Monday, 12 May 2025

சென்னானூர் நடுகல் - ஈட்டி வீரன்.

இந்த நடுகல் சென்னானூர் அகழ்வாய்வு இடத்திற்கு மேற்கு பக்கம் மாந்தோப்பில் பனை மரங்களுக்கு இடையே புதைந்துள்ளது. அதை சுத்தம் செய்து புகைப்படம் எடுத்தோம். ஒரு கையில் கேடையமும் வைத்து அதன் பிடியை பிடித்திருப்பது தெளிவாக காட்டப்பட்டுள்ளது. ஒரு கையில் ஈட்டியை எடுத்துக் கொண்டு வேகமாக போர்களத்தில் ஓடும் நிலையில் காட்டப்பட்டுள்ளான். இது 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இந்த ஈட்டி வீரன் போரில் ஈடுபட்டு இறந்ததன் நினைவாக அவன் வீரத்தை போற்றும் விதமாக அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. சென்னனூர் அலங்கார கேடயத்துடன் ஈட்டி வீரன் நடுகல்
https://youtu.be/0WEVRVQD3Do
https://maps.app.goo.gl/6bmnw8WKWRA7GXbR7

No comments:

Post a Comment