Tuesday, 17 June 2025

ஓட்டம்பட்டி கல்வெட்டு கொங்கணி மன்னன் : சிவமாறன் ஆட்சி ஆண்டு : 22 ஆம் ஆண்டு 8-ஆம் நூற்றாண்டு

தருமபுரி லட்டம்: : ஊத்தங்கரை ஓட்டம்பட்டி மொழி தமிழ் எழுத்து : வட்டெழுத்து கொங்கணி மன்னன் : சிவமாறன் ஆட்சி ஆண்டு : 22 ஆம் ஆண்டு வரலாற்று ஆண்டு : 8-ஆம் நூற்றாண்டு - இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை } முன் பதிப்பு : ஊர்க் கல்வெட்டு எண் } , இடம் : வேடியப்பன் கோயிலில் தெற்கு நோக்கி நிற்கும் நடுகல். குறிப்புரை கல்வெட்டின் கீழே வீரனின் உருவம். ஒரு கையில் வில்லும், மற்றொரு கையில் குறுவாளும் ஏந்தி முன்புறம் இரு அம்புகள் பாய்வது போலவும், காலின் கீழ் ஒரு கெண்டி இருப்பதாகவும் காணக் கிடைக்கிறது. சிவமாறவர்மனின் 22-வது ஆட்சி ஆண்டில், மாவலிவாணராயன் கங்கநாட்டை ஆண்டு வந்தான். அப்போது தகடூரை நோக்கி இந்திரன் படையெடுத்துவர, கண்ணனூர்த் தலைவனான கமியத் தழமன் அப்போரில் இறந்து பட்டான். இதைக் குறிக்கும் நடுகல்லிது.

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...