Tuesday, 17 June 2025

தட்டக்கல் கல்வெட்டு -போசளர் மன்னன் : வீரராமனாதன்

கிருஷ்ணகிரி ஆட்சி ஆண்டு : 37 வட்டம் : கிருஷ்ணகிரி வரலாற்று ஆண்டு : கி.பி. 1291 ஊர் : தட்டக்கல் இந்தியக் கல்வெட்டு மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை : - எழுத்து : தமிழ் முன் பதிப்பு : - அரசு : போசளர் ஊர்க் கல்வெட்டு எண் 2 : மன்னன் : வீரராமனாதன் இடம் : குறிப்புரை: கூத்தாண்டப்பர் கோயில் அருகில் காணப்பாறையில் உள்ளது. போசள மன்னன் வீரராமநாதனது 37வது ஆட்சி ஆண்டில் சித்திரை மாதம் 13 ஆம் தேதியில் விக்கிரமசோழ நாட்டை நாயகம் செய்கின்ற தித்தாழ்வார் மகன் விதியப்பிள்ளை என்பவன் புலி ஒன்று ஆளைக் கடித்த போது வளைந்து குத்தி இறந்து போனான். அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இன்று தொகரப் பள்ளி என வழங்கும் ஊரே அன்று துவறபள்ளி என்று வழங்கிருக்கிறது.

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...