊரின் வரலாற்று செய்திகளை நமக்கு சொல்கின்றன.

 https://youtu.be/7k0ykQYQF3w

 

16. ஊரும் பேரும் – தோற்றத்தினை வைத்து அந்த ஊரின் பெயர் அமைந்திருந்தாலும் 700 ஆண்டுகளுக்கு முந்தய புகழ்பெற்ற வரதராசர் ஆலையமும்,,. பழைமையான சிவன் கோவிலும் பாளையக்காரர்கள் வரலாறும் கொண்டது தான் #சூளகிரி – சூலகிரி என்பதே சூளகிரி என அழைக்கப்படுகிறது.

https://youtu.be/9AiFUJzLCDE

 

 

15. #ஐகுந்தம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் கூடி வாழ்ந்த இடம் என்பதற்கு ஆதாரம் இருந்தாலும் .ஐகுந்தாம் 950 ஆண்டுகளுக்கு முன்பே #ஐங்குன்றம் என்ற ஊராக #குலோத்துங்கசோழன் காலத்தில் இருந்ததற்கான ஆதாரமாக கல்வெட்டு உள்ளது . சிறிய உராக இருந்தாலும் பழைமையான ஓர் ஊர் தான் ஐகுந்தம் – #ஊரும்பேரும்

https://youtu.be/EKIBU2S2nC8

14. சில நேரங்களில் ஊர்களின் பெயர்கள் அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு அமைவதுண்டு அந்த வகையில் வேப்பனப்பள்ளி செவ்வாய் சந்தையும் அவ்வகையில் பெயர் அமைந்த ஊர் தான்

https://youtu.be/CPO92X-WWW0

 

13. ஊரின் பெயரை அறிந்து கொள்ள காலங்காலமாக சொல்லப்பட்டுப் வரும்  #செவிவழிக்கதைகள் பெரிதும் உதவுகின்றன . வீடுகட்ட பொது உண்டியல் வைத்து இந்த ஊர் வந்துள்ளது  இந்த ஊர் ஒற்றுமைகாகான அடையாளமாக இருந்துள்ளது இனியும்  இருக்கும் 

https://youtu.be/SZpI3GUj8WI

 

1.அஞ்செட்டி கி.பி -1040 ஆம் ஆண்டிலேயே இருந்துள்ளது அதை முதலாம் இராஜேந்திர சோழனின் காலத்திய கல்வெட்டு இவ்வூரை அஞ்சிட்டம் என குறிப்பிடுகிறது. 981 ஆண்டுகள் பழமையாது https://youtu.be/yILaBkWZLwM

 2 . ஊரும் பேரும் - போச்சம்பள்ளி செவிவழி கதைகள் சிலநேரங்களில் உண்மையாகி போகின்றனது. போச்சையன் என்பவர் இந்த பகுதியை ஆண்டு வந்ததாகவும் அவரின் நினைவாகவே இது போச்சம்பள்ளி என்று அழைக்கப்படுகிறது என்ற செவிவழிகதை கல்வெட்டுகளால் நிஜமாகிப்போனது. 1243ல் போச்சையன்பள்ளி இப்போது போச்சம்பள்ளி உண்மையா ?

https://youtu.be/_xVW8GtSqx4

3. 646 ஆண்டுகளுக்கு முன்பே விஜயநகர மன்னன் வீரபுக்கண்ணன் காலத்திலேயே இருந்த ஊர் வேப்பனப்பள்ளி அதற்கு முன்பே கூட இருந்திருக்கலாம் ஆனால் நாம் சரியான ஆதாரத்திலிருந்தே கூறுகிறோம்

https://youtu.be/fxl4X7dTVy8

4. 798 ஆண்டுபழமையான ஆம்பள்ளி அப்போது ஆழ்வான் பள்ளியா ?

https://youtu.be/7AH6BwI4Uvw

5. ஊரும் பேரும்- பேருஹள்ளிக்கும் வேலுக்கும் என்ன தொடர்பு - 756 ஆண்டு பழமையானதா வேற்பள்ளி -ஆதாரத்துடன்

https://youtu.be/UyuZv5EwOI4

6. ஊரும் பேரும் - கனகமுட்லு (கலக்முட்டல்) - 400 ஆண்டுக்குமுன் கல்வெட்டு ஆதாரத்துடன் https://youtu.be/BU0NswwRdT8

7..ஊரும் பேரும் - தாசரிப்பள்ளி (தாசம்பட்டி) - 200 ஆண்டுக்குமுன் கல்வெட்டு ஆதாரத்துடன் https://youtu.be/76SIeuRBtPE

8. ஊரும் பேரும் - குன்னத்தூரின் பழம்பெயர் குன்றத்தூர் - இலக்கிய & கல்வெட்டு

https://youtu.be/A-akcxkAEdA

9. ஊரும் பேரும் - மல்லப்பாடியின் பழம்பெயர் மலைப்பாடி - இலக்கிய & கல்வெட்டு ஆதாரத்துடன் https://youtu.be/tWA0GmGOoXo

10.  ஊரும் பேரும் - நம்ம நெடுங்கல் - மாறாத மாற்ற முடியாத ஓரு பெயருக்கு சொந்தகாரர்கள் https://youtu.be/7xsD3fN2b-c

11.அழகான தமிழ்பெயர் செப்பு முற்றல் – ஆதாரம் கிடைக்காததால் நாம் தெலுங்கோடு தொடர்புபடுத்தி (சாப்ப- மீன் )சாப்பமுட்லு என அழைத்து வந்தோம் ஆனால் 600 ஆண்டுகளுக்கு முன் சாப்பமுட்லு செப்பு முற்றல் என அழைக்கப்பட்டது

 https://youtu.be/cJgwfOqoSaI


#மயிலாடும்பாறை#அகழ்வாய்வு- நமது மாவட்டத்தின் பழமையைச்சொல்லும் #மயிலாடும்பாறை வீடியோ தொகுப்பு -ஆய்வுகளப்பயணத்தில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக்குழு

 

நமது மாவட்டத்தின் பழமையைச்சொல்லும் #மயிலாடும்பாறை வீடியோ தொகுப்பு 
 #மயிலாடும்பாறை நமது மாவட்ட வரலாற்றினை எத்தனை வருடங்களுக்கு பின்னோக்கி எடுத்துச் செல்லும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் அப்படிப்பட்ட இடத்திற்கு வரலாற்று ஆயவுக்குழுவுடன் நமது பர்கூர் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அனைத்து அகழ்வாய்வு குழிகளையும் பார்வையிட்டார் #MayilaadumPaarai

https://youtu.be/UfY3x1FHYHo

 

#மயிலாடும்பாறை #MayilaadumPaarai அகழ்வாய்வு இடத்தில் கிடைத்த பொருட்களை மாண்பு மிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. தே . மதியழகன் அவர்கள் பார்வையிட்டார். அவற்றினைப்பற்றி மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அகழாய்வு அலுவலர் பரந்தாமன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

https://youtu.be/bC63TqmUU84

#மயிலாடும்பாறை #MayilaadumPaarai அகழ்வாய்வுக்கு 1.5 கிலோமீட்டர் தொலைவுக்குள் வரும் பாறை ஓவியத்தொகுதி இப்பகுதியின் பழமையை உறுதி படுத்துகின்றது

 https://youtu.be/m75YH-mcfoo

 

 

ஐகுந்தம் போலுப்பள்ளி பாறை ஓவியம் பகுதி 2 தற்போது அகழ்வாய்வு நடந்து வரும் #மயிலாடும்பாறை இடத்திற்கு அருகில் உள்ள பகுதி என்பது குறிப்பிடதக்கது https://youtu.be/sjKUfK_7qCY

 

வீரம் செரிந்த மண்ணா? #தொகரப்பள்ளி #மயிலாடும்பாறை #அகழ்வாய்வில் நான்கு கத்திக்துண்டுகள் ஒரே கல்திட்டையில் 1980 மற்றும் 2003ன் முந்தய அகழ்வாய்வுகளை விட அதிக சான்றுகள் கண்டிப்பாக கிடைக்கும் அது கிருஷ்ணகிரியின் வரலாற்று பார்வையை மாற்றும் என்பது ஐயமில்லை . கத்திகளும் கல்திட்டையும் மிக அருகாமையில் எடுக்கப்பட்ட காணொலி உங்கள் பார்வைக்கு https://youtu.be/_GEBfQWGxs8

 

#மயிலாடும்பாறை கல்திட்டையில்கல் அவன்பயன்படுத்திய பொருட்களை சட்டியில் இட்டு வைத்தார்களா உங்கள் பார்வைக்கு தற்போது அகழ்வாய்வு செய்யும் இடத்தில் இருந்து. https://youtu.be/OCGLuUtKeKs

 

 #மயிலாடும்பாறை கல்வட்டம்பெரும்பாலும் நாம் பார்க்கும் கல்வட்டம் முழுமையாக இருந்தாலும் செடிகள் வளர்ந்து அதன் அமைப்பை காண இயலாது தற்போது அகழ்வாய்வு செய்து வரும் இடத்தில் கல்வட்டம் தெளிவாக் தெரிகிறது உங்களுக்காக https://youtu.be/q1uoErxuEaI

 

#மயிலாடும்பாறையில் வரலாற்றுக்கு முந்திய கால மனிதன் ஆயுதங்களை கூர் தீட்டிய இடம் கண்டறியப்பட்டுள்ளது . மேலும் பானை ஓடுகளில் குறியீடுகள் உள்ளதா என ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. https://youtu.be/Nkyjpd0awp8

 

 அமைச்சர் #தங்கம்தென்னரசு அவர்கள் கூறிய #கலைஞரின் திரைப்பட வசனத்தில் உள்ள ஒடிந்த வாளானாலும் ஓரு வாள் கொடுங்கள்மயிலாடும் பாறை அகழ்வாய்வில் உங்களுக்காக https://youtu.be/K8yZuasbut8