Monday, 12 May 2025

கிருஷ்ணகிரியின் முதல் நூலகம் -Krishnagiri's first library பரவேசுதேவஐயர் தொடங்கிய கிருஷ்ணகிரியின் படிக்கும் அறை 1907

நூலகம் மனிதனின் அறிவை விரிவரைடய செய்யும். புத்தகங்கள் விலை அதிகமாக இருந்த அந்த காலத்தில் நம் மாவட்ட மக்கள் அறிவு பெறவேண்டும் நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்ள வேண்டும் என தன் சொந்த செலவில் கட்டிடம் கட்டி நூல்கள் பல வாங்கிவைத்து நூலகம் தொடங்கியது பாரட்டத்தக்கது என்றால் மிகையாகாது அவர் இல்லாவிடினும் அவருடைய நினைவாக அந்த கட்டிடம் அவரைப் போலவே கம்பீரமாக div class="separator" style="clear: both;">
https://youtu.be/xIwrXcA6aLQ
இவர் தான் பரவாசு தேவய்யர். கிருஷ்ணகிரியில் 7.1.1907 அன்று கிருஷ்ணகிரி பொது மக்களுக்காக The Reading Room Krishngiri 7 jan 1907 கிருஷ்ணகிரியின் படிக்கும் அறை -(நூலகம்)
தற்போது இந்த கட்டிடம் தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் அலுவலகம் வைக்கப்பட்டு இருந்தாலும் அவருடைய படம் அனைத்து அறைகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பரவாசுதேவய்யர் கப்பலேட்டிய தமிழன் ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய கப்பல் நிறுவன பங்குதாரர்களில் இவரும் ஒருவர் என்பதும் கூடுதல் தகவல் எழைகளுக்கு இலவசமாக வாதாடும் வழக்கறிஞராக இருந்த வ.உ.சி., சொந்தக் கப்பல் ஒன்றை வாங்கி அதை ஆங்கிலேயனுக்கு எதிராக சிம்மசொப்பனமாக்க நினைத்தார். விளைவு, உருவானது சுதேசி நாவாய் சங்கம்! 1906 அக்டோபர் 16-ம் நாள் பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு போட்டியாக, `சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் (Swadeshi Steam Navigation Company(SSNC))' எனும் முதல் இந்திய கப்பல் கம்பெனியை உருவாக்கினார், தமிழன் வ.உ.சி. அவருக்கு உறுதுணையாக, வள்ளல் பாண்டித்துரை, சேலம் விஜயராகவாச்சாரி, ஹாஜி.பக்கீர் முகம்மது என பலரும் பொருளுதவி தந்து உதவினர். அவர்களையெல்லாம் பங்குதாரர்களாக, நிறுவனத்தின் பொறுப்பாளர்களாக நியமித்துக்கொண்டார் வ.உ.சி. அப்போதே சுமார் 10 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், 40 ஆயிரம் பங்குகளைக்கொண்டிருந்தது சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி. அந்த பங்குகளை வாங்கியவர்களில் இவரும் ஒருவர்.
https://www.vikatan.com/government-and-politics/history-of-voc-and-who-started-a-first-indian-shipping-company-in-british-india
https://maps.app.goo.gl/hNGFRyUGFAdkSwvP9

No comments:

Post a Comment