Tuesday 23 July 2019

2500 years old menhir -2500 ஆண்டுகள் பழமையான குத்துக்கல் (சஜ்சலப்பள்ளி) MUSEUM &KHRDT - KRISHNAGIRI HISTORY

 கிருஷ்ணகிரி வட்டம் திப்பனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சஜ்சலப்பள்ளி புதியதாக கட்டப்பட்டுள்ள ஊர் குட்டை மாரியம்மன் கோவில் அருகே குத்துக்கல்


 கிருஷ்ணகிரி தொன்மையும் பெருங்கற்கால எச்சங்களையும் வெளிகொணரும் பணியில் அருங்காட்சியகம்  மற்றும் கிருண்ஷகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும்குழு இணைந்து செயலாற்றி வருகிறது. ஆய்வுக்குழுவிற்கு  கிருஷ்ணகிரி வட்டம் திப்பனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சஜ்சலப்பள்ளி புதியதாக கட்டப்பட்டுள்ள ஊர் குட்டை மாரியம்மன் கோவில் அருகே நடுகல்லும் வரலாற்று எச்சங்களும் உள்ளதாக தாசரிப்பள்ளி ஆசிரியர் திருவேங்கடம் அவர்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அங்கு பழைய மாரியம்மன் கோவிலை இடித்துவிட்டு புதிய மாரியம்மன் கோவிலை கட்டுவதற்கு நிலத்தை சமன்படுத்தி உள்ளனர் அப்போது ஒரு உயரமான கல்லை மட்டும் அப்படியே விட்டுள்ளனர். அது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட குத்துக்கல் என அறியப்பட்டது. இவை குத்துக்கல் (menhir) அல்லது நெடுங்கல் என அழைக்கப்படுகின்றது .நிலைக்குத்தாக நாட்டப்பட்டுள்ள தனி நடுகல்லாகும் இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகவே இறந்தோருக்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னமாகும். இப்பகுதியில் இருந்த கல்திட்டைகள் பல விவசாயத்துக்காக நிலத்தை சமன் படுத்தும் போது அழிந்து விட்டன. இது 8அடி உயரமும் நான்கு அடி சுற்றளவும் கொண்டு உள்ளது இது அப்பகுதியின் தலைவனுக்கானதாக இருக்கலாம் . உலகம் முழுவதும் இறந்தவர்களுக்கு குத்துக்கல் வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.குத்துக்கல்லைத் தமிழகத்தில் முன்னோர்களாக நினைத்து வணங்கி வழிபட்டு வந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடத்தில் உள்ளது இது 9வது இடமாகும்  தொல்லியலாளர் சுகவனமுருகன் தெரிவித்தார். இதற்கு அருகே சுமார் 300 ஆண்டுகள் பழமையான மாறுபட்ட உருவ அமைப்பில் புலிகுத்திப்பட்டான்கல் ஒன்றும் அப்பகுதி மக்களால் வழிபாட்டில் உள்ளது   இந்த வீரன் மொட்டை தலையுடனும் மீசை உடனும் உள்ளான் இவன் புலியுடன் சண்டையிடும் காட்சியும், அருகில் தீக்குளித்து இறந்த அவனது இரு மனைவிகள் உருவமும் உள்ளது ள்என அருங்காட்சிய காப்பாச்சியர் கோவிந்தராஜ் அவர்கள் தெரிவித்தார்   .   தாசரிப்பள்ளி ஆசிரியர் திருவேங்கடம் கூறுகையில் 5 மற்றும் ஆறாம் வகுப்புகளில் வரலாற்றுக்கு முந்தயகால வரலாறு பற்றி பாடம் வருகிறது அப்போது நமது மாவட்டதில் உள்ள வரலாற்று சான்றுகள் பற்றி கூறினோம் இதை தொடர்ந்து மாணவர்கள் ஆர்வம் அதிகரித்தது அவர்கள் இப்பகுதியில் நடுகல் பற்றி கூறியதன் படியே ஆய்வுக்குழுவுக்கு தெரிவித்தேன் என கூறினார. இந்த ஆய்வுப்பணியில் நாராயணமூர்த்தி . விஜயகுமார் பிரகாஷ். வரலாற்று ஆசிரியர் ரவி , திருச்செல்வன். தமிழ்செல்வன் கெண்ணடி வாணன், தலைமை ஆசிரியர் பாத்திமா மேரி ஆகியோர் ஈடுபட்டனர்
 The museum and the Krishnagiri History resersh and documentary Team are working on uncovering the Krishnagiri myth and the ancient remnants. The study was conducted on the basis of the information given by the Dasari Palli teacher Thiruvenkadam to the inspection team that the new building of the Sajsalapalli belonging to the Tipperanapalli Panchayat of Krishnagiri Circle is located near the Mariyamman temple. There they have demolished the old Mariamman temple and leveled the land to build the new Mariamman Kovil, leaving only a tall stone. It was known as piercing
2500 years ago. These are known as menhir or longitudinal .This is a monument to the dead from prehistoric times. Many of the colonies in the area have perished while leveraging land for agriculture. It is 8 feet high and four feet in circumference, possibly for the head of the region. Throughout the world there has been the practice of punching dead people. Archaeologist Sukavanamurugan said that this is the 9th place in Krishnagiri district. Near this is a 300-year-old variegated structure with a tiger head and a mustache. Dasari Palli teacher Thiruvenkadam said that there is a lesson in prehistoric history in the 5th and 6th grades. Then we told about the historical evidence in our district. This was followed by the interest of the students. Narayanamurthy in this study. Vijayakumar Prakash. Historian Ravi, Tiruchelvan. Thamilselvan Kennedy Wanan and Editor-in-Chief Fatima Marie were also









1980 களில் இருந்து இதுபோன்ற வரலாற்று சுவடுகளை பலர் பார்த்திருக்கலாம். இதையே கூட ஆவணப்படுத்தி இருக்கலாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுபோன்ற வரலாற்று எச்சங்கள் இருப்பின் 9787536970 க்கு தகவல் கொடுக்கவும் நன்றி

Wednesday 10 July 2019

Rare murals on hero stones discovered in Krishnagiri temple 
நடுகல் சுவற்றில் குதிரை உருவமும் குடையை தாங்கி நிற்கும் படியும் அதற்கு முன்பு ஒரு குதிரையில் மனிதன் செல்லும் வகையில் ஓவியம் வரையப்பட்டுள்ளது


700 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று நடுகற்களை ஒரு காலகட்டத்தில் நடுகல் வீட்டினுள் மீண்டும் நட்டு வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள். இவை வெவ்வேறு காலக் கட்டத்தைச் சேர்ந்தவை. அந்த வீடு வழக்கம் போல் இல்லாமல் நான்கு பக்கமும் முடப்பட்டு கிழக்கு பக்கம் மட்டும் இரண்டு அடி வாசல் கற்திட்டை போல் வைத்துள்ளார்கள். கிழக்குபக்கமுள்ள கற்களைத்தவிற மற்ற முன்றுபக்கங்களும் காரை பூசப்பட்டுள்ளது. அதன்மேல் சுண்ணாம்பு பூசப்பட்டு செந்சாந்து வண்ணத்தில் அழகாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான ஓவியங்கள் –சில நு◌ாற்றாண்டுகளாக இயற்கையின் பிடியில் சிக்கி அழிந்து விட்டன. மீதமுள்ள ஓவியங்கள் அக்கால கலாச்சாரத்தை நமக்கு எடுத்துச் சொல்லும் ஒரு ஆவணமாக காட்சியளிக்கின்றது.
CHENNAI: Hero stones are discovered every other day in Tamilnadu  but how about one with murals on it. In a rare discovery, a team headed by 
hero stone expert Sugavana Murugan, found a hero stone slab with murals on it. Considered a rare and 
exclusive find by experts in the field, the 600-year-old murals have been identified in a hero stone temple in a sivambatti remote village near Mathur, 35km from Krishnagiri.
This temple comprises a cap stone of 3mx1.5m with three hero stones inside the house for prayer. The identified murals depict the figures of three horses, two 
procession umbrellas and the face of a woman with neatly  braided hair. A hero stone is a memorial paying tribute, particularly to a chief of a local clan or community.
It was while going through a set of photographs of a heritage walk conducted by his teacher-friend for students to Sivampatti village that Murugan noticed the murals. I couldn’t find any mural on the slab first, but a second look revealed the faded and ruined patches of natural dye scattered around the hero stones. I soon set out to the














மிகவும் அரிதான நடுகல் சுவரோவியங்கள் கண்டுபிடிப்பு!
பண்டைய தமிழர்கள் பூசலில் மாண்டவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் எழுப்பி வழிபடுவது வரலாற்று முற்பட்ட காலத்துக்கு முன்பு இருந்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடுகல் வழிபாட்டு மரபு நீண்ட வரலாற்று பின்னணி மற்றும் பண்பாட்டு தொடர்பும் கொண்டது என்பதை இங்குள்ள நடுகற்கள் சொல்கிறது . தற்போதும் கூட நடுகல் வழிபாடு பல்வேறு கிராமங்களில் நடைபெறுவதைக் காணலாம். இதுபோல பல்வேறு காலகட்டங்களில் வழிபாட்டில் இருந்த நடுகற்கள் பற்றிய ஆய்வை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் அருங்காட்சியம் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்து◌ாரை அடுத்துள்ள உள்ள சிவம்பட்டி அருகே உள்ள நடுகற்களை பள்ளத்துார் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆறுமுகம் அவர்கள் மாணவர்களுக்கு நடுகற்களை காட்டும் போது சில படங்களை அனுப்பி வைத்தார் அதில் ஓவியங்கள் உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் கூறியாதன் அடிப்படையில் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் , சுகவணமுருகன் ஆகியோருடன் குழு தனது ஆய்வுப்பணியை தொடங்கியது .இந்த கண்டறிதல் நடுகல் பற்றிய புதிய பரிணாமத்தை உண்டாக்கிஉள்ளது

இந்நடுகற்களுக்குப் பக்கவாட்டில் சுவர் போன்று அமைந்துள்ள கற்பலகைகளில்தான் அரிய சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. 2 மீ.நீளமும் 1 மீ. அகலமும் உள்ள இச்சுவரோவியத்தில் மூன்று குதிரைகளும் இரண்டு திருவிழாக்குடைகளும் பின்னல் போட்ட சடையுள்ள பெண்ணின் உருவமும் வரையப்பட்டுள்ளது.
கற்பலகைகளில் சாந்து பூசி அதன் மேல் இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன. குதிரை அய்யனாரின் குதிரை போன்று அழகுறத் தீட்டப்பட்டுள்ளன.குதிரை ஓவியம் 45×30 செ.மீ. அளவுள்ளது. இவ்வோவியங்கள் 1.5×1.2 மீட்டர் அளவிலானது. பெண் ஒருத்தியின் முகம் பின்னலிடப்பட்ட சடையுடண் தீட்டப்பட்டுள்ளது. இவ்வோவியங்களுக்கு மேலே தோரணம் போல திரைச் சீலை நீளமாக வரையப்பட்டுள்ளது. தென்பகுதியில் பூக்கள் வரையப்பட்டிருந்தமையை வண்ணத்துணுக்குகள் காட்டுகின்றன. இந்நடுகற்கள் வைக்கப்பட்ட காலத்தில் அச்சிலைகள் மேலும் சாந்து பூசப்பட்டு வண்ணத்தால் வரையப்பட்டிருந்ததற்கான அடையாளங்களும் உள்ளன. காஞ்சி கைலாசநாதர் கோவிலுள்ள சிலைகளின் மீது வரையப்பட்டுள்ளதைப் போன்று வரையப்பட்டிருந்திருக்க வேண்டும் என்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் மேலும் இவற்றைப் பாதுகாக்க பாலிவினைல் அசிடேட் என்னும் கலவைப் பூசப்பட வேண்டும் என்றார். பல்லாண்டுகளாக மழைநீர் கசிந்து வண்ணப்பூச்சுகள் உதிர ஆரம்பித்துள்ளன. இவற்றைக் காப்பாற்ற கிருஷ்ணகிரி ஆவணப்படுத்தும் குழு ஊர் மககளிடம்பேசி பாது காக்க கூறிஉள்ளது. இந்த ஆய்வில் நாரணனமுர்த்தி ,ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் . விஜயகுமார் . பிரகாஷ். ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பழமையான கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமைவாய்ந்த கோவில்கள் பற்றி கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் 9443442991 , 9787536970 ஆகிய தொலைபேசியில் தெரிவிக்கலாம்..(2015 ல் மத்து◌ார் சென்னையன் என்பவர் இதை கண்டு அதை தன்னுடைய பி.எச்.டி பதிவில் புராண ஓவியங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்

https://youtu.be/sTr_1AsLTDI

Monday 8 July 2019

13. ஆம்


பேசாளமன்னன் இராமநாதன் காலத்தில் விடுகாதழகிய பெருமாள் என்ற அதியன் மரவுச்சிற்றரசன் வழங்கிய ஆணை . மருராந்தக வீரநுளம்பனின் பையூர் முதலான பற்றுகளின் மன்றாட்டு உரிமை சந்ததி இல்லா  வாரிசுகளுக்கு தொடர்வது பற்றிய குறிப்பு இது.



1.ஸ்வஸதி ஶ்ரீ இராமநாத தேவர்க்கு 

2.யாண்டு இருபத்தி இரண்டாவது மதுராந்தக வீர நுளம

3. பன் வா..த்தரேன் பையுர் முதலாக நமக்குச்

4.சென்ற பற்று ..நம்மிட மக்கள் மக்கள் மன்றடியார் மக்கள்

5.ம ..லுள்ளதனையும் சந்ததியில்லா அடைமை கொள்ள..

6.தல்ல விடுகாத அழகிய பெருமாள் ஆணை.








ஒவ்வொரு ஊருக்கும் ஊரவை ஒன்றும் இருந்தது. ஊரவையின் உறுப்பினர் ஊராளி என்றழைக்கப்பட்டார். மன்றாடிகள் என்போர் இருந்துள்ளனர். மன்றுக்குரியவர் மன்றாடி. (கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலில், பதிப்பாசிரியர்கள் மன்றாடி என்பதற்குத் தரும் விளக்கம்:  மன்றாட்டு, மன்றாட்டுக் காணி, மன்றாட்டுப்பேறு ஆகியன கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்து வந்த ஊர் வருவாயிலிருந்து உருவாக்கப்பட்ட பங்கு முறையாகும். கால்நடை வளர்ப்புச் சமூகத்தோடு தொடர்புடைய மன்றம் என்ற சொல்லிலிருந்து மன்றாட்டு வந்தது. மன்றாட்டை நிருவகிப்பவன் மன்றாடி எனப்பெற்றான்.)

https://youtu.be/0PJzKPgH8vE

Tuesday 2 July 2019

63.1 சோழகோநார் விட்டநில(ம்)- 300 ஆண்டுகளுக்கு முந்தய தானப்பத்திரம் KHRDT & MUSEUM (HISTORY OF KRISHNAGIRI

 தானக் கல்வெட்டு கண்டெடுப்பு அனைவருக்கும் வணக்கம்.
சிறிய இடைவெளிக்குப் பின், காவேரிப்பட்டினம் பையூர் அருகே பழமையான கல்வெட்டு இருப்பதாக அறிந்து அதை காண, கிருட்டினகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு 

  தமிழ்ச்செல்வன், நாராயணமூர்த்தி, சுகவன முருகன், எம்.என்.இரவி, பிரகாஷ் இவர்களோடு மாருதி மனோகரன் ஆகியோர்
 பார்வையாக கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம் அடுத்த பையூர் கோனார் கொட்டாய், சொக்கன் குட்டை, சுப்பிரமணியம் என்பவர் நிலத்தில் ஒரு பாறையில் இருக்கும் நாலு வரி கல்வெட்டினை காண சென்றோம்.
 வயலும் வயல் சார்ந்த தென்னை மரங்கள் சூழ, ஒரு பெரும் பாறை குன்று ஒட்டிய நிலத்தில் புதர் மண்டிய இடத்தில் அந்த கல்வெட்டு இருந்தது, உடனடியாக அந்த இடத்தை சுத்தம் செய்தபின், கல்வெட்டு வாசகத்தை படியெடுத்தோம்.

 அந்த கல்வெட்டு நான்கு வரிகள் கொண்டதாக இருந்தது....அதில்
நம்பியார் திருவண் எமது
ப் பெருமாளுக்கு மடப்புறம்
சோழகோநார் விட்டநில(ம்) நால்(வர்)
கண்டகம்......
அதாவது கோவிலுக்கு குறிப்பிட்ட நிலத்தை தானம் அளித்தற்கான கல்வெட்டு என திரு. சுகவன முருகன் அவர்கள் தெரிவித்தார்கள்.




 அந்த கல்வெட்டு பாறைக்கு அருகிலேயே அஸ்ட மங்கல சின்னங்கள் கொண்ட ஒரு கல்வெட்டும் இருந்தது. அதில் வரையப்பட்ட சூலம், தூப கலசம், பாதம், வெண் கொற்றகுடை, கண்ணாடி, ஸ்வஸ்திக் சின்னம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது.

இன்றும் அப்பகுதியில் கோனார்கள் வாழ்வது குறிப்பிடதக்கது


தவறு இறுப்பின் தெரிவிக்கவும்
தொலைபேசி எண் 9787536970
thamiltestf@gmail.com