அரசு அருங்காட்சியகம் & KHRDT கிருஷ்ணகிரி வரலாறு-by JSR கிருஷ்ணாஜி அறக்கட்டளை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Wednesday, 18 March 2026
17th Century Hero Stones - Vijayanagara Period -17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் - விஜயநகர காலம்
குதிரை தாவும் நிலையில் காட்டப்பட்டுள்ளது அதன்மேல் ஒரு வீரன் குதிரையின் கடிவாளத்தை பிடித்த வாரும் மறுக்கையில் வாளை ஏந்தியவாறும் காட்டப்பட்டுள்ளான் குதிரை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது குதிரையின் மற்றொரு கயிற்றை அவனுடைய சேவகன் பிடித்துக் கொண்டிருக்கிறான் குதிரைக்கு பின்னால் இவன் தலைவன் என்பதை நேசிக்கும் வகையில் அரச சின்னங்களில் ஒன்றான கண்ணாடி போன்ற ஒன்றை அவன் தூக்கி வருகிறான் இவன் போரில் இறந்த காரணத்தால் இவனுக்கு நடுதல் எடுக்கப்பட்டுள்ளது இவன் இறந்த பின்பு இவனுடைய மனைவி உடன்கட்டை ஏறி உயிர்த்திருக்கிறான் அவள் கையில் மது குடுவையும் ஒரு கையில் சிறு கம்பு போன்ற ஒன்றும் காணப்படுகிறது இது 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் ஆகும்
The hero stone depicts a warrior mounted on a galloping horse, firmly holding the reins in one hand and wielding a sword in the other. The horse is magnificently decorated, showcasing the warrior's status. An attendant is seen holding another rope attached to the horse.
Behind the horse, a follower carries a mirror-like object, which is one of the royal insignias, signifying that the warrior was a leader or a person of high rank. This hero stone (Nadukal) was erected to honor him after he fell in battle.
Following his death, his wife performed Sati (self-immolation). She is depicted holding a mead flask (wine jar) in one hand and a small stick-like object in the other. This memorial stone dates back to the 17th century.
https://youtu.be/lRlkM4D6BCA
வழக்கமாக ஒரு வீரனின் பக்கத்தில் தான் உடன்கட்டை ஏறிய பெண்ணின் உருவம் காட்டப்பட்டு இருக்கும் ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக உடன்கட்டை ஏறிய பெண்ணுக்கு தனியான நடு கல் எடுக்கப்பட்டுள்ளது. கணவன் போரில் வேறு எங்கோ இறந்துவிட்ட காரணத்தால் இங்கு இவர் தனியாக தீமூட்டி இறந்து இருப்பதை இந்த தனி நாடுகள் உணர்த்துகிறது வழக்கம் போல கையில் மது குடுவையுடன் காணப்படுகிறார் இந்த உருவத்தை வைத்து இதனுடைய காலம் 17 ஆம் நூற்றாண்டு என நாம் கூறலாம்.
Unique Features of the Memorial Stone
Typically, the image of a woman who committed Sati is depicted alongside the warrior. However, this instance is distinctive as a separate memorial stone has been erected specifically for the woman.
This individual hero stone signifies that since her husband died elsewhere in battle, she performed the ritual of self-immolation (Sati) independently at this location. As is characteristic of such depictions, she is seen holding a mead flask. Based on these iconographic features, we can conclude that this memorial dates back to the 17th century.
இரண்டு வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல். ஒரு கையில் கேடையமும், ஒரு கையில் வாளும் ஏந்தி உள்ளனர்
Memorial Stone for Two Warriors
This hero stone (Nadukal) was erected in honor of two warriors. They are depicted holding a shield in one hand and a sword in the other, signifying their preparedness and bravery in combat.
இந்த வீரன் , ஒரு கையில் கட்டாரியும், ஒருகையில் வாளும் இடையில் ஒரு வாளும் வைத்துள்ளான்.
இரண்டு வீரர்கள் போரில் இறந்து அவர்களின் மனைவிகளும் உடன் கட்டை ஏறியதை இந்த நடுகல் காட்டுகிறது
நன்றி கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ்
https://maps.app.goo.gl/y91RLCKEB6YU9vLF8
Tuesday, 17 March 2026
கெம்பட்டி குதிரை வீரன் நடுகல் ( தளி ) "Kempatti Horse Warrior Hero Stone"
குதிரை வீரன் நடுகல் என்பது போர்க் களத்திலோ அல்லது கால்நடைகளை மீட்கும் பூசலிலோ (ஆநிரை மீட்டல்/கவர்தல்), குதிரை மீது அமர்ந்து வீரமுடன் போரிட்டு உயிர்நீத்த வீரனின் நினைவைப் போற்றும் வகையில் எடுக்கப்படும் நடுகல்லாகும்.
பண்டைய தமிழர்களின் வீரத்தையும், போர் முறைகளையும் அறிந்துகொள்ள இந்த நடுகற்கள் மிகச் சிறந்த தொல்லியல் சான்றுகளாகும்.
இந்த நடுகல்லின் காலம் 150 லிருந்து 200 வருடங்கள் வரை இருக்கக்கூடும் இதில் வீரன் குதிரையும் இல்லாமல் ஒரு கையில் வாளையும் ஒரு
கையில் சாட்டையும் பிடித்துள்ளவாறு காட்டப்பட்டுள்ளான் குதிரை ஓடும் நிலையில் காட்டப்பட்டுள்ளது
A "Kuthirai Veeran Nadukal" (Horse-Rider Hero Stone) is a memorial stone erected to honor a warrior who died fighting bravely on horseback, either on a battlefield or during a skirmish to recover/capture cattle (cattle raiding).
These hero stones serve as excellent archaeological evidence for understanding the valor and warfare methods of the ancient Tamils.
This particular hero stone is estimated to be between 150 and 200 years old. In this depiction, the warrior is shown holding a sword in one hand and a whip in the other, unmounted (without the horse directly under him), while the horse itself is portrayed in a running or galloping posture.
நன்றி கபிலன் - பேருஅள்ளி
Tuesday, 3 March 2026
விஜயநகர கால அரிய நீர்பாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு. எயில்நாட்டு - கல்லோகச் சக்கரவர்த்தி அனவேந்தார்
வெங்கடாபுரம் கல்வெட்டு
இடம்: ஊத்தங்கரை வட்டம், நடுப்பட்டி பஞ்சாயத்து, வெங்கடாபுரம் பழனி கவுண்டர் என்பவரது நிலத்தில், புளிய மரத்தடியில் உள்ள பாறையில் உள்ள கல்வெட்டு.
காலம்: பொ.ஆ. 17ம் நூற்றாண்டு.
youtube link
ஊத்தங்கரையை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் விஜயநகர கால அரிய நீர்பாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு. எயில்நாட்டு - கல்லோகச் சக்கரவர்த்தி அனவேந்தார் ஆட்சியின் கீழ்
https://youtu.be/SAFLktTXPMg
ஊத்தங்கரையை அடுத்த வெங்கடாபுரத்தில் அரிய நீர்பாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, கிருஷ்ணகிரி அருங்காட்சியகம், தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டு இம்மாவட்டத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கண்டறிந்து வெளிப்படுத்திவருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊத்தங்கரை வட்டத்தில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது கெண்டயனூர் லட்சுமணன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் வெங்கடாபுரம் பழனி கவுண்டர் என்பவரது நிலத்தில், புளியமரத்தின் அடியில் உள்ள பாறையில் சுமார் 400 ஆண்டுகளுக்குமுற்பட்ட காலத்தை சேர்ந்த கல்வெட்டை கண்டறிந்து படித்து ஆய்வு செய்யப்பட்டது. இது ஒரு அரிய கல்வெட்டு என்று கூறிய தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலரும், கிருஷ்ணகிரி அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியருமான கோவிந்தராஜ் மேலும் இதுபற்றி கூறியதாவது: தமிழகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர் போன்ற பெருவேந்தர்கள் காலத்தில் பல ஏரிகளை வெட்டி நீர் பாசனத்தை பெருக்கி விவசாயம் வளர்க்கப்பட்டதை பல கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம். ஆனால் மேட்டு நிலப்பகுதியாகிய கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதியில் இத்தகையப் பணிகளைக் காண்பது அறிது. மேலும் பெரிய மன்னர்களின் நேரடி கவனத்தை இப்பகுதி பெறவில்லை. சங்க காலம் முதலே குறுநிலத் தலைவர்களாலேயே ஆளப்பட்டு வந்துள்ளது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டுகூட இப்பகுதியை எந்த விஜயநகர மன்னர் ஆண்டார் என்பதைக் குறிப்பிடாமல் அப்போது இப்பகுதியை “கலிலோக சக்கரவர்த்தி அனவேந்தராமப் பெருமாள்” என்னும் தலைவன் ஆண்டுவந்ததாகக்கூறுகிறது. அப்போது பள்ளி இனத்தை சேர்ந்த “கொடுக்கன் மாசாத்தன்” என்பவன் குப்பை நத்தத்தில் குட்டை ஒன்றை சொந்தமாக வெட்டி அந்த நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்து அதில் விளையும் நெல்லில் ஒரு பகுதியை வரியாக செலுத்துவேன் என்று இக்கல்வெட்டு வாயிலாக உறுதியளித்துள்ளான். இதற்கு சம்மதம் தெரிவித்து நாட்டவர்களும், சீயாலமுடையாரும் கையெழுத்திட்டுள்ளனர்.இக்கல்வெட்டு காணப்படும் பாறைக்கு 100 அடி முன்னால் ஒரு குட்டை தற்போதும் காணப்படுகிறது. எனவே இந்த கல்வெட்டின் வாயிலாக 400 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டுப் பகுதியான இங்கு குட்டை வெட்டி நீர்வளத்தைப் பெருக்கி விவசாயத்தை வளர்க்க இப்பகுதியை ஆண்ட குறுநிலத் தலைவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
மேலும் இக்கல்வெட்டு குறிப்பிடும் குப்பை நத்தம் என்ற பெயரில் 2 கிலோமீட்டர் தொலைவில் ஊர் ஒன்று உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாபுரமும் குப்பைநத்தத்தின் ஒரு பகுதியாக இருந்ததை இக்கல்வெட்டு வாயிலாக தெரிந்துக் கொள்கிறோம். எயில்நாடு என்னும் பகுதி கிருஷ்ணகிரி வட்டத்தை குறிப்பதாக இதுவரை கருதி வந்தோம். ஆனால் இக்கல்வெட்டு 400 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்தங்கரை வட்டத்தின் இப்பகுதியும் எயில் நாட்டிற்குள் இருந்ததை தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டார்.
இக்கல்வெட்டு ஆய்வின்போது கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவக்குமார், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு செயலர் தமிழ்செல்வன், ஆசிரியர் பாலாஜி , மூ.சினேகா
முனைவர் பட்ட ஆய்வாளர்
பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
map
https://maps.app.goo.gl/opqtQ93EZMNY5E8N6
00000
Sunday, 1 March 2026
10 ஆம் நூற்றாண்டு இளவம்பாடி நடுகல் கல்வெட்டு - நடுகல்லின் உருவ அமைப்பு அந்த காலகட்டத்தில் எப்படி மாறியது என்பதற்கான சிறந்த உதாரணம்
10 ஆம் நூற்றாண்டு இளவம்பாடி நடுகல் கல்வெட்டு - நடுகல்லின் உருவ அமைப்பு அந்த காலகட்டத்தில் எப்படி மாறியது என்பதற்கான சிறந்த உதாரணம்
"The 10th-centuryelavambadi Hero Stone inscription serves as an excellent example of how the physical structure and iconography of hero stones evolved during that period."
https://youtu.be/jffIjP0322k
10 ஆம் நூற்றாண்டு இளவம்பாடி நடுகல் கல்வெட்டு - நடுகல்லின் உருவ அமைப்பு அந்த காலகட்டத்தில் எப்படி மாறியது என்பதற்கான சிறந்த உதாரணம்
https://maps.app.goo.gl/opqtQ93EZMNY5E8N6
https://maps.app.goo.gl/opqtQ93EZMNY5E8N6
Subscribe to:
Comments (Atom)
17th Century Hero Stones - Vijayanagara Period -17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் - விஜயநகர காலம்
குதிரை தாவும் நிலையில் காட்டப்பட்டுள்ளது அதன்மேல் ஒரு வீரன் குதிரையின் கடிவாளத்தை பிடித்த வாரும் மறுக்கையில் வாளை ஏந்தியவாறும் காட்டப்பட்டு...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6


















































