Wednesday 5 February 2020

79- தட்டக்கல் ஒரு வரலாற்று பொக்கிஷம்- கி.பி1291 வீரராமநாதன் கால புலி குத்திப்பட்டான் கல் MUSEUM &KHRDT கிருஷ்ணகிரி வரலாறு கல்வெட்டு

தட்டக்கல் பல வரலாற்று தடயங்களை கொண்டது.அதன் படி ஊருக்கு மேற்கு பக்கம் உள்ள ஒரு புலியைகுத்திய வீரன் நடுகல் கல்வெட்டுடன் உள்ளது.அது வீரராமநாதனின் காலத்தியது ஆகும் கி.பி 1291 எடுக்கப்படட கல்வெட்டு ஆகும்
இக்கல்வெட்டு  ஊர் நாட்டாண்மை செய்யும்  (நாயகம்)தித்தாழ்வார் மகன் விதியப்பிள்ளை தன் மக்களையும் கால்நடைகளையும் காக்கும் பொருட்டு புலியோடு போராடி அதை கொன்று தானும் இறந்து போனான் என்பதை குறிக்கிறது.


வீர இராமநாதன் (ஆட்சிக்காலம் 1254-1295) என்பவன் ஒரு போசாள மன்னனாவான்.
இவனது தந்தையான வீர சோமேசுவரன் தனது பேரரசை இரண்டாகப் பிரித்து நாட்டின் வடக்குப் பகுதியான கர்நாடகப் பகுதியைத் தன் மகன் மூன்றாம் நரசிம்மனுக்கும் தெற்குப் பகுதியான தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியை மற்றொரு மகனான இராமநாதனுக்கும் அளித்தான். நாடு விரிவாக இருந்ததாலும், நிர்வாக வசதிக்காகவும் அமைதியான முறையில் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
வீர இராமநாதன் குந்தாணியை (இன்றைய கிருட்டிணகிரி வட்டம் சின்னகொத்தூர் கிராமம்) தன் தலைநகராகக் கொண்டான். [1] இவனது ஆறாம் ஆட்சியாண்டு முதல் நாற்பத்தொன்றாம் ஆட்சியாண்டுவரையான கல்வெட்டுகள் இங்குக் கிடைக்கின்றன


எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

உலகதமிழாராட்சி முன்னாள் மாணவர்கள் களப்பயணம் கிருஷ்ணகிரி மாவட்டம்

பகுதி 1 -தொட்ட ஆர்தள்ளி நடுகற்கள் - விளக்கம் காப்பாச்சியர் கோவிந்தராஜ் முன்னால் மாணவர்கள் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் -கிருஷ்ணகிரி மாவட்ட...