Saturday 31 August 2019

62.சோழர்கால பைரவர் சிலைகள் கண்டெடுப்பு சோழர் கால பைரவர் சிலைகள் கண்டெடுப்பு kelpiyour Chola Term Bhairav Statues Found - MUSEUM &KHRDT - KRISHNAGIRI HISTORY







 விவசாய  நிலத்தில் 700 ஆண்டு பழமையான இரண்டு சோழர் கால பைரவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது .
கிருஷ்ணகிரியின் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் நோக்கில் நாராயணமூர்த்தி தலைமையில் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுமற்றும் ஆவணப்படுத்தும் குழு அருங்காட்சியக காப்பாச்சியர் , தொல்லியல் ஆய்வாளர் சுகவணமுருகன் , வரலாற்று ஆசிரியர் ரவி ஆகியோருடன் கீழ் பையூர் என்ற ஊரில்  ஆய்வு மேற்கொண்டது.
பையூர் இந்து ஊர் வரலாற்று சிறப்புடைய இடமாக குறிக்கப்படுகிறது. இது பையூர் நிலையுடையான். பையூர் பற்று . பையூர் சீமை என பலவாறாக கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மூன்றாம்  குலோத்துங்கன் காலத்தில் மிக சிறப்பு வாய்ந்த ஊராக இருந்துள்ளது. இந்த ஊரின் நடுவில் சிவன் கோவில் இருந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. இக் கோவிலின் நந்தி வேறு ஒரு இடத்திலும் .விநாயகர் சிலை ஒரு இடத்திலும் காணப்படுகிறது. அதேப்போல் மத்வ மட மதகுருமார்கள் சமாதிநிலையடையும் பிருந்தாவணம் ஒன்றும் அழிந்த நிலையில் காணப்படுகிறது .
 மணிகுண்டு என்பவரின் தோட்டத்தில் இரண்டு பைரவர் சிலைகள் புதைந்து இருந்ததாகவும் சிறிது வெளியே தெரிவதாகவும்  ஊர் மக்கள் கூறினார்கள் . அவரின் அனுமதி பெற்று சிலைகளை வெளியே எடுத்து ஆய்வு செய்யப்பட்டது...அவை  இரண்டும் பைரவர் சிலைகள் ஆகும் பைரவர் என்பது சிவவடிவின் அகோர வடிவம் என்பார்கள்.

அகோர வடிவங்களின் இலக்கணங்களாக சுடர்முடி என்று சொல்லக்கூடிய முடியானது மேல்நோக்கி தீச்சுடர் போல் மேல் நோக்கி செல்வது போல் இருவருக்கும் காட்டப்பட்டுள்ளது . கோரப்பல்லும் கண்களும் உக்கிரநிலையில் இருக்கிறது . வேறு அடையாளங்களாக உடுகை பிச்சைப்பாத்திரம் பாசக்கயிறு ,சூலம் வாகனமான நாய் காட்டப்பட்டுள்ளது. பைரவர் நிர்வாணநிலையில் காட்டப்பட்டுள்ளார். மற்றொன்று நாகத்தை இரண்டு பக்கங்களிலும் கொண்டுள்ளார் இவர் நாக பைரவர் என அழைக்கப்படுகிறார். சுமார் இவை 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிற்கால சோழர் அல்லது வைசாளர் கால சிவன் கோவிலைச் சேர்ந்த சிற்பங்கள் என அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்த ராஜ் அவர்கள் கூறினார் இந்த ஆய்வுப்பணியில் பேராரியை வாசுகி விஜயகுமார் , பிரகாஷ் ,கணேசன், டேவீஸ். மதிவாணன்,  தமிழ் செல்வண், மதிமணியன் மணோகரன் காவேரி ஆகியேர் ஈடுப்ட்டனர்









 அருகே இருந்த விநாயகர்




Thursday 15 August 2019

உண்டிகநத்தம் நடுகற்கள் Hero STones - MUSEUM &KHRDT - KRISHNAGIRI HISTORY

வீரன் இரண்டு கைகளிலும் வாள் வைத்துள்ளான். இவன் பாம்பு கடித்து இறந்திருக்கலாம் , அவன் மனைவியும் உடன் கட்டை ஏறியுள்ளதால்  இது ஒரு சதிக்கல் -பாம்பு குத்திப்பட்டான் கல் 
 வீரன் சிறந்த வில் வீரனாக இருக்க கூடும் இவன் போரில் இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்டு இருக்கலாம் , அவன் மனைவியும் உடன் கட்டை ஏறியுள்ளதால்  இது ஒரு சதிக்கல் - 
 வீரன் சிறந்த வில் வீரனாக இருக்க கூடும் இவன் ஆநிறையை மீட்கும் பொருட்டோ  காக்கும் பொருட்டோ இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்டு இருக்கலாம் , அருகே மாடு ஒன்று காட்டப்பட்டுள்ளது- 
 வீரன் சிறந்த வில் வீரனாக இருக்க கூடும்.ஒரு கையில் அருவா வைத்திருப்பதால் விவசாயப்பணியிம் செய்திருகலாம்  இவன் ஆநிறையை மீட்கும் பொருட்டோ  காக்கும் பொருட்டோ இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்டு இருக்கலாம் , அருகே மாடு ஒன்று திமில் உடன் காட்டப்பட்டுள்ளது- 




 கோவிலின் கிழக்கு பக்கம் நடுகல் வீட்டினுல் இந்த சதிக்கல் வைக்கப்பட்டுள்ளது.கையில் வாளும்கேடையமும கொண்டுள்ளான்.


வேட்டனப்பள்ளியில் இருந்து அரியனப்பள்ளி அருகே உள்ளது கீரையம்மன் கோவில் . ஆந்திர எல்லையில் அமைந்து இருந்தாலும் இங்குள்ள நடுகற்கள் தமிழக பகுதியில் உள்ள நிலங்களை சீர் செய்தபோது கோவிலில் வைத்ததாக கூறுகிறார்கள். அங்குள்ளவர்கள் இவை பேரிகை பாளையகாரர்களின் வீரர்கள் என்று கூறுகின்றனர். கோவிலின் தெற்கு பக்கம் 5நடுகற்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
அதன் அருகே நான்கு தேர்சக்கரங்கள் (கல்லால் ஆனவை)  வைக்கப்பட்டுள்ளது ஒருகாலத்தில் இந்த கோவிலுக்குதேர் இருந்துள்ளது அதன் சக்கரமாகும். தற்போதும் வேப்பணப்பள்ளி ராமர் கோவிலின் தேர் கருங்கல்லால் ஆனதாக கூறப்படுகிறது. 
14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர அரசன் வீர கம்பண்ணன் ஆண்டதாகவும் தெரிகிறது.


அமைவிடம் - https://maps.app.goo.gl/pohjeuweSJjfM7vEA














Wednesday 14 August 2019

பூசாரிக்கு நடுகல் Priest HERO STone MUSEUM &KHRDT - KRISHNAGIRI HISTORY



ஆத்துக்கால்வாய் சென்று அடையும் பெரிய ஏரிக்கரையில் உள்ளது அங்கும்( ரத்னா நகர்) பெருமாள் கோவிலின் வலது புறம் பூசாரிக்காக நடுகல் அமைக்கப்படடுள்ளது. அதில் பூசாரி இடக்கையில்  மணியை பிடித்துக் கொண்டும் வலதுகையில் தூபகிண்ணத்தை வைத்துள்ளார். தலையில் ருத்ராச்சமாலை கட்டியிருக்கிறார். அவரின் பின்புறம் ஒரு கோல் அமைக்கப்பட்டுள்ளது. பூசாரியின் அருகே காளை ஒன்று பூசாரியை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. பூ சேகரிக்கும் கூடையை கையில் மாட்டிகொண்டுள்ளார். இவர் வலக்கை பழக்கம் உள்ளவராக இருக்கலாம். உள்ளது. இவர் இறந்த உடன் இவரின் மனைவி இவருடன் உடன்கட்டை ஏறி இறக்கிறார்.  எனவே இது ஒரு சதிக்கல் ஆகும் . குறைந்தது 250 வருடம் பழைமையானதாகும் . இதன் அருகே பழைமையான கோவில் கட்டுமாணம் போன்ற அமைப்பு உள்ளது . இருக்கும் என அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் அவர்கள் தெரிவித்தார்.
  

கல்லகுறுக்கி ஊரின் அருகே முனியப்பன் கோவிலை தாண்டி கால்வாயை ஒட்டிய பகுதியில் ஒரு இராமர் கோவில் உள்ளது அந்த கோவிலின் விளக்குத்தூண்  . அதன் எதிரே வடக்கு பக்கம் பார்த்தவாறு ஆஞ்சனேயருக்கு கல்வீடு அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வலதுபுறம் கோவில் பூசாரிக்கு நடுகல் வீடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் பூசாரி வலக்க்யில் மணியை பிடித்துக் கொண்டும் இடதுகையில் தூபகிண்ணத்தை வைத்துள்ளார். இவர் இடக்கை பழக்கம் கொண்டவராக இருக்ககூடும். தலையில் ருத்ராச்சமாலை கட்டியிருக்கிறார். அருகே பூ சேகரிக்கும் கூடையும் உள்ளது. இவர் இறந்த உடன் இவரின் மனைவி இவருடன் உடன்கட்டை ஏறி இறக்கிறார் எனவே இது ஒரு சதிக்கல் ஆகும்


https://youtu.be/P6Dqxyh7tOo
https://epaper.dinakaran.com/2284590/Salem-Main/14-08-2019#page/4/2
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டிலேயே அதிக நடுகற்களைக் கொண்ட மாவட்டமாகும் .நடுகல் என்பது பெரும்பாலும் வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் தான் பெரும்பாலும் அறியப்படுகிறது. போரில் உயிர்நீத்த வீரனுக்கும் ஆநிரை கவர்தல் பூசலில். வேட்டையில் இறந்தவர்களுக்கும் நடுகல் எடுப்பது வழக்கமாக தமிழ்ர்களிடையே இருந்து வந்துள்ளது. ஆனால் கோவில் பூசாரிக்காக நடுகல் எடுப்பது அபூர்வமே. அப்படிப்பட்ட இரண்டு நடுகற்கள் ஒன்று இடக்கை பழக்கமுடைய பூசாரியும் ஒன்று வலக்கை பழக்கமுள்ள பூசாரியின் நடுகல்லும் ஆய்வு செய்யப்பட்டது.
        கிருஷ்ணகிரி வரலாற்றினையும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் பண்டைய கால வாழ்வியலையும் வெளிக் கொணரும் வகையில் அரசு அருங்காட்சியகம் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு முயற்சிகளை எடுத்து வருகிறது. அருங்காட்சிய காப்பாச்சியர் கோவிந்தராஜ் , ஆய்வாளர் சுகவணமுருகன் ஆய்வுக்கு குழு தலைவர் நாராயணமூர்த்தி .வரலாற்று ஆசிரியர் ரவி ஆயியோர் தங்கள் குழுவினருடன் கல்லுகுறுக்கி ஆத்துக்கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
       
   இந்த இரண்டு நடுகற்களும் பெருமாள் கோவில்களிலே அமைக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கு து◌ாண்களின் காலமும் 250 வருடங்கள் இருக்கலாம் , இரண்டும் கோவிலின் வலதுபுறம் அமைக்கப்பட்டுள்ளன. பூசாரிகளுக்கும் நடுகல் அமைக்கப்பட்டு வரும் மரபு அக்காலத்தில் இருந்தது என்பதற்கான ஆதாரமாக இதைக் கொல்லலாம் . இது போன்ற ஒரு நடுகல் அரசு கலைக்கல்லுரியில் வரலாற்று பேராசிரியர் வெங்கடேஷ்வரன் அவர்களால் கல்லு◌ாரி காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. காலங்காலமாக நம் தமிழ் இன மக்களிடம் தொடரும்பண்பாட்டு மரபுகளில் நடுகல் வழிபாடும் ஒன்றாகும், நேற்று நடைபெற்ற விழாவில் பூசாரியின் நடுகல்லுக்கும் பூசை செய்யப்பட்டது. நடுகல் வழிபாடு இனத்தை செழிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. இந்த ஆய்வுப்பணியில் தமிழ்செல்வன். விஜயகுமார், மதிவாணன். கனேசன். பிரகாஷ் ,காவேரி , ஶ்ரீராமன் ஆகியேர் கலந்து கொண்டனர்.
 ..