Tuesday, 17 June 2025

கொத்தூர் கல்வெட்டு போசளர் வீரவல்லாளர்

தருமபுரி ஆட்சி ஆண்டு - வட்டம் : ஒசூர் வாலாற்று ஆண்டு சக ஆண்டு 1433 eat: கொத்தூர் 2. 13. 1511 மொழி : தமிழ் இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } எழுத்து : கிரந்தம் கலந்த தமிழ் முன் பதிப்பு : Loots or ott : போசளர் வீரவல்லாளர் ஊர்க் சுல்வெட்டு எண் }, இடம் : தனியார் கொல்லையில் உள்ள தனிக்கல். சூரிய சந்திரர், கண்டபேருண்ட பறவை, ஆங்கிலத்திலுள்ள 'Z' என்ற எழுத் தின் வடிவத்தை ஒத்துள்ள உருவம், உடுக்கையை நினைவுறுத்தும் உருவம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. இருகுடை என்று கொள்ளக் கூடிய உருவ மும் வரையப்பட்டுள்ளதைக் காணமுடியும், வீரவல்லாள தேவனாகிய போசள மன்னன் ஆட்சிக் காலத்தில் இராமண்ணன் என்பான் அத்தியூர், தேனுழான் பள்ளம் ஆகிய ஊர்களை வீரவல்லாளபட்டனம் என்று பெயரிட்டு ஒரு சிலருக்கு கொடையாக அளிக்கிறான். இவர்கள் உரிமையாக்கிக் கொண்டபின் இவ்வூர் நிலங்களுக்குரிய வரிகளை இவர்களே கட்டி வரவேண்டும். இவ்விரண்டு ஊர் களுக்கும் 58 பொன் மரியாதி செலுத்தப்படவேண்டும். சித்தாயம், மனை திறை, குதிரை உத்தை, மல்லுதனம், திக்கை. அதிகாரிசீவிதம், கீழ்த்தண்டு, மேல்த் தண்டு, புத்திறை. புதுக்காணிக்கை போன்ற வரிகள் கூறப்படுகின்றன. நாடு. நகரம் நான்கு திசை பதினெண் விஷயத்தார் ஆகியோர் முன்னிலையில் ஊர்கள் அளிக்கப்பெற்றன. நாடு என்பது வேளாண் குடிக்குழுவையும். நகரம் என்பது வணிகக் குழுவையும் குறிக்கும். பதினெண் விஷயத்தார் என்பது யாரைக் குறிக் கிறது என்று அறிய முடியவில்லை. அடைமாநியம். குடங்கை மாநியம் என்ற சொற்களின் பொருளை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...