Tuesday, 20 May 2025

அபூர்வ நடுகல் குதிரைவீரன் தன் நாட்டுக்காக சுயபலி செய்து கொள்கிறான் பீமாண்டப்பள்ளி (கொல்லபள்ளி, ) மலையடிவாரம் கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் 2

இப்படி சில நடுகற்களே இருக்கும் போருக்கு முன் கொற்றவைக்கு தன்னை தானே பலிகொடுத்துக் கொள்வது ஒரு தெய்வீக செயலாகவும், நாட்டுக்காக தன்னை தானே சுயபலி கொடுப்பது கொண்டாட்ப்பட்டது. இவன் ஒரு குதிரை வீரனாக இருக்கலாம். குதிரையில அமர்ந்தவாறே தன் தலையை கொய்து கொள்கிறான். குதிரை இரு கால்களை மேல் நோக்கி வைத்துள்ளது தலையை கவிழ்ந்துள்ளது. இவன் முக்கிய தலைவன் என்பதை குறிக்கும் வகையில் அவன் பின்பக்கம் ஒருவன் குடைபிடித்துளளான்.இவனுடைய தியாகத்தை போற்றும் வகையில் இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் 400 வருடங்கள் பழமையானதான இருக்கலாம்.
குதிரை வீரன் நடுகல்லுக்கு அருகிலேயே இருக்கும் மற்றோர் நடுகல் இது ஆகும். இரண்டு வீரர்கள் பேரிட்டு கொள்கிறார்கள். அதில் இறந்த வீரனை போற்றும் வகையில் எடுக்கப்பட்ட நடுகல்.
https://maps.app.goo.gl/72Zn6yRdeAazQNMk7
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு 12.640998081282083, 78.12799956140952

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...