Saturday, 10 May 2025

கருத்தமாரம்பட்டி -சாவடிகாவி - பாறை ஓவியங்கள் - கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்கள்

எழுத்தே அறியாத போது மனிதன் தன் எண்ணங்களை வண்ணங்களால் தீட்டிவைத்தான். அவை வெண்சாந்து,செஞ்சாந்து,கருஞ்சாந்து, போன்ற வண்ணங்களை அவன் பயன்படுத்தினான். செஞ்சாந்து ஓவியங்கள் காலத்தால் முற்பட்டவை இவை 4500 ஆண்டுகள் பழமையானவையாக கருதப்படுகின்றன. வெண்சாந்து ஓவியங்கள் 2000 ஆண்டுகளில் இருந்து வரலாற்று காலம் வரை வரையப்பட்டு இருக்கின்றன. தமிழகத்திலேயே பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அதிகம் .அதில் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் உள்ள கருத்தமாரம்பட்டி என்ற ஊரின் மலை அடிவாரத்தில் உள்ள சாவடிகவி இங்கு 100 பேர் வரை தாராளமாக தங்கலாம் அங்கே வரையப்பட்டுள்ள ஓவியங்களை பார்க்கலாம் . இரண்டு குதிரையின் மீது அமர்ந்துள்ள மனிதன் உருவ காட்சி சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.
சாவடி கவியின் அழகிய தோற்றம்.
மாவட்டத்திலேயே எங்கும் காணப்படாத வகையில் இங்கு குதிரையின் மீது அமர்ந்துள்ள மனிதன் உருவம் , - சிந்துவெளி குறியீடும் - காணப்படும் கருத்தமாரம்பட்டி சாவடி கவி பாறைஓவியம் -கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்கள் . #கிருஷ்ணகிரிமாவட்டம் #கிருஷ்ணகிரி #khrdt #history #musiem #அரசுஅருங்காட்சியகம் #தொல்லியல்துறை #பள்ளிக்கல்வித்துறை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுமற்றும் ஆவணப்படுததும் குழு https://youtu.be/HsrR-vHj86c
கருஞ்சாந்து ஓவியம்
கருத்தமாரம்பட்டி சவடிகவி பாறை ஓவியங்கள் -கிருஷ்ணகிரி மாவட்ட பாறைஒவியங்கள் https://youtu.be/Trw8Sf6cwrE
https://maps.app.goo.gl/LKvuBiWb4XjtdgiF7

No comments:

Post a Comment