Friday, 9 May 2025

கந்திகுப்பம் பைரவர் காட்டிய சித்தர்குகையும் - பெருமாளின் இதுவரை இல்லாத புதிய அவதாரமும்

கந்திகுப்பம் காலபைரவர் ஆலயத்தில் இருந்து . பைரவசுவாமிகள் எங்களை ஒரு கவி போன்ற அமைப்பு இருப்பதாகவும் அங்கே பெருமாள் சிலையை பாறையில் செதுக்கி இருக்கிறார்கள் என்று கூறி அழைத்துச் சென்றார் .
வழக்கமாக பெருமாள் வடிவங்கள் 24 வகைகள் என சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால் இங்குள்ள பெருமாள் வழக்கமான சங்கு , சக்கரம் காணப்படுகிறது மற்றோர்கையில் தண்டம், இன்னுமோர் கையில் கமண்டலம் காட்டப்பட்டுள்ளது.இது இப்பகுதியின் சிறப்பு கூறுகளாக இருக்கும் எப்படி சிவன் ஒருவராக இருந்தாலும் ஒவ்வோர் கோவிலிலும் ஒரு பெயர் அவ்விடத்திற்கு ஒரு தலபுராணம் இருக்கும் அதை விளக்கும் வகையில் சிற்பம் வடிவமைக்கப்பட்டு இருக்கும் .அது போலத்தான் இங்கும் இப்பகுதியின் தலபுராணத்தை விளக்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டு இருக்கும் . இந்த இடம் சிறு கவி அதாவது மனிதன் மழையிலும், வெய்யிலிலும் காத்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது. இதற்கு எதிரே ஒரு விளக்கு து◌ாணில் ஆஞ்சனேயர் செதுக்கப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment