Friday 6 March 2020

86.கிருஷ்ணகிரி அணை கல்வட்டங்கள் CAIRN CIRCLE -in KRP Dam-MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI


       உலகின் சிறந்த நாகரிகங்கள் ஆற்றோரங்களிலே தோன்றியுள்ளன. இவ்விடங்களிலேயே மனிதன் பயிர் செய்ததோடு பண்பாட்டையும் வளர்த்து வந்துள்ளது வரலாற்று உண்மை ஆகும்.
The best civilizations of the world have appeared along the rivers. It is the historical fact that man cultivated and cultivated culture in these areas.
     
      கால ஓட்டம் ஆறுகளின் திசையையும் போக்கையும்  மாற்றும் என்பது அறிவியல் உண்மை இந்த உண்மையோடு வராலாற்றினை இணைத்து பார்ப்பது தான் சரியான வரலாற்றினை வெளிக் கொணரும். The fact that the flow of time will change the direction and course of the rivers is a scientific fact.


 கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து  தலைவர் நாராயணமுர்த்தி தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் சுகவணமுருகன் , சதாநந்த கிருஷ்ணகுமார் காப்பாச்சியர் கோவிந்தராஜ் ஆகியோருடன் குழு இணைந்து கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிருஷ்ணகிரி அணையின் நீர் தேக்கும் பகுதி மற்றும் அதன் அருகாமைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.  இதுபற்றி அருங்காடசியக காப்பாச்சியர் கூறுகையில்
The team has been conducting research on the catchment area of Krishnagiri Dam and its vicinity for over a year.

 இதன் படி பார்த்தால் தின்னகழனியை மையமாக கொண்டு மூன்று கி.மீ சுற்றளவு இடதில் மேற்கொண்ட ஆய்வு பல உண்மைகளை நமக்கு சொல்கிறது. நரசிம்மசசாமி மலையில் உள்ள சிகப்பு ஓவியத் தொகுதி 5000- 7000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது ஆகும். இதுமட்டுமல்லால் அணை நீர் வற்றும்போது வெளிப்படும் கல்திட்டைகளின் மேல் பலகைக்கல் சுமார்  5000 கிலோ எடைக் கொணடதாக இருக்கும். இந்த மூன்று கி.மீ சுற்றளவுக்குள் 18 இடங்களில் இதுவரை கண்டறியப்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் காணப்படுகின்றன. நு◌ாற்றுக்கும் மேற்பட்ட கற்பதுகைகள் இருந்துள்ளன இவற்றில் பெரும்பாலனவை அழிக்கப்பட்டும். புதையல் இருப்பதாக கருதி அழித்தும் விடப்படுகின்றன.பெல்லாரம்பள்ளி பகுதியில் பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் தெல்லியல் அய்வாளர் சதாநந்தகிருஷ்ணகுமர் அவர்களால் கண்டறியப்பட்டுள்ளது .


Accordingly, a three-kilometer perimeter-centered study of the Thinakkalani river tells us many facts. The red paint gallery at Narasimhaswamy Mountain is 5000 to 7000 years old. In addition, the pallets exposed to the water of the dam will weigh about 5000 kg. Ventiland paintings so far found in 18 places within this three kilometer radius. There are more than a dozen fantasies, most of which have been destroyed. Treasure found in the Bellarampalli area
இவற்றின் காலம் 2000 – 3000 ஆண்டுகளாக இன்னும் அவை தெளிவாக காட்சியளிக்கின்றது வியப்பை அளிப்பதாகும். அணை வற்றும் போது  பெருங்கற்கால 15க்கும் மேற்பட்ட  கல்வட்டங்களும்  , 10 க்கும் மேற்பட்ட குத்துக்கற்களும் இப்பகுதியின் தொனைமையான வரலாற்றினை நமக்கு காட்டுகின்றன. இங்கு ஆய்வு செய்ததில் 2000 ஆண்டுகளுக்கு மூற்பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடுகள் குறியீடுகளுடன் கிடைத்துள்ளன. அதேப்போல் ஈமப்பேழைகளில் உடைந்த கால் பகுதிகளும் காணப்படுகிறது. நீர் வற்றும் போது இவை வெளியே தெரிகின்றன. ஆனால் இவற்றைப்பற்றி கிராம மக்களுக்கு தெரியாமையால் சில நேரங்களில் அழிக்கப்பட்டு விடுகின்றது. எனவே கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு பழங்கால மனிதனின் அடையாளங்களை அழிக்க வேண்டாம்.The period of 2000 - 3000 years is still stunning. More than 15 inscriptions and more than 10 piercings show us the history of the region as the dam dries up. The black and red pot tiles that have been studied for 2000 years are available with codes. Similarly, broken limbs are found in the epidural. These look out when the water dries. But the villagers are unaware of this and are sometimes destroyed. So the Krishnagiri Historical Survey and Documenting Committee do not destroy the identities of the ancient man.
  எனவும் அப்பகுதியில் பொதுமக்கள் குறியீட்டுடன் கருப்பு சிவப்பு பாணை ஓடுகள் கிடைக்கும் போது அவற்றை தங்கள் அருகாமை பள்ளி , பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவை நமது மாவட்டத்தின் வரலாற்று தொண்மையை வெளிகொண்டு வரும் .
இந்த தொடர் ஆய்வுப்பணியில் மதிவாணன். கணேசன். விஜயகுமார்.பிரகாஷ்.ரவி, காவேரி, ஶ்ரீராமன், மனோகரன், சுதர்சன் , விமலநாதன், டேவிஸ் உள்ளிட்டோர் செய்து வருகின்றர்








எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும் 

No comments:

Post a Comment