Tuesday, 13 May 2025

சூலதேவர் (எ) அஸ்திர தேவர் - கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம்

சூலதேவர் வழிபாடு என்பது, இந்து சமயத்தில் சிவபெருமானின் ஓர் அம்சமான அஸ்திர தேவருக்குச் செய்யப்படும் வழிபாடாகும். இது ஆலயங்களில் ஸ்ரீபலி போன்ற வழிபாடுகளின்போது சூலத்தை எடுத்துச் சென்று செய்யப்படும்,போருக்கு செல்லும் போது சூலதேவரை வழிபட்டு செல்லும் வழக்கமும் இருந்தது.ஜெய்னூர் பகுதியில் முக்கால் பாகம் மண்ணில் புதைந்து இருந்த இதை தோண்டி அருங்காட்சியத்துக்கு கொண்டு வந்தோம். இது பிற்கால சோழர் காலத்தியது ( 13 ஆம் நூற்றாண்டு )
சூலதேவரை சிவனாக வழிபடும் வழக்கமும் இப்பகுதியில் இருந்துள்ளதற்கான சான்று இதுவாகும். சிவபெருமான் தலையில் இருக்கும் சந்திரனும் சூலத்தின் தலைப்பகுதியில் காணப்படுகின்றது. அதற்கு மேல் அலங்கார தோரனமகுடமும், ஸ்வஸ்திக் குறியீடும் இரண்டு பக்கமும் சாமரமும் காட்டப்பட்டுள்ளது.
கால்பகுதியில் பூரணகும்பமும், சூலதேவரின் இரண்டு பக்கமும் குத்து விளக்கு காட்டப்பட்டுள்ளது.
https://maps.app.goo.gl/XHsScE5p6e2UBXDP8

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...