Monday, 16 June 2025

கங்கதேவன்பள்ளி -

முனீசுவரன் கோயில் என விளங்கும் நடுகல் கோயில் சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த நடுகல்லில் மேலே கல்வெட்டும் கீழே மாடுகளும் போரிடும் இருவீரர் சிற்பங்களும் காட்டப்பட்டுள்ளன. மாடுகளில் ஒன்று பின்புறம் பார்க்க, மற்ற நான்கும் போரிடும் வீரர்களை நோக்குகின்றன. வீரன் ஒருவன் நிமிர்ந்த நிலையில் நிற்க, மற்றொருவன் விழும் நிலையில் காட்டப்பட்டுள்ளான். ஆநிரை மீட்டல் போரில் இறந்துபட்ட வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல், எழுத்துக்கள் சிதைந்துள்ளதால் வீரனின் பெயர் தெரியவில்லை.

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...