Monday, 12 May 2025

கூசு மலை செங்காவி ஓவியம் - கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்கள்

எழுத்தே அறியாத போது மனிதன் தன் எண்ணங்களை வண்ணங்களால் தீட்டிவைத்தான். அவை வெண்சாந்து,செஞ்சாந்து,கருஞ்சாந்து, போன்ற வண்ணங்களை அவன் பயன்படுத்தினான். செஞ்சாந்து ஓவியங்கள் காலத்தால் முற்பட்டவை இவை 4500 ஆண்டுகள் பழமையானவையாக கருதப்படுகின்றன. வெண்சாந்து ஓவியங்கள் 2000 ஆண்டுகளில் இருந்து வரலாற்று காலம் வரை வரையப்பட்டு இருக்கின்றன. தமிழகத்திலேயே பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அதிகம் .அதில் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் உள்ள டோல்கேட் அருகே உள்ள கூசுமலையின் கிழக்கு பகுதியில் செங்காவி ஓவியங்கள் காணப்படுகின்றன.இதை புரிந்து கொள்ள முடியவில்லை. இது 4500 ஆண்டுகள் பழமையானது.
களப்பணியில் சுகவனமுருகன், ரவி, சீனிவாசன், பிரகாஷ், விஜயகுமார், காவேரி, மதிவானன், தமிழ்செல்வன், கணேசன்
https://maps.app.goo.gl/Lhsi8DcDsYnszpyR7

No comments:

Post a Comment