Friday, 23 May 2025

அருள் மிகு ஶ்ரீ மகா வீரகரர் சுவாமி கோயில் - நடுகல் கோவில் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு - குடிமேனள்ளி - கோவிலின் உள்ள உள்ள நடுகல் போலவே கோவிலின் கோபுரத்திலும் சிறப்புற செய்துள்ளனர்.5

இவன் குடிமேனள்ளி தலைவனாக இருக்க கூடும். இவன் பூசலில் இறந்த காரணத்தால் இவனின் வீரத்தை போற்றும் வகையில் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. தலைவன் என்பதை குறிக்கும் வகையில். ஒருவன் பட்டம் பிடிக்கிறான் (குடை), ஒருவன் குதிரையின் கடிவாளத்தை பிடித்துள்ளான். தலைவன் இறந்த பின் உயிர் வாழ மனமில்லாத இரண்டு மனைவியரும் உடன்கடை ஏறி இறக்கின்றனர்.
கோயிலின் உள் உள்ளதை அப்படியே சிறிதும் மாறாமல் வெளிக்காட்டும் கோபுரம். நடுகல் வழிபாடு என்பது சங்ககாலத்திலேயே இருந்து வருகிறது . தற்காலத்தில் நடுகல்லுக்கு கோவில் கட்டும் வழக்கமும் நடுகல்லில் உள்ளது போலவே கோயில் வெளியிலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு காவேரிப்பட்டிணம் , குடிமேனள்ளி கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
https://youtu.be/mYyvw56OtYs
பூசலில் இறந்த வீரனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறக்கிறாள். இது ஒரு சதிக்கல் வகையாகும்.
கோயிலின் வெளியே இருக்கும் நடுகல்.
கோயிலின் அருகே பெருமாள் அவர்களின் நிலத்தில் உள்ள நடுகற்கள்.#குடிமேனஹள்ளி பெருமாள் குடும்ப வழிபாட்டில் நடுகற்கள் உறுதிபடுததுகின்றது. நாட்டை காக்க உயிர் நீத்த 400 ஆண்டுகளுக்கு முந்தய வீரர்களின் நடுகற்கள்
https://youtu.be/7aHCesHu83k
செய்தி - 300 வருடங்களுக்கு முந்தைய ஊர்தலைவன் நடுகல் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சி யகமும், கிருஷ்ணகிரி வரலாறு ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும், காவேரிப்பட்டணம் அடுத்த அக ரம் அருகே உள்ள குடிமேனஹள்ளி பகுதியில், கள ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது 300 வருடங்களுக்கு முந்தைய ஊர்தலைவன் நடுகல்லை அவர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து மாவட்ட அரசு அருங்காட் சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இங்குள்ள வீரக்காரர் கோயிலில், 2 நடுகற்களை வைத்து வழிபட்டு வரு வது தெரியவந்தது. இந்த இரண்டு நடுகற்களில் ஒரு நடுகல், குடிமேன ஹள்ளி பகுதியைச்சேர்ந்த, ஒரு ஊர் தலைவனுடையது என்பது தெரிய வந்தது. இவை 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இங்கு நடைபெற்ற பூச லில், ஊரைக் காக்க இவன் கொல்லப் பட்டதால் இவனுக்கு நடுகல் எடுக் கப்பட்டுள்ளது. அவன் தலைவன் என்பதை குறிக்கும் வகையில், அவன் குதிரை மீது அமர்ந்திருக்கிறான். அவன் கையில் 2 வாள்கள் உள்ளன. அவன் இறந்தபோது அவனுடன் உடன்கட்டை ஏறிய அவனுடைய இரண்டு மனைவியரும், அந்த நடுக லில் காட்டப்பட்டுள்ளனர். அந்த குதிரையை வழிநடத்தி செல்லும் சேவகனும் காட்டப்பட்டுள்ளான். அதே போல், அவன் தலைவன் என் பதை குறிக்கும் வகையில், ஒருவன் அதற்குரிய கண்ணாடி சின்னத்தை எடுத்து வருகிறார். இந்த நடுகல் லானது கோயிலின் கருவறையில் வைத்து வணங்கப்படுகிறது. இந்த நடுகல்லில் உள்ள சிற்ப அமைப்பு. அப்படியே கோயிலின் மேற்பகுதியி லும் சிமெண்ட்டால் அமைக்கப்பட் உடன்கட்டை ஏறிய 2 மனைவிகள் காட்சிபடுத்தல் டுள்ளது சிறப்பாகும். இக்கோயில் விழாக்களின் போது, 5 பானைகள் எடுத்து வரப்படு கின்றன. அவை குடிமேன அள்ளி, நாகரசம்பட்டி, மல்லிக்கல், கொண் ரம்பட்டி, கொங்கரப்பட்டியைச் சேர்ந்தவையாகும். கரகம் நாகரசம் பட்டியில் இருந்தும், பூசைக்கூடை குடி மேன அள்ளியில் இருந்தும், மற்றொரு கரகம் ஆற்றங்கரையோ ரம் பாக்காத்தியம்மா கோயிலில் இருந்தும் எடுத்து வரப்படுகிறது. 5 வருடங்களுக்கு ஒருமுறை விழா சிறப்பாக கொண்டாடப்படுவதாக தர்மகர்த்தா பொன்னுசாமி தெரி வித்தார். இந்த ஊரில் பெருமாள் என்பவரது நிலத்திலும், 400 ஆண்டு களுக்கு முற்பட்ட மூன்று வீரர்கள் உடைய நடுகல் காணப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த கள ஆய்வின் போது, குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, சதானந்தகிருஷ்ணகுமார், பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், கோவில் தர்மகர்த்தா பொன்னுசாமி மற்றும் பூசாரி ஆகியோர் உடனிருந்த னர்.
தமிழர்களின் முதல் வழிபாடு வீரத்தை போற்றுதல் குடிமேனள்ளி கிராமத்தில் அருள் மிகு ஶ்ரீ மகா வீரகரர் சுவாமி கோயில் இன்றும் வழிபாட்டில் 87 கிராமங்களைச் சேர்ந்த கிராமபங்காளிகள் ஒன்று சேர்ந்து அவர்களின் குலதெய்வத்தை வழிபடுகின்றனர். வாழ்க வீரத்தை போற்றும் குடிமேனள்ளி மக்கள்
https://maps.app.goo.gl/uUVosBpbRupzFNHr6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு https://maps.app.goo.gl/uUVosBpbRupzFNHr6

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...