Saturday, 10 May 2025

பிருந்தாவனம் - பொம்மசமுத்திரம்- சப்பாணிப்பட்டி

பிருந்தாவனம் என்பது ஒன்பது மத்வத் துறவிகளின் சமாதிகள் அமைந்துள்ள ஒரு புனிதத் தலமாகும். இது மத்வ வழி வந்தவர்களின் ஜீவ சமாதியாகும். உங்களுக்கு புரியவேண்டுமானால் ஶ்ரீராகவேந்திர் பிருந்தாவனம் மிகப்பெரிய வழிபாட்டு தலமாக இருப்பதை கொண்டு அறிந்து கொள்ளலாம். அது போலத்தான் பொம்மசமுத்திரம் பிருந்தாவனமும் இன்று வரை வழிபாட்டில் உள்ளது . இதன் காலம் 250-300 வரை இருக்கலாம் .
பல இடங்களில் மிருத்திகா பிருந்தாவனங்கள் அமைக்கப்படுகின்றன. மிருத்திகா இந்த சொல் புனித பூமி அல்லது மண்ணைக் குறிக்கிறது, இது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலிருந்து சேகரிக்கப்படுகிறது. பிருந்தாவனம் இது ஒரு கல்லறை அல்லது சன்னதியைக் குறிக்கிறது, குறிப்பாக இந்து துறவிகள் மற்றும் குருக்களின் சூழலில். குருவின் ஆன்மா பிருந்தாவனத்திற்குள் தொடர்ந்து வாழ்கிறது என்று நம்பப்படுகிறது. அந்த இடத்தில் இருந்து மண் எடுத்து வந்து மிருத்திகா பிருந்தாவனங்கள் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மிருத்திகா பிருந்தாவனங்கள் குருவின் ஆன்மீக சக்தியும் ஆசீர்வாதங்களும் தீவிரமாக இருக்கும் இடங்கள் என்று நம்பப்படுவதால் அவை மிகவும் முக்கியமானவயாக கருத்ப்பட்டு வழிபாபாடு செய்யப்பட்டு வருகிறது.
கோவிலையும் வழிபாடடு முறையையும் அறிந்து கொள்ள வீடியோவை பாருங்கள் பிருந்தாவனத்ததை பெருமாளின் வடிவமாக வழிபடுகிறார்கள் -பொம்மசமுத்திர மக்கள் - கிராம மக்களின் இஷ்ட தெய்வமான மறி அவர்களின் வழிபாட்டுக்குள் வந்துவிட்டன. 35 ஆண்டுகளாக அங்கு பூசாரியாக இருக்கும் கமலநாதன்
https://youtu.be/mZV49nzd4XM
https://maps.app.goo.gl/Dy1GSQ2Q1xiCEhaC6

No comments:

Post a Comment