Wednesday 6 October 2021

தமிழகத்தின் முக்கியமான வணிகக்கல் வெட்டா இது - ஐகுந்தம் கல்வெட்டு வாசகம்

 











1. ஸ்வஸ்திஸ்ரீ சம

2. ஸ்த பு(வ)ன விக்யாத வீர

3. .ர வீரஸாஸன அனேக கு

4. ன கனாலம்க்ரித ஸ்த்ய ஸே

5. ஸா ஸாரி ஸாரித்ரய ஸமை

6. சம்புன்ன வளஞ்சிய ஸ்ரீ

7. மர்ஹதாரி மக்களாகிய எ

8. யிநாட்டு திருப்பெறு மாடப்ப

9. ள்ளித்தளத்தைஞூற்றுவரோம் அ

10. ய்ங்குன்றத்து அய்கமநான மும்

11முறி தன்மசெட்டிக்கு வீரதாவள

12. மாக வைத்தபடி இவன் இருந்த ஊ

13. ரில் நமக்கள் வீரபெருநிரவிமா

14. ரும் நாட்டு செட்டிகளும் வந்தவன

15. றுமெய் கண்டு சோறு உண்பதாக

16. வும் பணமென்றும் பாவாடை

17. கொங்கவாரெழுநூறும் கண்டழி

18. மூலபத்திரரும் ஐய்யன்பொய்

19. களமடக்கி கீழ் மேற் காக்கை

பின்பக்கம்

20. நாநாதேசியும்

21. கொற்றக்குடைப் படை முன்

22. நூறும்

23. யென்றும் கொள்ளப்பெறு

24. தார்களாகவும் இப்பரிசல்ல

25. து செய்வார்கெங்கை இடை

26. குமரியிடைப்பட மாப்ப

27. ட்ட பாவத்தில் படுவார் இவ

28. ந் சிறிய தம்பபநு தமைய

29. நும் தொறுமீட்டுப்பட்ட

30. நன்மைகண்டு வைத்

31. தோம் இவன் பரியுடைமை

32. கண்டு வைத்தோம் தி

33 ருப்பெறுமாடப்பள்ளித் தளதை

34. ஞூற்றுவரோம் பதிலழிவாந்

35. நமில் வே.

36. ருவந்

37. ந்

38. பழவரி இவீர

39.நும் அப்பி

40. த்தம்பலமும்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிகக்குழு கல்வெட்டு கண்டுபிடிப்பு


கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து இப்பகுதியின் பல்வேறு வரலாற்றுத் தடயங்களை கண்டறிந்து வெளிப்படுத்திவருகிறது. இவ்வகையில் அண்மையில் ஐகுந்தம் சதாம் என்பவர் அளித்த தகவலின்பேரில் அவ்வூரில் உள்ள தனியார் கொல்லையில் கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்டுவரும் கல்வெட்டினை ஆய்வு செய்தனர்.

இக்கல்வெட்டு குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ்  கூறும்போது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைத்துள்ள முதலாவது முழு வணிகக்குழு கல்வெட்டு இதுவாகும். 7 அடிக்கு 4 அடி அளவுள்ள கற்பலகையின் இரண்டு பக்கமும் கோடுகள் வரைந்து அதனுள் எழுத்துக்களை 40 வரிகளில் அழகாக வெட்டியுள்ளனர். 12ம் நூற்றாண்டின் எழுத்தமைதியைக் கொண்ட கல்வெட்டின் முடிவில் சாமரம், பூர்ணகும்பம், குத்துவிளக்கு, பசுவும் கன்றும் ஆகிய உருவங்களை செதுக்கியுள்ளனர்.

வணிகக்குழுவினரின் ஒரு  பிரிவினரான வளஞ்சியரின் வடமொழி மெய்கீர்த்தியோடு கல்வெட்டு தொடங்குகிறது. திருப்பெறு மாடப்பளித் தளத்தைச் சேர்ந்த ஐநூற்றுவர் என்னும் வணிகக் குழுவினர் அய்ங்குன்றத்து  மும்முரி தன்மசெட்டி என்பவன் பெயரில் வீரதாவளத்தை உருவாக்குகின்றனர். வீரதாவளம் என்பது வணிகர்களைக் காக்கும் படைவீரர்கள் தங்கும் இடமாகும். பெருநிரவியார், நாட்டு செட்டிகள், கொங்கவார் எழுநூறு, கண்டழி, மூலபத்திரர், ஐம்பொழில், களமடக்கி, கீழ்மேற்காக்கை, நானாதேசி ஆகிய வணிகக் குழுக்கள் குறிப்பிடப்படுகின்றனர். அரசர்கள் வைத்துக்கொள்ளும் கொற்றக்கொடை, முன்னூறு படைவீரர்கள் ஆகியவற்றை இவர்கள் என்றும் வைத்துக்கொள்ள உரிமைப் பெற்றவர்கள். 

கவர்ந்து சென்ற கால்நடைகளை மீட்கும்போரில் தன்மசெட்டி, சிறியதம்பப்பன் மற்றும் இவனது தமையனும்  இறந்துவிட்டனர். இவர்களது உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில் இவ்வீரதாவளம் திருப்பெறு மாடப்பள்ளித் தளத்து ஐநூற்றுவர் என்ற வணிகக் குழுவினரால் உருவாக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் வாயிலாக ஐகுந்தம் என தற்போது அழைக்கப்படும் ஊர் அய்ங்குன்றம் என அழைக்கபட்டது என அறிகிறோம். மேலும் இது வணிகர்கள் பயணம் மேற்கொள்ளும் பண்டைய பெருவழியில் அமைந்துள்ளது என்பதையும் அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் வணிகர்களின் தங்கும் இடமாகவும் இருந்துள்ளதையும் அறிகிறோம். அவ்வாறு தங்கியிருப்போரின் செல்வத்தை காக்கும் போர் வீரர்களும் உடன் தங்கியிருந்தனர். அவ்வாறு தங்கியிருக்கும்போது அவர்களின் கால்நடைகளை கள்வர்கள் கவர்ந்து சென்றுவிட அதனை மீட்கும் போரில் வீரர்களில் சிலர் இறந்துவிட அவர்களது நினைவாக வீரர்கள் தங்கும் இடத்தை இவ்வணிகக் குழுவினர் உருவாக்கியுள்ள செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. தமிழக வணிகக்குழுக் கல்வெட்டுக்களில் அய்குந்தம் வணிகக்குழுக் கல்வெட்டு சிறப்பிடம் பெறும் ஒன்றாக உள்ளது எனத் தெரிவித்தார். இது இம்மாவட்டத்துக்கு கிடைத்த மற்றுமொரு சிறப்பாகும்.

தருமபுரி அகழ்வைப்பக தொல்லியல் அலுவலர் பரந்தாமன், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார் மற்றும்...ஆகியோர் இக்கள ஆய்வின்போது உடனிருந்தனர்.      

300 படைவீரர்கள் அந்த  வணிகர்களுக்குபாதுகாப்பாக இருந்தனர். அவர்கள் தங்க இடம் உணவு…………. – இப்படி பட்ட ஒரு கல்வெட்டு ஐகுந்தம் சதாம்உசேன், அண்ணாச்சி ஆகியோரால்  கண்டறியப்பட்டு படிக்கப்பட்டது.

https://youtu.be/oJvE7mwvTmo

 

1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடம் கிருஷ்ணகிரிகல்வெட்டு ஆதாரத்துடன்

https://youtu.be/eM2ttghCXdM


Thursday 26 August 2021

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதல் உரல் கல்வெட்டு

 





கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல் உரல் கல்வெட்டு

 

 

உலகத்தில் இருந்து ராயகோட்டை செல்லும் வழியில் 3 கிமி தொலைவில்   இலகம்பதி என்ற இடம் உள்ளது அந்த இடத்தில் பழைமையான கோவில் இருப்பதாக கூறினார்கள் அவ்விடத்தை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வு செய்தது ஆய்வின் போது அந்த கோவில் மண்மேடாகத்தான் காட்சியளித்தது  500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என்பதை அருங்காப்பாச்சியர் கூறினார். அந்த இடந்தினை ஆய்வு செய்த போது பூதேவி சிலை ஒன்று பாதி மண்ணில் புதைந்திருந்தது இந்த சிலை 500 வருடங்கள் பழைமையானது இது இந்த கோவிலுக்கு சொந்தமானதாக இருக்கும் என கூறினார் .சரவணக்குமார் அவர்கள் உரலில் ஓர் கல்வெட்டு இருப்பதை கண்டறிந்தார். கோவிந்தராஜ் அவர்கள் கூறும் போது உடனே அந்த இடத்தினை சுத்தம் செய்து அந்த கல்வெட்டு படிஎடுக்கப்பட்டு தற்போது போல அக்காலத்தில் எண்ணை ஆட்ட இயந்திரங்கள் கிடையாது இதுபோன்ற உரல் செக்கில் மாடுகட்டியே எண்ணை எடுத்தார்கள். இந்த உரலின் கிழக்குபக்கத்தில் 8 வரிகளை கொண்ட தமிழ்கல்வெட்டு ஆகும் .இது 250 முதல் 300 ஆண்டுகள் பழைமையானதாகும் .இந்த செக்கு உரலை பார்த்திப வருசத்தில ஆடி மாதம் முன்றாம் தேதி இலம்பாதன் என்பவருக்காக உரல் செய்து தானமாக அளித்த செய்தியை கூறுகிறது இந்த பகுதி இன்றும் இக்கம்பதி என்று அழைக்கப்படுவதாக ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர் இது இந்த ஆய்வில் சதாநந்தகிருஷ்ணகுமார் , சரவணகுமார், தமிழ்செல்வன் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

 










Sunday 22 August 2021

ஊரும் பேரும் -கிருஷ்ணகிரி மாவட்டம்

 


 பெயரிலேயே அழகினை கொண்ட ஊர் நமது சிங்காரப்பேட்டை ஆனால் அந்த பெயர் எப்படி வந்தது என ஆராயும் போது கிடைத்த தகவல் ஒரு தலைவனின் பெயராலே இந்த ஊர் அழைக்கப்பட்டு இப்படி அழகான பெயரான சிங்காப்பேட்டை என மாறி இருக்கிறது.

https://youtu.be/eKmcUfsk0nk

 

இயல்பான செயல்களும் சினைப்பெயர்கள் போல - காரணம் கருதி வழங்கி வருகின்ற பெயர்களுல் ஒன்று 620 வருடங்கள் பழமையான செறியன்பள்ளி என்ற குரியனப்பள்ளி கல்வெட்டு ஆதாரத்துடன். தேவர்குந்தாணி கோவில் திருவிழாக்களில் வரிசை எடுக்கும் உரிமையும் திருக்கல்யாணத்திற்கு கங்கணம் கட்டிக் கொள்ளும் உரிமையும் இந்த ஊரார் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

https://youtu.be/vTmrNsbzZ50

 

ஊரும் பேரும் – தோற்றத்தினை வைத்து அந்த ஊரின் பெயர் அமைந்திருந்தாலும் 700 ஆண்டுகளுக்கு முந்தய புகழ்பெற்ற வரதராசர் ஆலையமும்,,. பழைமையான சிவன் கோவிலும் பாளையக்காரர்கள் வரலாறும் கொண்டது தான் #சூளகிரி – சூலகிரி என்பதே சூளகிரி என அழைக்கப்படுகிறது.

https://youtu.be/9AiFUJzLCDE

 

 

17. காப்பாச்சியரின் ஆய்வுக்கு பின் #பந்திகுறி  833 ஆண்டுகள் பழமையான #பன்றிகுறுக்கி  என்பதும் இந்த கல்வெட்டு குந்தாணி கோவிலுக்கு தானம் கொடுத்ததை குறிப்பதும் பழமையான உருக்காலை , நடுகற்களும் அந்த ஊரின் வரலாற்று செய்திகளை நமக்கு சொல்கின்றன.

 https://youtu.be/7k0ykQYQF3w

 

16. ஊரும் பேரும் – தோற்றத்தினை வைத்து அந்த ஊரின் பெயர் அமைந்திருந்தாலும் 700 ஆண்டுகளுக்கு முந்தய புகழ்பெற்ற வரதராசர் ஆலையமும்,,. பழைமையான சிவன் கோவிலும் பாளையக்காரர்கள் வரலாறும் கொண்டது தான் #சூளகிரி – சூலகிரி என்பதே சூளகிரி என அழைக்கப்படுகிறது.

https://youtu.be/9AiFUJzLCDE

 

 

15. #ஐகுந்தம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் கூடி வாழ்ந்த இடம் என்பதற்கு ஆதாரம் இருந்தாலும் .ஐகுந்தாம் 950 ஆண்டுகளுக்கு முன்பே #ஐங்குன்றம் என்ற ஊராக #குலோத்துங்கசோழன் காலத்தில் இருந்ததற்கான ஆதாரமாக கல்வெட்டு உள்ளது . சிறிய உராக இருந்தாலும் பழைமையான ஓர் ஊர் தான் ஐகுந்தம் – #ஊரும்பேரும்

https://youtu.be/EKIBU2S2nC8

14. சில நேரங்களில் ஊர்களின் பெயர்கள் அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு அமைவதுண்டு அந்த வகையில் வேப்பனப்பள்ளி செவ்வாய் சந்தையும் அவ்வகையில் பெயர் அமைந்த ஊர் தான்

https://youtu.be/CPO92X-WWW0

 

13. ஊரின் பெயரை அறிந்து கொள்ள காலங்காலமாக சொல்லப்பட்டுப் வரும்  #செவிவழிக்கதைகள் பெரிதும் உதவுகின்றன . வீடுகட்ட பொது உண்டியல் வைத்து இந்த ஊர் வந்துள்ளது  இந்த ஊர் ஒற்றுமைகாகான அடையாளமாக இருந்துள்ளது இனியும்  இருக்கும் 

https://youtu.be/SZpI3GUj8WI

 

1.அஞ்செட்டி கி.பி -1040 ஆம் ஆண்டிலேயே இருந்துள்ளது அதை முதலாம் இராஜேந்திர சோழனின் காலத்திய கல்வெட்டு இவ்வூரை அஞ்சிட்டம் என குறிப்பிடுகிறது. 981 ஆண்டுகள் பழமையாது https://youtu.be/yILaBkWZLwM

 2 . ஊரும் பேரும் - போச்சம்பள்ளி செவிவழி கதைகள் சிலநேரங்களில் உண்மையாகி போகின்றனது. போச்சையன் என்பவர் இந்த பகுதியை ஆண்டு வந்ததாகவும் அவரின் நினைவாகவே இது போச்சம்பள்ளி என்று அழைக்கப்படுகிறது என்ற செவிவழிகதை கல்வெட்டுகளால் நிஜமாகிப்போனது. 1243ல் போச்சையன்பள்ளி இப்போது போச்சம்பள்ளி உண்மையா ?

https://youtu.be/_xVW8GtSqx4

3. 646 ஆண்டுகளுக்கு முன்பே விஜயநகர மன்னன் வீரபுக்கண்ணன் காலத்திலேயே இருந்த ஊர் வேப்பனப்பள்ளி அதற்கு முன்பே கூட இருந்திருக்கலாம் ஆனால் நாம் சரியான ஆதாரத்திலிருந்தே கூறுகிறோம்

https://youtu.be/fxl4X7dTVy8

4. 798 ஆண்டுபழமையான ஆம்பள்ளி அப்போது ஆழ்வான் பள்ளியா ?

https://youtu.be/7AH6BwI4Uvw

5. ஊரும் பேரும்- பேருஹள்ளிக்கும் வேலுக்கும் என்ன தொடர்பு - 756 ஆண்டு பழமையானதா வேற்பள்ளி -ஆதாரத்துடன்

https://youtu.be/UyuZv5EwOI4

6. ஊரும் பேரும் - கனகமுட்லு (கலக்முட்டல்) - 400 ஆண்டுக்குமுன் கல்வெட்டு ஆதாரத்துடன் https://youtu.be/BU0NswwRdT8

7..ஊரும் பேரும் - தாசரிப்பள்ளி (தாசம்பட்டி) - 200 ஆண்டுக்குமுன் கல்வெட்டு ஆதாரத்துடன் https://youtu.be/76SIeuRBtPE

8. ஊரும் பேரும் - குன்னத்தூரின் பழம்பெயர் குன்றத்தூர் - இலக்கிய & கல்வெட்டு

https://youtu.be/A-akcxkAEdA

9. ஊரும் பேரும் - மல்லப்பாடியின் பழம்பெயர் மலைப்பாடி - இலக்கிய & கல்வெட்டு ஆதாரத்துடன் https://youtu.be/tWA0GmGOoXo

10.  ஊரும் பேரும் - நம்ம நெடுங்கல் - மாறாத மாற்ற முடியாத ஓரு பெயருக்கு சொந்தகாரர்கள் https://youtu.be/7xsD3fN2b-c

11.அழகான தமிழ்பெயர் செப்பு முற்றல் – ஆதாரம் கிடைக்காததால் நாம் தெலுங்கோடு தொடர்புபடுத்தி (சாப்ப- மீன் )சாப்பமுட்லு என அழைத்து வந்தோம் ஆனால் 600 ஆண்டுகளுக்கு முன் சாப்பமுட்லு செப்பு முற்றல் என அழைக்கப்பட்டது

 https://youtu.be/cJgwfOqoSaI