Sunday, 11 May 2025

எட்டு இடங்களில் அம்பு பாய்ந்து இறந்த தம்மசெட்ட .முதலாம் குலோத்துங்கன் காலத்திய -கி.பி 1103 குண்டேப்பள்ளி - நடுகல் கல்வெட்டு -: காவல் காப்பதில் வல்லவனான ஊர் காமிண்டர் மகன் கலிஞ்சிறை தம்மசெட்டி கலந்தகமங்கலம் என்ற இடத்தில் நடந்த தொறுபூசலில் இறந்துள்ள செய்தி.

குண்டேப்பள்ளி கிராமத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் உள்ளது முதலாம் குலோத்துங்கன் காலத்திய (-கி.பி 1103 ) நடுகல் கல்வெட்டு ஆகும் சங்க காலம் முதலே ஆநிரை கவர்தல் (கால்நடைகளை கூட்டிச்செல்லுதல் ) அல்லது மீட்டலின்போது நடக்கும் சண்டைகள், `தொறுபூசல்' என அழைக்கப்பட்டது. சில போர்கள் துவங்கும் முன் முன்னோட்டமாக எதிரி நாட்டிலிருந்த கால்நடைகள் கவர்ந்து வரப்பட்டன. பெரும்பாலும் கால்நடைகளை மீட்கும்போது, உயிழந்த வீரர்களுக்கே அதிக நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குண்டேப்பள்ளி கிராமத்தில் 900 ஆண்டுகளுக்கு நடந்த தொறு பூசலில் இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது. காவல் காப்பதில் வல்லவனான ஊர் காமிண்டர் மகன் கலிஞ்சிறை தம்மசெட்டி கலந்தகமங்கலம் என்ற இடத்தில் நடந்த தொறுபூசலில் இறந்துள்ள செய்தியை கூறுகறது.
குண்டேப்பள்ளி கிராமத்தில் சோழர்காலதிய நடுகல் ◌கல்வெட்டு படிக்கப்பட்டது. திரு அருன் அவர்கள் கொடுத்த தகவலின் படி - கோவிந்தராஜ், நாராணமூர்த்தி , சதாநந்த கிருஷ்ணகுமார், டேவீஸ் கனேசன், சரவணகுமார், கலந்து கொண்டனர்
https://youtu.be/zfWp7GSwFCo
இவனின் உடலில் எட்டு அம்புகள் பாய்ந்துள்ளது. அதை இந்த நடுகல்லில் தெளிவாக காட்டி இருக்கிறார்கள்
நடுகல்லின் மேற்பகுதியில் வழக்கம் போல் தேவலோக மங்கைகள் இறந்த வீரனை சொர்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
இவன் ஆநிரை போரில் இறந்துள்ளதையும், இவனை நோக்கி கால்நடைகள் வருவதைப்போல் அமைத்துள்ளதால் இது ஆநிரை மீட்டலில் இறந்ததாக எடுத்துக் கொள்ளலாம்.
https://maps.app.goo.gl/8iMa6qBDfiUYYqSdA
உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment