Tuesday 28 April 2020

97.விஜயநகர மன்னர் முதலாம் தேவராயனின் 1407 ஆண்டு போத்தாபுரம் கல்வெட்டு என்ன சொல்கிறது

இரண்டாம் ஹரிஹரனின் மகனான முதலாம் தேவராயனின் காலத்தில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கி.பி.1407ம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு காடைய நாயக்கர் குமாரர் வரதைய நாயக்கரும், ஒருபரி நாயக்கர் குமாரர் இம்மடி நாயக்கரும், நாட்டவரும் இணைந்து ஒரு பௌர்ணமி நாளில் பையூர் பற்று பையுர் சீமையில் உள்ள வரதசமுத்திரத்தில் ஏரிகள் உட்பட நஞ்சை, புஞ்சை நிலங்களை பிராமணர்களுக்கு பிரமதேயமாக அளித்ததை இக்கல்வெட்டு விவரிக்கிறது.

விஜயநதரர் காலத்தில் சிறப்புற்றிருந்த சோமப்ப தண்டநாயக்கர் மகன் கண்டரகூளிமாராய நாயக்கன், இருகைய நாயக்கன் மகன் பொம்மைய நாயக்கன்,  ஆரோதன் ராமநாயன் பொன்னிக் கூத்தன், பொம்மைய நாயக்கன் மகன் திம்மைய நாயக்கன் வரிசையில் இக்கல்வெட்டு வாயிலாக காடைய நாயக்கர் குமாரர் வரதைய நாயக்கரும், ஒருபரி நாயக்கர் குமாரர் இம்மடி நாயக்கரும் வரலாற்றின் வெளிச்சத்துக்கு வருகின்றனர். ஏனெனில் இவர்களுக்கும் முறையே மஹாநாலங்க ராச ராயர் ழூவராய பசவஸங்கரன் பாஷைக்கு தப்புவ நாயக்கா,; கண்டந் மற்றும் பாஸரநாரி ஸஹோதர தாநவமுராரி ஆவகத்தாற்று மண்டலீகன் தலைகொண்ட கண்டன் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதை இக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இவர்கள் பையூர் பகுதியின் முக்கிய தலைவர்களாக இருந்துள்ளனர்.

அளிக்கப்பட்ட நிலத்தின் நான்கு எல்லைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்த நிலத்தை 18 பாகங்களாகப் பிரித்து
1.கோயிலுக்கு 2 பாகமும்,
2.காஸ்யப கோத்ரத்து விநாயக பட்டர், சவரி பெருமாள் பட்டருக்கு 2 பாகம்,
3.தந கோத்ரத்து சீராமதேவர், சிங்கபெருமாளுக்கு 1 பாகம்,
4.ஹரித கோத்ரத்து விருப்பணருக்கு 1 பாகம்,
5.ஜாமதக்நி விருஷ கேத்ரத்து நரசிம்ம தேவருக்கு 2 பாகம்,
6.பாரத்வாஜ கோத்ரத்து உமாபதி தம்பிரானுக்கும் எடுத்தமுதயார்க்கும் 2 பாகம், 7.ஷடமர்ஷன கோத்ரத்து திருவேங்கடமுடையார், மண்டலபுருஷர், சீரங்கநாதர் ஆகியோருக்கு 3 பாகம்,
8.காஸ்யப கோத்ரத்து சோனாம்பர பட்டருக்கு 1 பாகம்,
9.ஜமதக்நி கோத்ரத்து திருவேங்கடமுடையாருக்கும், அபிமாருக்கும் 2 பாகம்,
10.குண்டிந கோத்ரத்து பெருமாளுக்கு 1 பாகம்,
11.பாரத்வாஜ கோத்ரத்து பஞ்சநாராயணருக்கு ½ பாகம்,

12.தக் கோத்ரத்து இளையபெருமாளுக்கு ½ பாகம்
என பிரித்து இந்த தானம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் தொடக்கத்திலும் முடிவிலும் சமஸ்கிருத ஸ்லோகங்கள் வெட்டப்பட்டுள்ளன.
ஆய்வின்போது காப்பாச்சியர் கோவிந்தராஜ்  ,  சுரேஷ், அகத்தியன், அருங்காட்சியகப் பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் உடனிருந்தனர்.
நான்கு அடிக்கு எழு அடி 65 வரிகள் கொண்ட அந்த கல்வெட்டின் ஒருபக்க தோற்றம் 





 நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076

செயலாளர் டேவிஸ்                     -9487723678

பொருளாளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது

Thursday 16 April 2020

96.சைவமும் வைணவமும் இணைந்த ஓர் அற்புதக் கலாசாரம் தட்டக்கல்லில் இருந்ததற்கான ஆதாரம் -MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

தட்டக்கல்லில் சைவமும் வைணமும் ஒற்றுமையாக இருந்ததற்கான அடையாளம் - 200 முந்தய பாறை சிற்பத் தொகுதி  வருடங்களுக்கு முன்பே வைணமும் சைவமும் ஒன்றாக இருந்ததற்கான ஆதாரம் இந்த சிற்பத் தொகுதியே ஆகும் இதில் வைணவ மற்றும் சைவ தெய்வங்கள்
 சிற்பத் தொகுதியின் மேற்கு பகுதியில் உள்ள சூரியன் செதுக்கல்
 பாறைத்தொகுப்பில் நடுவில் காணப்படும் நடனமாடும் பாறை செதுக்கல்
 நடுவே சிவனும் பார்வதியும் அமர்ந்துள்ளது போல் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
 கிழக்கு பகுதியில் முதலில் முழுமுதல் கடவுளான விநாயகர் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
 நந்தி மேற்கு பகுதியில் நந்தியும்உடுக்கையும்
ஆஞ்சனேயர் நந்திக்கு அருகே செதுக்கப்பட்டுள்ளது .
இதற்கு அருகிலேயே கூத்தாண்டவ ஈஸ்வரர் கோவில் இருப்பது குறிப்பிடத்தக்கது
எங்களால் இயன்றது .
 நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076

செயலாளர் டேவிஸ்                     -9487723678

பொருளாளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிகிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்

Friday 10 April 2020

95.அத்திமுகம் கோவில் ஐராவத ஈசுவரர் கோயில் வரலாறு பஞ்சலிங்க சன்னதி பகுதி -1 -MUSEUM &KHRDT

ஐராவத ஈசுவரர் கோயில்    கிருட்டிணகிரி மாவட்டத்தில்  சூளகிரி ஒன்றியம்  அத்திமுகம் என்ற ஊரில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
கோவில்ன் உள்ளே நுழைந்தவுடன் நமக்கு மண்டபம் போன்று காட்சியளிக்கும்  90 அடி நீண்ட பஞ்சலிங்கேஷ்வரர் கோவில் நம் கண்களுக்கு படும் 
இங்குள்ள கல்வெட்டுகளின் ஆதாரத்துடன் ஒப்பிடும் போது குறைந்தது 900 ஆண்டுகளுக்கு முந்தய கோவிலாக  கருதலாம் 
இந்த மண்டபம் கோவில் வளாகத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.
இந்த கோவில் ஐந்து  கருவறைகள் நான்கு இடைவெளிகளுடன் அமைந்துள்ளது . ஒவ்வோர் சிவலிங்கத்தின் எதிரிலும்   ஒரு நந்திதேவர்க காணப்படுகிறார். 

 சிவலிங்கம் ஒவ்வொன்றும் சதுர ஆவுடையாரை கொண்டுள்ளது.  ஐந்து லிங்கங்களும்  உருவில் வேறுபடுகின்றன . அதேப்போல் நந்திதேவர் வடிவமைப்பிலும் வேறுபாடு காணப்படுகிறது
 கோவிலின் வடிவமைப்பினை வைத்துப்பார்க்கையில் இது பிற்கால சோழர்களின் காலத்தில் கட்டப்பட்டது எனலாம்
 சைவ சமயத்தில் முழுமுதற்கடவுளான சிவபெருமானின்  முகங்கள் சிவ முகங்கள் என அழைக்கப்படுகிது.. அவை
1.சத்யோஜாதம்
பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானைக் குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன் வெண்மை நிறத்தில்,பிரம்மன் முன் தோன்றினார்.இந்த முகமே சத்யோஜாதம் ஆகும்


 2.வாமதேவம்
மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும் ,மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்மதேவனுக்கு காட்சி கொடுத்தா.இந்த முகமே பிரம்மதேவனுக்கு காட்சி கொடுத்தார்.இந்த முகமே வாமதேவம் ஆகும்.

3.தத்புருஷம்

அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசை நோக்கி சிவனை குறித்து தவம் செய்தார். இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார்.இறைவனின் இந்த முகமே தத்புருஷம் ஆகும்.பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார் .காயத்ரீயை வணங்கி வருபவருக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்





4.அகோரம்
பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் முக்கண் கொண்டவராக நெருப்பினையும்,வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார். இறைவனின் இந்த முகம் அகோரம் என்று பெயர் பெற்றது.

5.ஈசானனம்
கடைசியாக பிரம்ம தேவன் ஆகயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.இறைவன் சாம்பல் வண்ணத்தில் முக்கண் கொண்ட ,இளமதியை சென்னியில் சூ டியவாரும்,கோரைப்பற்கள் கொண்ட உருவமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார்.இறைவனின் இந்த முகமே ஈசானனம் எனப்படும்





ஊர் மக்களால் மற்றொரு கருத்து சொல்லப்படுகிறது. இங்குள்ள பஞ்சலிங்க சன்னதி இதை வழிபட்டால்   காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் (நிலம்), திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் (நீர்), திருவண்ணாமலை அண்ணாமலையார் (நெருப்பு), காளஹஸ்தி காளத்தீஸ்வரர் (காற்று), சிதம்பரம் நடராஜர் (ஆகாயம்) அகிய கோவில்களுக்கு சென்று வழிபட்டதாக கருதப்படும் என்றார்கள் அதுவும் ஏற்க தக்கதே 
 கோவிலில் இருந்த ஒரு நந்தி காணாமல் போய்உள்ளதாக தெரிவித்தனர் . முன்மன்டப நீண்ட தோற்றம் 











அத்திமுகம் ஊர், கிருட்டிணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒசூருக்கு முன்னால் குறுக்கே செல்லும் பேரண்டப்பள்ளி-பாகலூர் சாலையில், பாகலூரை நோக்கி 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒசூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

கோயில்களின் வரலாற்றினை பதிவிட நண்பர் பி.டி.ஒ. அலுவலகத்தின் நாகராஜ் கேட்டுக் கொண்டார் ,அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .அத்திமுகத்தில் எங்களுக்கு பேருதவியாய் இருந்தவர் புருஷோத்தமன் அவர்கள் அவருக்கும் நன்றி .அத்திமுகம் கோவில் பற்றிய ஒரு புத்தகம் வெளியிட அச்சிட்டு தயாராக வைத்திருக்கும் அண்ணன் சுவவணமுருகன் அவர்களுக்கும் நன்றி
எங்களால் இயன்றது .
 நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076
செயலாளர் டேவிஸ்                     -9487723678
பொருளாளர் விஜயகுமார்      --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் 
பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு                              தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க   வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு  கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,   கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி     கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி 
அறக்கட்டளை நடத்துவதாகும்