தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 11 May 2025
300 ஆண்டுகள் பழமையான எட்டிப்பட்டி கல்வெட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
வரலாறு புனையப்ட்ட தாக என இருக்குமோ என்ற ஐயப்பாட்டை கல்வெட்டுகள்தான் தகற்த்தெரிகின்றன.அந்த வகையில் கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை வட்டம் நடுபட்டிஊராட்சி எட்டிப்பட்டி தென்பெண்ணை ஆற்றங்கரையில் எட்டிப்பட்டி பெருமாள் , வேங்கன் கூறியதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆய்வுப்படுத்தும் குழு தலைவர் நாராயனமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்டது. எறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான அக் கல்வெட்டு தென்பெண்ணை ஆற்றில் நீர் ஓடும் பகுதியிலேயே அமைந்துள்ளது 10 அடி உயரம் கொண்ட இக்கல்லை அங்கு உள்ளவர்கள் சாசனக்கல் என்று அழைத்து வருகின்றனர். ஆற்றின் ஓட்டத்தால் மிகவவும் சேதமடைந்துள்ளது .இக்கல் இந்த சாசனக்கல்லை அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்த ராஜ் , தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் ஆகியோர் படிஎடுத்தனர்.
இதுபற்றி கோவிந்தராஜ் அவர்கள் கூறும்போது ஆச்சாரி என்ற இனத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பாவக்கல் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் 60 பங்கு தானத்தை சரி சமமாக பிரித்து கொடுத்ததை இக்கல்வெட்டு காட்டுகிறது. இக்கல் ஆற்றின் நீர் ஓட்டத்திலேயே இருந்ததால் மிகவும் தேய்மானம் அடைந்துள்ளது.
இது துன்மதி வருவம் மார்கழி 17 ஆம் தேதி ஐந்து சாதி பஞ்சமுகத்தார் கூடி பேசி முடிவெடுத்தது பற்றி தெரியவருகிறது. 1.துன்மதி வருஷம் மார்கழி 17 ந்தேதியில் அதற்கு அஞ்சு சாதி-யைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களான குப்பாசாரி ,தருமாசாரி, மல்லிகாச்சாரி, திம்மாச்சாரி, ராமாச்சாரி, தச்சு வடராமாசாரி ,ருத்ரா சாரி, தச்சர் தண்டியாசாரி , திருகடையன் .
கோவிந்தாசாரி திம்சாரியும் பெருமாளாச்சாரி. ஆகியோர் முன்னிலையில் நடத்த கூட்டடம் பற்றியது. இதில் குறிப்பிடும் ஜந்து சாதி என்பது
கொல்லர் - இரும்பு சம்பந்தமான வேலை செய்வர்.
தட்டார் - தங்கம் சம்பந்தமான வேலை செய்வர்.
கண்ணார் - பித்தளை சம்பந்தமான வேலை செய்வர்.
கச்சிப்பர்(சிற்பி - சிற்பம் சம்பந்தமான வேலை செய்வர்.
தச்சர் - மரத்தளவாடங்கள் சம்பந்தமான வேலைசெய்வர்.
15 வரிகள் கொண்ட இக்கல்லில் வேடர்பட்டி. , பாவக்கல், ஊத்தங்கரை ,எட்டிப்பட்டி என்ற தற்போது உள்ள ஊரின் பெயர்கள் வருகின்றன .லக்கம்படடி என்பரு லக்கம்பட்டிணம் என கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆதலால் 300 ஆண்டுகளுக்கு முன் லக்கம்பட்டியினுடைய பெயர் லக்கம்பட்டிணம் என்று பெரிய ஊராக இருந்திருக்கலாம். அதேப்போல் திருமானுர் என்ற ஊரின் பெயர் மருவி திருவனபட்டி என்றும். வெங்களபட்டி என்ற ஊரின் பெயர் மருவி வேங்கடத்தாம்பட்டி என்றும் மாறியிருக்க வாய்ப்பு உண்டு. ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன் கூறினார். இந்த ஆய்வுப்பணியில் விஜயகுமார் , பிரகாஷ் ஊரைச்சேர்ந்த பெருமாள் .வேங்கன் -
சங்கர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்
https://youtu.be/fAWkfKKDBjE
கடும் வெயிலிலும் பெட்சீட் வாங்கிவந்து அந்த நிழலில் படித்து முடித்தோம்
https://youtu.be/TT7o2QWuWmI
https://maps.app.goo.gl/VRnYVXgxM5va3zX96
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...
-
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இண...
No comments:
Post a Comment