Wednesday, 21 May 2025

நடுகல் பன்றிக்குத்திப்பட்டான் கல் கருங்கஞ்சாவடி -மிட்டஹள்ளி, கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்

அக்காலத்தில் நிலத்தில் பயிரிடும் விவசாய பொருட்களை பன்றிகள் தோண்டி தின்று தோட்டத்தையும் அழித்துவிடும் அப்படி பன்றிகள் கூட்டத்தில் இருந்து நம் விவசாய பொருட்களை பாதுகாக்க காவலர்கள் இருப்பார்கள். சில நேரங்களில் பன்றி கூட்டத்தோடு போராடும்போது அவர்கள் இறந்து விட்டால் அவர்களின் நினைவாக நடுகல் எடுக்கப்படும் அந்த நடு கல்லில் இவர்கள் பன்றியோடு போராடும் காட்சியும் செதுக்கப்பட்டிருக்கும். இந்த நடுகல்லிலும் ஒரு கையில் வாளை உயர்ந்தி பிடித்தும் மற்றோர் கையில் உள்ள கட்டாரியை பன்றி உடலில் செலுத்தும் காட்சி. அருகே வில் அம்பும் காட்டப்பட்டுள்ளது. இவன் இறந்த பின் இவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறக்கிறாள். இவ்வகையான நடுகற்களை பன்றி குத்திப்பட்டான் என்று அழைக்கிறோம் இந்த கல் கருக்கஞ்சாவடி அருகே நிலத்தில் காணப்படுகிறது.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு காவேர்ப்பட்டிணம் அருகே உள்ள கருங்கஞ்சாவடியில் ஆய்வு மேற்கொண்டது அப்போது சதா அண்ணன் காட்டிய ஒரு பன்றிக்குத்திப்பட்டான் நடுகல் You tube
https://youtu.be/WhJtQxlL7xU
https://maps.app.goo.gl/zS5H1d4hCtcvDmm76
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு https://maps.app.goo.gl/zS5H1d4hCtcvDmm76

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...