தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Thursday, 22 May 2025
பஜாரி குண்டு ( ஐகுந்தம் )பாறை ஓவியங்கள் - கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்கள்
மயிலாடும் பாறையின் (ஐகுந்தம்) பழமையை நமக்கு சொல்லும் பாறைஓவியம் நமக்கும் வட இந்தியாவுக்கும் உள்ள வணிகத்தொடர்பினை மெய்பிக்கும் இன்னுமோர் ஆதாரமாக உள்ளது
https://youtu.be/5-E1fsIidIQ
பர்கூர் அருகே வெண்சாந்தால் வரையப்பட்ட
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி,ஜன.31:கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங் காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, பர்கூர் ஒன்றி யம் ஐகுந்தம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவ்வூரை சேர்ந்த சதாம், அண்ணாச்சி (எ) வெங்கடாசலபதி ஆகியோர் அளித்த தகவலின் பேரில், ராஜாமணியின் மகன் பாலச் சந்திரன் என்பவரது நிலத்தை ஒட்டி அமைந்துள்ள பஜாரி குண்டு என்ற பாறையில் வெண்சாந்தால் வரையப்பட் டுள்ள சுமார் 2 ஆயிரம் ஆண் டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை கண்டறிந்து ஆய்வு செய்தனர்.
ஓவியங்கள் குறித்துஅருங் காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த ஓவியங்கள் இரண்டுகால கட்டங்களில்வரையப்பட்டுள் ளது. முதல் காலகட்ட ஓவியங் கள் மங்கலாகவும், இரண்டாம் காலகட்ட ஓவியங்கள் தெளி வாவும் உள்ளன. முதல் கால கட்ட ஓவியங்களில் விலங்கு ஒன்றும், விலங்கு முகத்துடன் கிடை நிலையில் வரையப் பட்டுள்ள ஆண் உருவமும் உள்ளது. பாறையின் இடது பக்கத்தில் மூன்று விலங்கின் மீது மனித உருவ ஓவியங்கள் உள்ளன. இரண்டாம் கட்ட ஓவியங்களில், பாறையின் வலதுபக்கத்தில்,கேடயம்தாங் கிய பெரிய மனித உருவமும், இரண்டு பக்கத்திலும் சிறிய மனித உருவங்களும் உள்ளன. வலதுபக்கத்தில்உள்ள உருவத்தின் தலைமீது அரைவட்டம் காட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வேறு சில பாறை ஓவியங்களிலும் காணப்படு கின்றன.
இந்த ஓவியத்துக்கு மேல், வடஇந்திய முத்திரைக் காசுக ளில் காணப்படும் உஜ்ஜைனி குறியீடு வரையப்பட்டுள்ளது. உஜ்ஜைனி குறியீடு என்பது ஒருகூட்டல் குறியின் நான்கு முனைகளிலும் புள்ளியுடன்
கூடிய சிறு வட்டங்களுடன் இருப்பதாகும். இங்கு கூட் டல் குறியின் கீழ் மூன்று முனைகளை அரைவட்ட மாய் இணைத்து வரையப் பட்டுள்ளது. இக்குறியீடு தமிழகத்துக்கும், வட இந்தி யாவுக்கும் இருந்த வணிக உறவை புலப்படுத்துகிறது. அண்மையில், இதே ஊரில் கண்டறிந்து வெளிப்படுத் திய 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகக்குழு கல் வெட்டையும் இங்கு ஒப்பு நோக்க வேண்டியுள்ளது. சங்க காலம் தொடங்கி சுமார் ஆயிரம் ஆண்டுக ளாக இந்த ஊர் ஒரு முக் கிய வணிகத்தலமாக இருந் துள்ளதையே இவ்விரண்டு கண்டுபிடிப்புகளும் உணர்த் துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன் மற்றும் பாறை ஓவிய ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
https://maps.app.goo.gl/bcH1XidhP2KZFfHS7
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்
மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...

-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...
-
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இண...
No comments:
Post a Comment