Tuesday, 13 May 2025

கொடுகூர் மாந்தோப்பு குதிரை வீரன் நடுகல் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்

.600 வருடங்கள் பழமையான கொடுகூர் ை வீரன் நடுகல் - வீரத்தின் விளைநிலம் கொடுகூர். நடுகல்லின் மேற்பகுதியில் மூன்று வீரர்களை காட்டியிருக்கிறார்கள் . இவன் தலைவனாகையால் குதிரை மீது இருந்து கீழ் நின்றுள்ள வீரனுடன் போரிருவதாக காட்டப்பட்டுள்ளது. இந்த பூசலில் இவன் இறந்ததால் இவனின் வீரத்தை போற்றும் வகையில் இந்த நடுகல் எடுககப்பட்டுள்ளது. இன்றும் இந்த நடுகல் வழிபாட்டில் உள்ளது.
இறந்த வீரன் ஒரு தலைவனாவான் அதற்கான அடையாளமாக ஒருவன் வெண் கொற்ற குடையை பிடித்திருக்கிறான். வெண்கொற்ற குடைக்கு அருகே வில் காட்டப்பட்டுள்ளது. இது அதியமான் படையெடுப்பினை குறிப்பதாகவும் கொள்ளலாம். தொகரப்பள்ளி அதியமான் படையெடுப்பில் இறந்தவர்களின் நடுகல்லிலும் இப்படி வில் சின்னத்தை பார்க்கலாம்.
https://youtu.be/KwkQeqlvCGg
https://maps.app.goo.gl/hw57DG9CexLLyUUJ6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...