Sunday, 11 May 2025

விஜயநகர் மன்னன் #முதலாம்தேவராயன்- #அன்னதாதஉடையார் கல்வெட்டு -சூலாமலை #கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டு

கிருஷ்ணகிரியின் வரலாற்றினை பல்வேறு வகைகளில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு அரசு அருங்காட்சியத்தோடு இணைந்து மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அதில் பொதுமக்கள் பங்கீடும் அதிகம் அந்த வகையில் ஒரு கல்வெட்டு பற்றிய தகவலை சூலாமலை ஊரை சேர்ந்த காவலர் விஜயலிங்கம் அவர்கள் சூலாமலையில் ஒரு கல்வெட்டு இருப்பதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் அருங்காட்சிய காப்பாச்சியர் , ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன். விஜயகுமார் . சூலாமலைக்கு சென்று அந்த கல்வெட்டினை சுத்தப்படுத்தி படி எடுத்து ஆவணப்படுத்தினர். இக்கல்வெட்டை அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் படித்து இது பற்றி கூறுகையில் விஜயநகர மன்னர் முதலாம் தேவராயன் காலத்தில் நிகரிலி சோழமண்டலத்தை அவரது பிரதாணி அன்னதாத உடையார் ஆண்டுவருகிறார். இவர் மேல்கோட்டையில் உள்ள லட்சுமிநரசிம்ம பெருமாள் கோயிலின் அனைத்து வழிபாட்டுக்கும் சேர்த்து சூராமணி என்னும் கிராமத்தை தானமளித்த செய்தியை இக்கல்வெட்டு குறிக்கிறது. அன்னதாத உடையாரைப் பற்றிய பல கல்வெட்டுக்கள் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கிடைத்துள்ளன. சூராமணி என்ற ஊர் தற்போது சூலாமலை என்றும் அழைக்கப்படுகிறது. கல்வெட்டின் பின்புறம் நடுவில் பெரிய அளவில் சக்கரமும் இருபுறமும் சூரிய சந்திரர்கள் காட்டப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறும் போது இந்த கோவிலை திம்மராயசாமி என்று ஊர் மக்கள் வழங்கி வருகின்றனர் . இதற்கு முன் இந்த கோவில் இக் கோவிலின் கிழக்கு பக்கத்தில் 500 அடி து◌ாரத்தில் இருந்ததற்கான அடையாளடாக கருடகம்பத்தின் உடைந்த பாகம் உள்ளது. மற்ற உடைந்த பாகங்களை தற்போதுள்ள கோவிலின் அருகே நட்டு வைத்துள்ளனர். அதே போலத்தான் அங்கிருந்த 4 அடி உயர கல்வெட்டு அதில் இரண்டடி சக்கரத்தாழ்வார் (ஶ்ரீசக்கரம் ) இருந்ததால் இங்கு எடுத்து வந்து நட்டு வைத்துள்ளனர் .இந்த கோவிலுக்கு கிருஷ்ணகிரி அருகே உள்ள கணவாய்பட்டி பெருமாள் கோவில் (சின்ன திருப்பதி) என்ற புகழ்பெற்ற கோவிலின் பூசாரி மற்றும் அவர்கள் வாரிசு குடும்பத்தார்கள்களுக்கு இது குலதெய்வம் சூலாமலையில் உள்ள இந்த திம்மராயசாமி கோவிலுங்கு பலதலைமுறைகளாக வழிபாடு செய்து வருகின்றனர் என்ற தகவலையும் கூறினார் .
விஜயநகர மன்னர் முதலாம் தேவராயன் காலத்தில் நிகரிலி சோழமண்டலத்தை அவரது பிரதாணி அன்னதாத உடையார் ஆண்டுவருகிறார். இவர் மேல்கோட்டையில் உள்ள லட்சுமிநரசிம்ம பெருமாள் கோயிலின் அனைத்து வழிபாட்டுக்கும் சேர்த்து சூராமணி என்னும்......
https://youtu.be/xkYbIBVRdgo
ஆய்வின்போது அவ்வூரை சேர்ந்த மணிவண்ணன், முனியப்பன், வரலாற்று ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர்
https://maps.app.goo.gl/QYiHrPjWEtWfiSi17

No comments:

Post a Comment