Monday 9 March 2020

அருங்காட்சியகத்தில் பரிசளிப்பு நிகழ்வு

ஜெ.எஸ்.ஆர்  கிருஷ்ணாஜி அறக்கட்டளை சார்பாக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இன்று (8/3/20) கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வுக்குழு , விரதன் கெட்டு மற்றும் காட்டினாயனப்பள்ளி தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 30 மாணவிகள் மற்றும் அவர்களின் தாயார்கள் என 60 பேரை வரலாற்றுச் சுற்றுலா அழைத்துச் சென்றது. முதலில் பென்னேஸ்வர மடமும்  மற்றும் கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தனர். காப்பாட்சியர் கோவிந்தராஜ் அனைத்து கல்வெட்டுகள் பற்றியும் விளக்கினார். முடிவில் தலைவர் நாராயணசாமி தலைமையில் காட்டி நாயனப் பள்ளி  பஞ்சாயத்து தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஹாஜி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.சுரேஷ் பாபு, நாராயணன், விஜயகுமார், தமிழரசி மற்றும் தவச் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

































No comments:

Post a Comment