தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 18 May 2025
பந்திகுறி கல்வெட்டு ஒய்சளர் மன்னன் வீரவள்ளாலன்-2 காலம் கி.பி. 1188 -கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
வேப்பனப்பள்ளி செல்லும் வழியில் உள்ள பந்திகுறி கிராமத்தின் மேற்கு பக்கம் உள்ள பாறையில் கல்வெட்டு உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணமார் தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு சென்று படிக்க முயன்றோம். புதர்கள் இருந்ததால் படிக்க இயலவில்லை. மற்றொர் நாள் சென்று படித்தோம்.
மறுமுறை சென்றபோது புதர்களை வெட்டி சரிசெய்து படித்தோம்
ஆய்வுக்கு பின்பந்திகுறி 833 ஆண்டுகள் பழமையான ஊர் என்பதும் இந்த கல்வெட்டு குந்தாணி கோவிலுக்கு தானம் கொடுத்ததை குறிப்பதும் பழமையான உருக்காலை , நடுகற்களும் அந்த ஊரின் வரலாற்று செய்திகளை நமக்கு சொல்கின்றன.
https://youtu.be/7k0ykQYQF3w
கிருஷ்ணகிரி மாவட்டம் பல வரலாற்று தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றினை தேடி வெளிகொண்டுவரும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று அய்வு மற்றம் ஆவணபடுத்தும் குழு கிருஷ்ணகிரி மாவட்ட அருங்கட்சியகத்துடன் இணைந்து தொடர்ந்து பல்வேறு இடங்களை கள ஆய்வு செய்துவருகிறது. வரலாற்று ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார் அளித்த தகவலின் பேரில் தலைவர் நாராணனமூர்த்தி மற்றும் காப்பாச்சியர் கோவிந்தராஜ் அகியோர் பந்திகுறி பகுதியில் உள்ள சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டை கண்டறிந்தனர் .ஊரில் முத்துவேல் மற்றும் குழுவினர் அந்தபாறையின்மேல் இருந்த முட்புதரை அகற்றி படிக்க உதவினர்.
இக்கல்வெட்டு குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது பந்திகுறிக்கு மேற்கு தனியார் நிலத்தில் உள்ள பாறையில் 10 வரிகளைக்கொண்ட இந்த நீண்ட கல்வெட்டு காணப்படுகிறது. வீரவல்லாளனின் மகன் விருதுகோவன் இலக்குமி நாயக்கர் இப்பகுதியை ஆண்டபோது அவரது ஆட்சி சிறக்கவேண்டி குந்தாணியில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்கு பந்திகுறியில் உள்ள நிலத்தை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு இரண்டு முக்கிய வரலாற்று செய்திகளை நமக்கு தெரிவிக்கிறது. முதலாவதாக சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பந்திகுறி என்று தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் பன்றிகுறுக்கி என்று அழைக்கப்பட்டதாக இக்கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.
மேலும் ஒய்சாள மன்னன் வீரவல்லாளனின் பெயர் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் வீரவல்லாளன் கி.பி.1343ல் கொல்லப்பட்டதாகவும் அதன்பின் அவனது மகன் மூன்று ஆண்டுகள் அரசாண்டதாகவும் வரலாறு கூறுகிறது. அவனுக்குப் பின் விஜயநகர அரசோடு இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கி.பி.1368ம் ஆண்டை சேர்ந்த பன்றிகுறி கல்வெட்டு வீரவல்லாளனின் மகன் பெயர் விருதுகோவன் இலக்குமிநாயக்கர் என்றும் இவனது வாளும் தோளும் நன்றாக இருக்கவேண்டி தானம் அளித்த செய்தியை குறிப்பிடுகிறது. எனவே இக்கல்வெட்டு வாயிலாக ஒய்சாள வம்சமானது முடிவுற்ற பின்னும் தொடர்ந்து குறுநிலத்தலைவர்களாக விஜயநகரர் ஆட்சிக்காலத்திலும் இப்பகுதியை ஆண்டுவந்துள்ளது தெரியவருகிறது. மேலும் வீரவல்லாளன் என்ற பெயரில் சுமார் 150 ஆண்டுகள் கழித்து விஜயநகரப் பேரரசின் இறுதிக் காலத்தில் இப்பகுதியை ஆண்டதாக முறையே கிபி.1505ம் ஆண்டை சேர்ந்த நெடுசால் கல்வெட்டு மற்றும் 1511ல் வெட்டப்பட்ட கொத்தூர் கல்வெட்டு ஆகிய இரண்டு கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. எனவே இது குறித்து மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.என்ற கூறினார்.
https://youtu.be/wjAW5scb4ig
https://maps.app.goo.gl/KyNY9Lq8jg3jaVMWA
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்
மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...

-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...
-
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இண...
No comments:
Post a Comment