Tuesday, 17 June 2025

பேகேபள்ளி கல்வெட்டு - தெருவின் ஓரத்தில் உள்ள தனிக் கல் -

தருமபுரி ஆட்சி ஆண்டு வட்டம் : ஒசூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 15-ஆம் நூற்றாண்டு - ஊர் : பேகேபள்ளி மொழி தமிழ் இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } எழுத்து : தமிழ் முன் பதிப்பு : 丁: மன்னன் : ஊர்க் கல்வெட்டு எண் } , 1 இடம் தெருவின் ஓரத்தில் உள்ள தனிக் கல் - குறிப்புரை: முழுக் கல்வெட்டல்ல. தெளிவின்மையால் செய்தியை விளங்கிக்கொள்ள முடிய வில்லை.

ஒசூர் தேர்ப்பேட்டை கல்வெட்டு - கி.பி 17-ஆம் நூற்றாண்டு C: ஊருக்கு வடமேற்கில் வாய்க்காலுக்குப் பாவுகல்லாக அமைக்கப் பட்டுள்ள கற்பலகை

மாலட்டம்: தருமபுகி ஆட்சி ஆண்டு வட்டம்: ஒசூர் வரலாற்று ஆண்டு : கி.பி 17-ஆம் நூற்றாண்டு தேர்ப்பேட்டை Cung: نما آماده இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை - எழுத்து : தமிழ் முன் பதிப்பு : மன்னன்: - ஊர்க் கல்வெட்டு எண் - } , இடம்: ஊருக்கு வடமேற்கில் வாய்க்காலுக்குப் பாவுகல்லாக அமைக்கப் பட்டுள்ள கற்பலகை. குறிப்புரை : சந்திர சூடேசுரர் கோயிலுக்குத் தானம் செய்தது பற்றிக் கூறுகிறது. சந்திர சூடேகரர் கோயில் செவிட நாயனார் கோயில் என்று கூறப்படுகிறது.

ஒசூர் கல்வெட்டு கி. பி. 16-ஆம் தேர்ப்பட்டை ஏரிக்கரையில் உள்ள தனிக்கல். (இரண்டு புறமும் கல்வெட்டு உள்ளது )

தருமபுரி ஆட்சி ஆண்டு வட்டம் : : ஒசூர் வரலாற்று ஆண்டு கி. பி. 16-ஆம் தேர்ப்பட்டை மொழி தமிழ் இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை நூற்றாண்டு - 1 எழுத்து : தமிழ் முன் பதிப்பு: மன்னன் : - ஊர்க் கல்வெட்டு எண் இடம் : ஏரிக்கரையில் உள்ள தனிக்கல். (இரண்டு புறமும் கல்வெட்டு உள்ளது ) குறிப்புரை : அரியப்பசீயர் என்பாருடைய நிலம் அவர் ஊரில் இல்லாதபோது கோயில் நிலமாக்கப்பட்டது. பிறகு அவருக்கே அந்நிலம் திருப்பியளிக்கப்பட்டது. இதுபற்றியே இக்கல்வெட்டு விவரிக்கிறது. இதில் பங்கெடுத்துக்கொண்ட பொறுப்பாளர் பெயர்களும் உள்ளன. மடபதிகள், மாஹேஸ்வரர், நம்பிமார், ஸ்ரீவீரபத்திரர், சோழவணுக்கர், பழவாசாரி, சிப்பாசாரி ஆகியோர் குறிக்கப்படுகின்றனர். கோயில் நிலமாக்கப்பட்டபோது சூலமும், தியாகக் கொடியும் பொறிக்கப்பட்டன என்று அறிகிறோம். முரசூர் அஞ்ஞூற்றுவர் முன் னிலையில் நிலம் திருப்பியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் 'மேலைத்திருச் சிற்றம்பலம்' என்று கூறப்பெறுகிறது.

ஒசூர் தேர்ப்பேட்டை கல்வெட்டு வரலாற்று ஆண்டு கி. பி. 15-ஆம் நூற்றாண்டு - மலையடிவாரத்தில் ஓடையின் மீது கிடத்தப்பட்டுள்ள குறுக்குக் கல்.

மாவட்டம் : தருமபுரி ஆட்சி ஆண்டு : 142 வட்டம் : ஒசூர் வரலாற்று ஆண்டு கி. பி. 15-ஆம் நூற்றாண்டு - - ஊர் : தேர்ப்பேட்டை மொழி தமிழ் இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } எழுத்து : தமிழ் - முன் பதிப்பு : மன்னன் : - ஊர்க் கல்வெட்டு எண் }, இடம்: மலையடிவாரத்தில் ஓடையின் மீது கிடத்தப்பட்டுள்ள குறுக்குக் கல். குறிப்புரை : நிலம் விற்றது பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டு முழுமையும் இல்லை மேலே சூலக் குறியொன்றும் இடப்பட்டுள்ளது.

தேர்ப்பேட்டை கல்வெட்டு சோழிங்கர் கோயில் முன் உள்ள கல் மீது உள்ளத

தருமபுரி வட்டம் : ஒசூர் : தேர்ப்பேட்டை மொழி தமிழ் எழுத்து : தமிழ் : மன்னன் : ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு : கி பி 1-ஆம் நூற்றாண்டு - இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } - முன் பதிப்பு : ஊர்க் கல்வெட்டு 67 இடம் : சோழிங்கர் கோயில் முன் உள்ள கல் மீது உள்ளது - குறிப்புரை : கல்வெட்டு ஒரு கல்லின் இரு புறங்களிலும் உள்ளது பின்புறம் தெளிவாக இல்லை. வீர சோழ அணுக்கற்கு, செவிடை நாயனார் கோயில் மடபதிகள், மஹேச்சுரர், பட்டர், நம்பிமார் வீரபத்திரர், ஆசாரியர் ஆகிய அனைவரும் மன மொத்துத் தந்த தானத்தைக் குறிக்கிறது. கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.

கொத்தூர் கல்வெட்டு போசளர் வீரவல்லாளர்

தருமபுரி ஆட்சி ஆண்டு - வட்டம் : ஒசூர் வாலாற்று ஆண்டு சக ஆண்டு 1433 eat: கொத்தூர் 2. 13. 1511 மொழி : தமிழ் இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } எழுத்து : கிரந்தம் கலந்த தமிழ் முன் பதிப்பு : Loots or ott : போசளர் வீரவல்லாளர் ஊர்க் சுல்வெட்டு எண் }, இடம் : தனியார் கொல்லையில் உள்ள தனிக்கல். சூரிய சந்திரர், கண்டபேருண்ட பறவை, ஆங்கிலத்திலுள்ள 'Z' என்ற எழுத் தின் வடிவத்தை ஒத்துள்ள உருவம், உடுக்கையை நினைவுறுத்தும் உருவம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. இருகுடை என்று கொள்ளக் கூடிய உருவ மும் வரையப்பட்டுள்ளதைக் காணமுடியும், வீரவல்லாள தேவனாகிய போசள மன்னன் ஆட்சிக் காலத்தில் இராமண்ணன் என்பான் அத்தியூர், தேனுழான் பள்ளம் ஆகிய ஊர்களை வீரவல்லாளபட்டனம் என்று பெயரிட்டு ஒரு சிலருக்கு கொடையாக அளிக்கிறான். இவர்கள் உரிமையாக்கிக் கொண்டபின் இவ்வூர் நிலங்களுக்குரிய வரிகளை இவர்களே கட்டி வரவேண்டும். இவ்விரண்டு ஊர் களுக்கும் 58 பொன் மரியாதி செலுத்தப்படவேண்டும். சித்தாயம், மனை திறை, குதிரை உத்தை, மல்லுதனம், திக்கை. அதிகாரிசீவிதம், கீழ்த்தண்டு, மேல்த் தண்டு, புத்திறை. புதுக்காணிக்கை போன்ற வரிகள் கூறப்படுகின்றன. நாடு. நகரம் நான்கு திசை பதினெண் விஷயத்தார் ஆகியோர் முன்னிலையில் ஊர்கள் அளிக்கப்பெற்றன. நாடு என்பது வேளாண் குடிக்குழுவையும். நகரம் என்பது வணிகக் குழுவையும் குறிக்கும். பதினெண் விஷயத்தார் என்பது யாரைக் குறிக் கிறது என்று அறிய முடியவில்லை. அடைமாநியம். குடங்கை மாநியம் என்ற சொற்களின் பொருளை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

கூசனபள்ளி கி. பி. 16-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

மாவட்டம் : தருமபுரி ஆட்சி ஆண்டு : வட்டம் : ஒசூர் வரலாற்று ஆண்டு : : கூசன பள்ளி கி. பி. 16-ஆம் நூற்றாண்டு மொழி தமிழ் இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } எழுத்து : தமிழ் முன் பதிப்பு : - : மன்னன் : ஊர்க் கல்வெட்டு எண் 2 இடம் : திம்மராயன் கோயில் குறிப்புரை: கல்வெட்டின் துவக்கத்தில் கூப்பிய கரங்களுடன் அமர்ந்த அடியவரின் உருவமும் இருபுறம் சூலங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு இடையிடையே சிதைந்து விட்டது. செய்தியை விளங்கிக்கொள்ளமுடியவில்லை. சோமனாத தேவர். இராஜகற்கட மஹாராஜன் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர்.

கக்கனூர் -கி.பி. 15-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

தருமபுரி வட்டம்: ஓசூர் கக்கலூர் மொழி : தமிழ் எழுத்து : தமிழ் : - மன்னன் : மல்லன் : வரலாற்று ஆண்டு : கி.பி. 15-ஆம் நூற்றாண்டு - - இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } முன் பதிப்பு : ஊர்க் கல்வெட்டு எண் } இடம் : அம்மன் கொல்லை. குறிப்புரை : கல்வெட்டு முற்றுப் பெறவில்லை. மாசந்தி நாடு, பெரிய நாடு ஆகியவை குறிக்கப் பெறுகின்றன.

ஓட்டம்பட்டி கல்வெட்டு கொங்கணி மன்னன் : சிவமாறன் ஆட்சி ஆண்டு : 22 ஆம் ஆண்டு 8-ஆம் நூற்றாண்டு

தருமபுரி லட்டம்: : ஊத்தங்கரை ஓட்டம்பட்டி மொழி தமிழ் எழுத்து : வட்டெழுத்து கொங்கணி மன்னன் : சிவமாறன் ஆட்சி ஆண்டு : 22 ஆம் ஆண்டு வரலாற்று ஆண்டு : 8-ஆம் நூற்றாண்டு - இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை } முன் பதிப்பு : ஊர்க் கல்வெட்டு எண் } , இடம் : வேடியப்பன் கோயிலில் தெற்கு நோக்கி நிற்கும் நடுகல். குறிப்புரை கல்வெட்டின் கீழே வீரனின் உருவம். ஒரு கையில் வில்லும், மற்றொரு கையில் குறுவாளும் ஏந்தி முன்புறம் இரு அம்புகள் பாய்வது போலவும், காலின் கீழ் ஒரு கெண்டி இருப்பதாகவும் காணக் கிடைக்கிறது. சிவமாறவர்மனின் 22-வது ஆட்சி ஆண்டில், மாவலிவாணராயன் கங்கநாட்டை ஆண்டு வந்தான். அப்போது தகடூரை நோக்கி இந்திரன் படையெடுத்துவர, கண்ணனூர்த் தலைவனான கமியத் தழமன் அப்போரில் இறந்து பட்டான். இதைக் குறிக்கும் நடுகல்லிது.

ஊத்தங்கரை கல்லெட்டு ஆறுமுகக் கவுண்டர் நிலத்தில் உள்ள கல்வெட்டு.

தருமபுரி வட்டம் ஊத்தங்கரை ஊத்தங்கரை மொழி தமிழ் எழுத்து தமிழ் அரசு மன்னன் ஊர்க் கல்லெட்டு στ σόπ : வரலாற்று ஆண்டு கி.பி. 13, 14-ஆம் நூற்றாண்டு - இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } முன் பதிப்பு - } 1 , இடம் : ஆறுமுகக் கவுண்டர் நிலத்தில் உள்ள கல்வெட்டு. குறிப்புரை : துண்டுக் கல்வெட்டுகள். திருவண்ணாமலை உடையநாயனார்க்கு அமுதுபடி,விஸ்வ நாததேவன் சந்தி பூசை, திருமடைப்பள்ளி ஆகியவற்றிற்கு நிவந்தமாக எயில் நாட்டுத் தென் பற்றில் ஒரு நிலம் கொடையளிக்கப் பட்டதைக் குறிக்கிறது.

ஆனந்தூர் மன்னன் : வீரராஜேந்திரன் கால கல்வெட்டு சிவன் கோயில் வெளியே கிடக்கும் பாறை.

தருமபுரி ஆட்சி ஆண்டு : 10-ஆம்ஆண்டு ஊத்தங்கரை வரலாற்று ஆண்டு . 9. 1188 - : ஆனந்தூர் மொழி தமிழ் இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை எழுத்து: தமிழ் } சோழர் முன் பதிப்பு : மன்னன் : வீரராஜேந்திரன் ஊர்க் கல்வெட்டு எண் } 3 இடம் : ஆனந்தூர் சிவன் கோயில் வெளியே கிடக்கும் பாறை. குறிப்புரை: கல்வெட்டின் இறுதியில் ஒரு சூலம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனந்தூர் இறை வனுக்குத் துறுமூருடையாந் எடுத்தான் என்பவன் ஒரு நொந்தா விளக்குக்கு சந்திராதித்தவல் வரை எரிய உரி எண்ணையும், சிவலோகக்காணியும் கொடுத் ததைக் குறிக்கிறது.

ஆனந்தூர் 15நூற்றாண்டு - தற்போது தருமபுரி

தருமபுரி ஊத்தங்கரை வாவாற்று ஆண்டு 2.3. 15- في நூற்றாண்டு ஆனந்தூர் இந்திய கல்வெட்டு گرمون தமிழ் } தமிழ் முன் பதிப்பு விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு முக்கண்ண உடையார் புலிக்குத்திக்கல் கொல்லை. குறிப்புரை : இந்நடுகல் அளவில் மிகப் பெரியது. வீரனின் முன்பாக புலி ஒன்று பாய்ந்த நிலையில் உள்ளது. வீரன் இருகைகளாலும் பிடித்துள்ள ஒரு ஈட்டியால் புலி யைக் குத்துகிறான். ஈட்டியின் முனை புலியின் உடலில் பாய்ந்து மறுபுறத்தில் வந்துள்ளது. வீரனது இடையில் சுச்சையும், வாளும் உள்ளன. புலியின் முன்னும். பின்னுமாக இரண்டு வேட்டைநாய்கள் காட்டப்பட்டுள்ளன. சுல்வெட்டு இச்சிற்பத்தின் இடப்புறத்தில் சிதைந்த நிலையில் உள்ளது கடைசி இரண்டுவரிகள் கல்லெட்டின் துவக்கத்தில் உள்ளன. வீரனைப் பற்றிய செய்திகளைத் தெளிவாக அறிய இயலவில்லை. @

தட்டக்கல் கல்வெட்டு -போசளர் மன்னன் : வீரராமனாதன்

கிருஷ்ணகிரி ஆட்சி ஆண்டு : 37 வட்டம் : கிருஷ்ணகிரி வரலாற்று ஆண்டு : கி.பி. 1291 ஊர் : தட்டக்கல் இந்தியக் கல்வெட்டு மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை : - எழுத்து : தமிழ் முன் பதிப்பு : - அரசு : போசளர் ஊர்க் கல்வெட்டு எண் 2 : மன்னன் : வீரராமனாதன் இடம் : குறிப்புரை: கூத்தாண்டப்பர் கோயில் அருகில் காணப்பாறையில் உள்ளது. போசள மன்னன் வீரராமநாதனது 37வது ஆட்சி ஆண்டில் சித்திரை மாதம் 13 ஆம் தேதியில் விக்கிரமசோழ நாட்டை நாயகம் செய்கின்ற தித்தாழ்வார் மகன் விதியப்பிள்ளை என்பவன் புலி ஒன்று ஆளைக் கடித்த போது வளைந்து குத்தி இறந்து போனான். அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இன்று தொகரப் பள்ளி என வழங்கும் ஊரே அன்று துவறபள்ளி என்று வழங்கிருக்கிறது.

Monday, 16 June 2025

சென்னசந்திரம் கி.பி. 14 ஆம் நூ.ஆ.

கிருஷ்ணகிரி ஆட்சி ஆண்டு வட்டம் : கிருஷ்ணகிரி வரலாற்று ஆண்டு : கி.பி. 14 ஆம் நூ.ஆ. ஊர் : சென்னசமுத்திரம் இந்தியக் கல்வெட்டு மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை : எழுத்து : தமிழ் முன் பதிப்பு : அரசு : ஊர்க் கல்வெட்டு எண் : 2 மன்னன் : இடம் : மலையடிவாரத்தில் உள்ள மலையதிம்மன் கோயில் குறிப்புரை: நடுகல் செய்தி தெளிவில்லாமல் உள்ளது. சுரப்பாலமரசர் மகந்துக்கமரசர் மற்றும் உலோக்க மாணிக்க செட்டி ஆகியோர் குறிப்பிடப் படுகின்றனர். அள பூசல் சண்டைநிகழ்ந்த போது உலோக்க மாணிக்க செட்டி அளவை காத்து இறந்துள்ளான். அமைகிலன் திரிகிலந் முனைகிலந் அணிAநிலந் என ஏதோ நிகழ்வுகள் குறிக்கப்படுகிறது. அங்கவாலை என்று (ஆலையம்) முடிகிறது.

சந்தூர் - கல்வெட்டு - விஜயநகரர் மன்னர் வீரப்பிரதாபதேவராயர் காலம் 1520

த.நா.அ.தொல்லியல்துறை தொடர் எண் : 88 /1973 மாவட்டம் : கிருஷ்ணகிரி ஆட்சி ஆண்டு : சக ஆண்டு 1442 வட்டம் : கிருஷ்ணகிரி வரலாற்று ஆண்டு : கி.பி. 1520 ஊர் : சந்தூர் இந்தியக் கல்வெட்டு மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை : எழுத்து : தமிழ் முன் பதிப்பு : அரசு : விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண் : 1 மன்னன் : வீரப்பிரதாபதேவராயர் இடம் : கழனியிலுள்ள தனிக்கல். குறிப்புரை: கவுண்டர் செம்பாவை ஈராண்டை மாரப்பன் என்பவர் ஏரியைத் தூரெடுத்துக் (மணவொழுக்கி) கட்டியமைக்காக அவருக்கு அந்த ஏரியின் முதல்மடைப் பாசணத்தில் 500 குழி நிலம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த நிலம் தவிர பிற நிலங்களிலிருந்து வரும் கவுண்டு மாணிய வருவாயில் பத்தில் ஒரு பங்கு தரப்பட்டது என்ற செய்தியும் நிலம் 24 அடிக் கோலால் அளக்கப்பட்டது என்ற செய்தியும் இக்கல்வெட்டால் அறியப்படுகின்றன.

பெத்தனப்பள்ளி (கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டி அருகே )நடுகற்கள் - Hero stones Bethanapalli

 பெத்தனப்ள்ளி நடுகற்கள்  கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனப்பள்ளி(கிருஷ்ணகிரி ஒன்றியம்) பஞ்சாயத்தில் உயர்நிலை பள்ளிக்கு எதிரே உள்ள கோவிலில் இரு நடுகற்கள் இருக்கிறது

https://youtu.be/A3YApG_nx00

 ஒன்றி வீரனுடைய நடுகல்

 பூசாரி நடுகல்  பூசாரியின் இரு பக்கமும் கிளி காட்டப்பட்டுள்ளது இது ஒரு சதிக்கல்
 மாருதி மனோகரனுடன் தமிழ்ச்செல்வன்

You tube
Map
https://maps.app.goo.gl/KVygzytC9pXXW9U47
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு தலைவர் நாராயனமூர்த்தி 9448876076
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வரலாற்று ஆசிரியர் ரவி 8122341228வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

பேகேபள்ளி கல்வெட்டு - தெருவின் ஓரத்தில் உள்ள தனிக் கல் -

தருமபுரி ஆட்சி ஆண்டு வட்டம் : ஒசூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 15-ஆம் நூற்றாண்டு - ஊர் : பேகேபள்ளி மொழி தமிழ் இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை...