Friday, 27 March 2020

90.பண்ணந்தூர் சென்னகேசவபெருமாள் கோவில் கல்வெட்டு -MUSEUM &KHRDT

       எங்கள் கணிப்பு படி அங்குள்ள தரவுகள் அடிப்படையில் கோவில் 1770களில் கட்டப்பட்டு இருக்க வாய்ப்பு அதிகம். பிற்பாடு இடியும் நிலையில் இருந்த அந்த கோவிலை வேலாயுத கவுண்டர் அவரது மகன்  பெரியத் தம்பி கவுண்டர் அவர்களால் மீண்டும் புதுபிக்கப்பட்டது என்பது கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. இன்றும் அவர்கள் வழிவந்த இராதாகிருஷ்ணன் அவர்களால் தொடர்ந்து பணிகள் செய்யப்பட்டுவருகிறது 

இந்த கல்வெட்டு படிஎடுத்த சரவணன் 

விஜயகுமார்,பிரகாஷ், தமிழ்செல்வன்.சதாநந்தகிருஷ்ணகுமார் .சரவணன் நால்வரும்  பண்ணந்தூர்  ஆசிரியர் மோதிலால் அழைப்பின் பேரில் சென்றிருந்தோம் . எரிக்கரையில் இருந்த கல்வெட்டை பார்த்துவிட்டு ஊரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்லாம் என பரம்பரை தர்மகர்த்தா இராதாகிருஷ்ணன் எங்களை அழைத்துச் சென்றார் அங்கே 120 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டை படிஎடுத்தோம்.

கல்வெட்டு வாசகம்
                .
1.     1900 பிப்பா வரி 9 ஆம் தேதி முதல் பண்னத்தூரு
2.     கிராமத்தில் ஆதியில் கட்டப் பட்ட சென்னகேஸ்வர சுவாமி கோவில் ஜீரன
3.     மாய் போய் இருந்ததை மேற்படி கிராமத்தில் வன்னிய குல சத்ரியற
4.     கிய கி மு (கிராம முன்சீப்) வேலாயுத கவுண்டர் குமாரர் பெரியத் தம்பி கவுண்ட
5.     ரும் அவர் பிள்ளை தீர்த்த மலைகவுண்டருமாய் இந்த ஆலையமும்
6.      சுற்று பிரகாரமும் முன் கோபுரமும் திருக்குளம் முதல் யாவை
7.     யும் புதுப்பித்து 1902 வருடம் எப்ரல் 16 தேதியில் கும்பாபி
8.     ஷேகம் நடத்தப்பட்டது பெரியதம்பி கவுண்டர்.

   விரைவில் கோவில் பற்றி முழு விவரங்கள் ஆய்ந்து  வெளிப்படுத்தப்படும்  இராதாகிருஷணன் ஆசிரியர் மோதிலால் ஆகியோர் உடன் இருந்து எங்களுக்கு உதவியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தொடர்புக்கு காரணம் திரு எஸ் சரவணன் வேலம்பட்டி ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி


 எங்களால் இயன்றது . நன்றி 

தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும் 

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...