Saturday 28 March 2020

91.புதிய கண்டறிதல் 200 ஆண்டுகளுக்கு முன் தாசம்பட்டு இப்போதய தாசரிப்பள்ளி கல்வெட்டு ஆதாரம் KHRDT

 வரலாற்றில் ஆர்வமுடைய தாசிரிப்பள்ளி நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் திரு திருவேங்கடம் (ஆசிரியர் மன்ற தலைவர்) அவர்கள் மாந்தோப்பில் ஒரு பாறையில் எழுத்துக்கள் இருப்பதாக கூறி அழைத்துச் சென்றார் .எங்களுடன் பள்ளி மாணவர்கள் திவ்யபிரகாஷ் ,பிரகாஷ்ராஜ் ஆகியோர் இடத்தை காட்ட வந்திருந்தனர். அந்த நிலம் லோகேஷ் என்பரின் பூர்வீக நிலமாகும் .அந்த பாறையில் உள்ள எழுத்துக்கள் அடிக்கப்பட்டு 200 ஆண்டுகள் இருக்கும். 
கல்வெட்டு வாசகம்

1.ஹரி

2பவ_ வைகாசி மாதம் 15  ஆம் தேதி

3 தாசம்பட்டில் இருக்கும்

4 பப் பையன் குமரன் நகப்பன்

5.குமரனார் ஷசப்பன் அனுமார்

6.அடித்து வைத்தார்


 அருங்காட்சியக காப்பாச்சியர் கல்வெட்டை படி எடுத்து கூறியதாவது
  200 ஆண்டகளுக்கு முன்பு தாசம்பட்டி என்ற பெயர் தற்போது தாசரிப்பள்ளி என அழைக்கப்படுவதும். இந்த ஊர் உருவாகி 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்பதும்.
      இது தமிழ் வருடங்களில் 8வது வருடமாகிய பவ வருடத்தின் வைகாசி 15 ஆம் தேதி அடிக்கப்பட்டதும் தெரியவருகிறது

 பப்பையன் என்பவரின் மகனாகிய நாகப்பன்( நகப்பன்) அவருடைய மகன் ஷசப்பன் இவ்விடத்தில் அனுமார் அடித்துவைத்தார். என்பதை தெரிவிக்கிறது. (இவர்கள் அவ்வூரின் லோகேஷ் என்பவரின் பரம்பரையைசேர்ந்த முன்னோர்கள் )




பெரியவர்களை விசாரித்தபோது அப்போதைய காலகட்டத்தில்  விஜயவாடா பகுதில் இருந்து வியாசராயர் வழிவந்த மத்த மடத்தினர் இப்பகுதியில் மதத்தை பரப்பி இருப்பதறகான ஆதாரங்கள் உள்ளன. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த புடைப்புசிற்பம் வடிக்கப்பட்டிருக்கலாம். என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்து வந்தவர்கள் ஆந்திரா மச்சாவரம் ஸ்ரீ தாச ஆஞ்சநேயர் நினைவாக தாசம்பட்டு என்ற பெயர் வைத்திருக்கலாம் என கூறினர். இவ்வூரின் பெயர் குறித்து மேலும் ஆராயப்படவேண்டும்.

ஆய்வுப்பணியில் காப்பாட்சியர் , நான்(தமிழ்செல்வன்) திருவேங்கடம் -
இடம்    -
மாவட்டம்    -கிருஷ்ணகிரி
வட்டம்           -கிருஷ்ணகிரி
கிராமம்       - தாசரிப்பள்ளி


எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும் 

No comments:

Post a Comment