Monday, 12 May 2025

கோனார் கொட்டாய் சுப்பிரமணி என்பவரது நிலத்தில் உள்ள பாறையில் கல்வெட்டு .சோழகோனார் என்பவர் திருவண்ணாமலை இறைவனுக்கு மடப்புறமாக 4 கண்டக நிலத்தை தானமாக அளித்த செய்தியை கூறுகிறது

தானக் கல்வெட்டு கண்டெடுப்பு-, காவேரிப்பட்டினம் பையூர் அருகே பழமையான கல்வெட்டு இருப்பதாக அறிந்து அதை காண, கிருட்டினகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தமிழ்ச்செல்வன், நாராயணமூர்த்தி, சுகவன முருகன், எம்.என்.இரவி, பிரகாஷ் இவர்களோடு மாருதி மனோகரன் ஆகியோர் பார்வையாக கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம் அடுத்த பையூர் கோனார் கொட்டாய், சொக்கன் குட்டை, சுப்பிரமணியம் என்பவர் நிலத்தில் ஒரு பாறையில் இருக்கும் நாலு வரி கல்வெட்டினை காண சென்றோம்.அந்த கல்வெட்டு பாறைக்கு அருகிலேயே அஸ்ட மங்கல சின்னங்கள் கொண்ட ஒரு கல்வெட்டும் இருந்தது. அதில் வரையப்பட்ட சூலம், தூப கலசம், பாதம், வெண் கொற்றகுடை, கண்ணாடி, ஸ்வஸ்திக் சின்னம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது.
https://youtu.be/JOOKb8x10sI
https://maps.app.goo.gl/2rQorMnaWWUxHB7M6

No comments:

Post a Comment