Friday 10 April 2020

95.அத்திமுகம் கோவில் ஐராவத ஈசுவரர் கோயில் வரலாறு பஞ்சலிங்க சன்னதி பகுதி -1 -MUSEUM &KHRDT

ஐராவத ஈசுவரர் கோயில்    கிருட்டிணகிரி மாவட்டத்தில்  சூளகிரி ஒன்றியம்  அத்திமுகம் என்ற ஊரில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
கோவில்ன் உள்ளே நுழைந்தவுடன் நமக்கு மண்டபம் போன்று காட்சியளிக்கும்  90 அடி நீண்ட பஞ்சலிங்கேஷ்வரர் கோவில் நம் கண்களுக்கு படும் 
இங்குள்ள கல்வெட்டுகளின் ஆதாரத்துடன் ஒப்பிடும் போது குறைந்தது 900 ஆண்டுகளுக்கு முந்தய கோவிலாக  கருதலாம் 
இந்த மண்டபம் கோவில் வளாகத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.
இந்த கோவில் ஐந்து  கருவறைகள் நான்கு இடைவெளிகளுடன் அமைந்துள்ளது . ஒவ்வோர் சிவலிங்கத்தின் எதிரிலும்   ஒரு நந்திதேவர்க காணப்படுகிறார். 

 சிவலிங்கம் ஒவ்வொன்றும் சதுர ஆவுடையாரை கொண்டுள்ளது.  ஐந்து லிங்கங்களும்  உருவில் வேறுபடுகின்றன . அதேப்போல் நந்திதேவர் வடிவமைப்பிலும் வேறுபாடு காணப்படுகிறது
 கோவிலின் வடிவமைப்பினை வைத்துப்பார்க்கையில் இது பிற்கால சோழர்களின் காலத்தில் கட்டப்பட்டது எனலாம்
 சைவ சமயத்தில் முழுமுதற்கடவுளான சிவபெருமானின்  முகங்கள் சிவ முகங்கள் என அழைக்கப்படுகிது.. அவை
1.சத்யோஜாதம்
பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானைக் குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன் வெண்மை நிறத்தில்,பிரம்மன் முன் தோன்றினார்.இந்த முகமே சத்யோஜாதம் ஆகும்


 2.வாமதேவம்
மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும் ,மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்மதேவனுக்கு காட்சி கொடுத்தா.இந்த முகமே பிரம்மதேவனுக்கு காட்சி கொடுத்தார்.இந்த முகமே வாமதேவம் ஆகும்.

3.தத்புருஷம்

அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசை நோக்கி சிவனை குறித்து தவம் செய்தார். இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார்.இறைவனின் இந்த முகமே தத்புருஷம் ஆகும்.பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார் .காயத்ரீயை வணங்கி வருபவருக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்





4.அகோரம்
பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் முக்கண் கொண்டவராக நெருப்பினையும்,வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார். இறைவனின் இந்த முகம் அகோரம் என்று பெயர் பெற்றது.

5.ஈசானனம்
கடைசியாக பிரம்ம தேவன் ஆகயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.இறைவன் சாம்பல் வண்ணத்தில் முக்கண் கொண்ட ,இளமதியை சென்னியில் சூ டியவாரும்,கோரைப்பற்கள் கொண்ட உருவமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார்.இறைவனின் இந்த முகமே ஈசானனம் எனப்படும்





ஊர் மக்களால் மற்றொரு கருத்து சொல்லப்படுகிறது. இங்குள்ள பஞ்சலிங்க சன்னதி இதை வழிபட்டால்   காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் (நிலம்), திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் (நீர்), திருவண்ணாமலை அண்ணாமலையார் (நெருப்பு), காளஹஸ்தி காளத்தீஸ்வரர் (காற்று), சிதம்பரம் நடராஜர் (ஆகாயம்) அகிய கோவில்களுக்கு சென்று வழிபட்டதாக கருதப்படும் என்றார்கள் அதுவும் ஏற்க தக்கதே 
 கோவிலில் இருந்த ஒரு நந்தி காணாமல் போய்உள்ளதாக தெரிவித்தனர் . முன்மன்டப நீண்ட தோற்றம் 











அத்திமுகம் ஊர், கிருட்டிணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒசூருக்கு முன்னால் குறுக்கே செல்லும் பேரண்டப்பள்ளி-பாகலூர் சாலையில், பாகலூரை நோக்கி 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒசூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

கோயில்களின் வரலாற்றினை பதிவிட நண்பர் பி.டி.ஒ. அலுவலகத்தின் நாகராஜ் கேட்டுக் கொண்டார் ,அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .அத்திமுகத்தில் எங்களுக்கு பேருதவியாய் இருந்தவர் புருஷோத்தமன் அவர்கள் அவருக்கும் நன்றி .அத்திமுகம் கோவில் பற்றிய ஒரு புத்தகம் வெளியிட அச்சிட்டு தயாராக வைத்திருக்கும் அண்ணன் சுவவணமுருகன் அவர்களுக்கும் நன்றி
எங்களால் இயன்றது .
 நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076
செயலாளர் டேவிஸ்                     -9487723678
பொருளாளர் விஜயகுமார்      --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் 
பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு                              தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க   வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு  கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,   கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி     கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி 
அறக்கட்டளை நடத்துவதாகும்

No comments:

Post a Comment