Tuesday, 13 May 2025

சமணச்சிற்பம் -மாவட்டத்தின் இரண்டாவது சமணர்சிற்பம் ஊத்தங்கரைக்கு தாலுக்காவுக்கு உட்பட்ட ஆம்பள்ளி பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. காலம் 13 ஆம் நூற்றாண்டு ஆகும்.

மாவட்டத்தின் இரண்டாவது சமணர்சிற்பம் ஊத்தங்கரைக்கு தாலுக்காவுக்கு உட்பட்ட ஆம்பள்ளி பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. காலம் 13 ஆம் நூற்றாண்டு ஆகும். இதற்கு அருகே கல்வெட்டும் காணப்படுகிறது. பார்ச்சோநாதர் பார்சுவநாதர் அல்லது பார்ஸ்வ (Parshvanatha) (Pārśvanātha) or (Pārśva), மகாவீர்ருக்கு முந்தைய சமண சமயத்தின் 23ஆவது தீர்த்தங்கரர் ஆவார். இவர் கி. மு., 877-777-ஆம் ஆண்டில் வாழ்ந்த சமண சமயத் தலைவர். பகவான் பார்சுவநாதர், இச்வாகு குலத்தில், காசி நாட்டு அரசன் அஸ்வசேனா - ராணி வாமா தேவிக்கு வாரணாசியில் பிறந்தவர்.[6] முப்பது வயதில் உலக இன்பத்தை துறந்து துறவி ஆனார்.[7] பார்சுவநாதர் தொடர்ந்து 84 நாட்கள் கடும் தவம் இயற்றி ஞானம் அடைந்தார்.[8] தனது 100ஆவது அகவையில் முக்தி அடைந்தார். சமணர்களால் மிகவும் போற்றத்தக்கவராயிருந்தார் பார்சுவநாதர் இவருடைய அடையாளம் தலைக்குமேல் குடையின் கீழ் பாம்பு படம் எடுத்தவாறு இருக்கும்,இவர் நாடெங்கும் சமண சமயத்தைப் பரப்புவதில் பெரும்பங்காற்றியவர். வேத வேள்விச் சமயத்தாரின் தாக்குதல்களிலிருந்து இம்மதத்தைக் கட்டிக் காத்த பெருமையும் இவருக்கு உண்டு. நான்கு வகைக் குழுக்களாகப் பிரித்துச் சமண சமயத்தைப் பரப்பினார். ஆர்யதத்தர் என்ற துறவியின் தலைமையில் 16,000 துறவிகள், புட்பகுலர் என்ற பெண் துறவியின் தலைமையில் 38,000 குரத்திகள் (பெண் துறவியர்), சுவரதர் என்பவர் தலைமையில் 1,64,000 இல்லற ஆடவர், சுநந்தர் தலைமையில் 3,27,000 இல்லறப் பெண்டிர் ஆகிய இவர்கள் மூலம் நாடெங்கும் சமண மதம் பரவும் வழிவகைகளைப் பார்சுவநாதர் செய்தார்.
https://youtu.be/fthhcc8QbuA
இந்த பாறையின் பக்கவாட்டில் ஏர்கலப்பை சின்னம் செதுக்கப்பட்டுள்ளது. இது வணிகர்களின் குறியீடாகும்.
https://maps.app.goo.gl/ryTEf5je9XafobW59

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...