Sunday, 15 June 2025

கணிமங்கலம் கல்வெட்டு- 1277 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்வஸ்திஸ்ரீ மஹாமண்டலீஸ்வரன் திரிபுவன மல்ல பூர்வாதராஜன்

1277 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு கணிமங்கலம்-ஓசூர் வட்டம் - ஸ்வஸ்திஸ்ரீ மஹாமண்டலீஸ்வரன் திரிபுவன மல்ல பூர்வாதராஜன் குமா(ரர்) பூமிநாயக்கரேன் -கணிமங்கலம் என்ற ஊருக்கு பூமிநாயக்க சதுர்வேதிமங்கலம் என்று தனது பெயரை வைத்து அதனை பிராமணர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது ஆய்வுப்பணியில் கல்வெட்டு காவலர் கோவிந்தராஜ், அருங்காட்சியக காப்பாச்சியர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் , விஜயகுமார்
https://youtu.be/Cr7BPSX6sLY
750 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து பேரிகையை ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டது. கணிமங்கலம் என்ற ஊரில் மேற்கொண்ட ஆய்வின்போது கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவக்குமார் திருமலைக் கோவில் மைதானத்தில் மாடு கட்டி வைக்கப்பட்ட இக்கல்வெட்டினைக் கண்டுபிடித்தார். பின்னர் இது ஊரார்கள் உதவியால் சுத்தம் செய்யப்பட்டது இதனை அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியர் கோவிந்தராஜ் படித்துக் கூறினார். கோவிந்தராஜ் இக்கல்வெட்டு குறித்து கூறியதாவது. பூர்வாதராயர்கள் என்னும் குறுநிலத் தலைவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற சிற்றரச பரம்பரையினர் ஆவார்கள். இவர்கள் பிற்கால சோழர்கள் காலத்தில் சிறு தலைவர்களாய் இருந்து ஒய்சாளர்களின் காலத்தில் ஒசூரை சுற்றியுள்ள பகுதிகளை ஆளும் மகாமண்டலீஸ்வரர்களாக இருந்தனர். சின்னக்கொத்தூர், மேல்சூடாபுரம், பேரிகை போன்ற இடங்களில் உள்ள கோயில்களைக் கட்டியும் அவற்றிற்கு பல்வேறு தானங்களையும் வழங்கியுள்ளனர். இந்த பூர்வாதராயர்களில் ஒரு முக்கிய தலைவந்தான் பூமிநாயக்கன் என்பவன். இவனது கல்வெட்டைத்தான் கணிமங்கலத்தில் கண்டறிந்துள்ளோம். இவன் இப்பகுதியின் மகாமண்டலீஸ்வரநாக இருந்தபோது கணிமங்கலம் என்ற ஊருக்கு பூமிநாயக்க சதுர்வேதிமங்கலம் என்று தனது பெயரை வைத்து அதனை பிராமணர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இன்றும் இக்கிராமத்திற்கு 750 ஆண்டுகளுக்கு முற்பட்ட கணிமங்கலம் என்ற பெயரே எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்பட்டு வருவது சிறப்பாகும். இவ்வூரை சேர்ந்த தலைவர்கள் சிலர் அப்போதைய அத்திசமுத்திரத்தில் (தற்போது அச்சேந்திரம் என்று வழங்கப்படுகிறது) உள்ள பெருமாள் கோயிலுக்கு தானம் வழங்கியுள்ளதை அக்கோயில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இன்றும் இவ்வூரில் கோட்டை என்ற பகுதி இருப்பதை அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நாங்கள் இப்பகுதியில் மேற்கொண்டுவரும் கள ஆய்வுகள் மூலம் இம்மாவட்ட வரலாற்றினை முழுவதுமாய் அறிந்துக் கொள்வதற்கான தடயங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். இக்கள ஆய்வின்போது அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவக்குமார், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார் , அச்சேந்திரம் பெருமாள் கோயில் பூசாரி ராஜப்பா அழைத்துச் சென்றார் மற்றும் கணிமங்கலத்துப் ஊர்கவுண்டர் தேவராஜ் மற்றும் பெரியவர்கள் சிலரும் உடனிருந்தனர். Map
https://maps.app.goo.gl/gj9qHW5ctbHxX6qN6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு தலைவர் நாராயனமூர்த்தி 9448876076
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வரலாற்று ஆசிரியர் ரவி 8122341228வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...