தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 17 May 2025
மாவட்டத்தின் பெரிய கல் செக்கு - சி.ஆர் பாளையம் - குப்பட்டி
விதைகளை அழுத்தி எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்தவன். பின்னர் செக்கு பயன்படுத்தி விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு தொழில்நுட்பத்தை கண்டறிந்த பின் அதன் தயாரிப்பும் பயன்பாடும் அதியமானது. இதுவும் ஒரு தொழிற்புரச்சியே ஆகும். முதலில் மனிதர்களின் பலம் பயன்படுத்தப்பட்டது. பின்னர் மாடுகள் இழுக்கும் செக்கானது கல்லால் செய்யப்பட்டு எளிய முறையில் எண்ணெய் எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. செக்கை கண்டுபிடித்த காலம் சரியாக தெரியவில்லை, ஆனாலும் 8ம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளதால் அதை ஆதாரமாக கொள்வோம். தோராயமாக 1200 ஆண்டுகளுக்கு முன்பே கல் செக்கு பயன்பாட்டில் இருந்துள்ளது. கல்செக்கின் உலக்கை பயன்படுத்த எளிதாக இருக்கும் வகையில் மரத்தால் செய்யப்பட்டன அதுவும் உறுதியான, சூட்டை தாங்கி கொள்வதுமான வாகை மரத்தால் செய்யப்பட்டன. மாடுகள் செக்கு இழுப்பதால் கல்செக்கு விழுந்திடாவண்ணம் நிலத்தின் மேல் உள்ள உயரத்தைப்போல் நிலத்தின் கீழ் பக்கம் இரண்டு மடங்கு மண்ணில் புதைந்து இருக்கும். நமது மாவட்டத்தில் பெரிய செக்கு சி.ஆர். பாளையத்தில் கண்டோம். விட்டம் 4 அடி .
எண்ணெய் வித்துகளை எண்ணையாக்கும் அந்த கால கல் உரல் . நமது மாவட்டத்தின் பெரிய கல் செக்கு (உரல்) தளி சி.ஆர் பாளையம் -குப்பாட்டி
https://youtu.be/4q45MqYZ3bQ
https://maps.app.goo.gl/q2whQPahv4uPVYqZ6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்
மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...

-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...
-
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இண...
No comments:
Post a Comment