Sunday, 15 June 2025

கங்கதேவன்பள்ளி -கல்வெட்டு தேன்கனிக்கோட்டை

ஊர்க் கல்வெட்டு எண் : 1 மன்னன் குலோத்துங்கள்! இடம்: கங்கதேவன்பள்ளிக்கும் மல்லிகார்ச்சுனதுர்க்கத்திற்கும் இடையில் உள்ள பாறையில் குறிப்புரை: முதலாம் குலோத்துங்க சோழனுடைய மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு அவனது 32வது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டதாகும். வீரராஜேந்திர ஜனனாடுடையானும், அரண்மனையைச் சேர்ந்தவர்களும் (கோயிற்றமர்) தீர்த்தமலை திரிபுராந்தக தேவர் என்ற இறைவனுக்கு பராந்தக நல்லூர் என்ற ஊர் தேவதானமாகக் கொடுத்தனர். அவ்வூரின் எல்லைகளில் எல்லைக் கற்கள் நடப்பட்டன. கோயில் சிவபிராமணர்கள் தேவதான ஊரினைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...