Friday, 13 June 2025

பணகமுட்லு நடுகல் கல்வெட்டு - கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள் -மொத்த நடுகற்கள் 3

பனகமுட்லு என்று தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல் என்று அழைக்கப்பட்ட செய்தி தெரியவருகிறது. அப்போது இந்த ஊரின்மீது படையெடுத்து வந்த தாமய தண்ணாக்கன் என்பவனது படையை அழித்து தானும் இறந்து போனான் காமிண்டர் கோவிந்தாண்டை ஆந்தையந் அடியான் பணிக்கமாராயன் மகன் படலன் என்ற வீரன். இவனது உயிர்த் தியாகத்தினை போற்றும் வகையில் இவனது உருவத்தை கல்லில் வடிக்கச செய்தார் கோவிந்தாண்டை. காணிகாத்தான் இக் கல்லை நட்டு வைத்தார் என்ற செய்திகளைத் தெரிவிக்கிறது
கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டும் கல்வெட்டு வாசகமும் விளக்கம் பணகமுட்லு
https://youtu.be/LKBUy0U0p0w
அரசுசுகா சுகாதாரநிலையத்திற்கு மேற்கில் கொட்லா கவுண்டர் மகன் சுரேஷ் நிலத்தில் உள்ள மூன்று நடுகற்களில் ஒன்றில் கல்வெட்டு காணப்படுகிறது. இந்த கல்வெட்டு 13 ஆம் ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆய்வுப்பணியில் மதிவாணன் , வரலாற்று ஆசிரியர் ரவி, கல்வெட்டுகாவலன் கோவிந்தராஜ், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோல் ஈடுபட்டனர் .
https://maps.app.goo.gl/sqF2irTBbKCdCQar5
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT
https://maps.app.goo.gl/r1JqQm84Awmp2Cxz8

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...