Saturday, 7 June 2025

தட்டக்கல் -பேசாள மன்னன் வீரராமநாதன் கால கல்வெட்டு - கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டு

கிருஷ்ணகிரி ஆட்சி ஆண்டு : 37 வட்டம் : கிருஷ்ணகிரி வரலாற்று ஆண்டு : கி.பி. 1291 ஊர் : தட்டக்கல் இந்தியக் கல்வெட்டு மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை : - எழுத்து : தமிழ் முன் பதிப்பு : - அரசு : போசளர் ஊர்க் கல்வெட்டு எண் 2 : மன்னன் : வீரராமனாதன் இடம் : குறிப்புரை: கூத்தாண்டப்பர் கோயில் அருகில் காணப்பாறையில் உள்ளது. போசள மன்னன் வீரராமநாதனது 37வது ஆட்சி ஆண்டில் சித்திரை மாதம் 13 ஆம் தேதியில் விக்கிரமசோழ நாட்டை நாயகம் செய்கின்ற தித்தாழ்வார் மகன் விதியப்பிள்ளை என்பவன் புலி ஒன்று ஆளைக் கடித்த போது வளைந்து குத்தி இறந்து போனான். அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இன்று தொகரப் பள்ளி என வழங்கும் ஊரே அன்று துவறபள்ளி என்று வழங்கிருக்கிறது.

No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...