Monday, 18 May 2026

சூளகிரி அருகே உள்ள மாரண்டபள்ளி பஞ்சாயத்தில் இருக்கும் தொட்டனூர் என்ற ஊரில் கோயில் நிலத்தில் உள்ள கல்வெட்டு

 




650 வருடங்களுக்கு முன் சூளகிரியின் பெயர் அஸ்தகிரி ஓசூர் அறம் கிருஷ்ணன் அவர்கள் கொடுத்த தகவலின் படி கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் தலைவர் நாராயணமூர்த்தி அவர்களின் தலைமையில் சூளகிரி அருகே உள்ள மாரண்டபள்ளி பஞ்சாயத்தில் இருக்கும் தொட்டனூர் என்ற ஊரில் கோயில் நிலத்தில் உள்ள கல்வெட்டை படி எடுத்தோம் அந்த கல்வெட்டு பல புதிய தகவல்களை தருகிறது என அருங்காட்சிய காப்பாச்சியர் கோவிந்தராஜ் கூறினார். கோவில் நிலத்தில் இந்த கல்வெட்டு இன்னும் கிராமத்து மக்கள் மெட்டுக்கால் அப்ப பெருமாள் என்று வழிபட்டு வருகின்றனர். இந்த பெயரே 650 வருடங்கள் பழமையானது என்பது கல்வெட்டு வாயிலாக தெரிய வருகிறது. கல்வெட்டில் பெரிதாக சக்கரம் வரையப்பட்டுள்ளது அதன் இரண்டுபக்கமும் சந்திர சூரியனும் சக்கரத்தின் அருகே சங்கும் , குத்து விளக்கும் காணப்படுகிறது. இந்த பஞ்சாயத்தின் பெயரான மாராண்டப்பள்ளி 650 வருடங்களுக்கு முன் முடமாராண்டான்பள்ளி என்பதும் இக் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது. இதுவரை கிருண்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்படாத பலகைவாவிபற்று விஜயநகர மன்னர் வீர கம்பன உடையார் காலத்தில் இருந்ததை கல்வெட்டு கூறுகிறது .பற்று என்பது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட பகுதி தற்போதுள்ள தாலுக்கா போன்ற ஒரு பகுதி என்பது குறிப்பிடதக்கது. கல்வெட்டில் அஸ்தகிரியில் உள்ள வரதராச பெருமாள் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட தானத்தைப்பற்றி கூறுகிறது .தற்போதுள்ள சூளகிரி 650 வருடங்களுக்கு முன் அஸ்தகிரி என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. தற்போதும் அந்த சூளகிரியில் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள வரதராசபெருமாள் கோயில் உள்ளது. அஸ்தகிரி என்பது சூரியன் மறையும் மலை என்பதற்கு ஏற்ப வரதராசபெருமாள் கோவில் மேற்கு நோக்கி மலையின் மேற்கு பக்கம் இருப்பது குறிப்பிடதக்கது என்று கூறினார் இந்த ஆய்வுப்பணியில் சரவணக்குமார்ராமச்சந்திரன் , ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் , ஊரை சேர்ந்த மாரப்ப கவுடா ஆகிறோர் ஈடுபட்டனர்

Saturday, 16 May 2026

பேரிகை ஏரிக்கரை நடுகல்

 



பேரிகை ஏரியில், 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒய்சாளர்களின் கடைசி அரசன் வீர வல்லாளனின் நில தானம் கொடுத்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த அறம் கிருஷ்ணன் தலைமையில், பிரியா, மஞ்சுநாத், வெங்கடாசலபதி, மஞ்சுநாத் குமாரி, ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்ட கள ஆய்வில் இந்தக் கல்வெட்டு இருப்பதை அறம் வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

ஒய்சாள அரசன் மூன்றாம் நரசிம்மனின் மகன்தான் மூன்றாம் வீர...


வல்லாளன் (கி.பி. 1291–1342). ஒய்சாள அரசன் வீர ராமநாதனுக்குப் பிறகும் ஒய்சாள அரசு பல்வேறு பகுதியாக பிரிந்திருந்த நிலையில் வீர வல்லாளன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு ஒய்சாள அரசு மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு, முகலாய படை எடுப்பிலிருந்து தென்பகுதியைக் காப்பாற்ற தனது இறுதி காலம் வரை போராடியது மட்டுமல்லாமல், தவிழ் (தமிழ்) ஒன்றிணைந்த பகுதிகளுக்கு ஒய்சாளர்களின் கடைசி அரசனாகவும் இருந்தான். இப்பகுதியில் இவனோடு ஒய்சாளர்களின் ஆட்சி முடிவு பெற்றது.

ஓசூரிலிருந்து பாகலூர் வழியாக 12 கி.மீ தூரம்...யணம் செய்தால் பேரிகை வருகிறது.

பேரிகை பஸ் நிலையத்தின் எதிர்பக்கம் ஏரியில்தான் ஒய்சாள அரசன் வீர வல்லாளனின் கல்வெட்டு இருக்கிறது.

ஏரியின் கிழக்குக் கரைப் பகுதியில் ஒட்டியிருக்கும் இக்கல்வெட்டு தூண், நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்டதாக ஏரிக்கரையை ஒட்டி நடப்பட்டுள்ளது.

14ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட இந்தக் கல்வெட்டானது ஒய்சாள அரசன் வீர வல்லாளன் காலத்தில் இங்கு குறிப்பிடும் பேரிகையில் உள்ள திருவந்தீகரமுடைய நாயனாருக்கு நிலத்துண்டுகள் கொடுக்கப்பட்டதை குறிப்பிடுகிறது.



நன்றி அறம் கிருஷ்ணன் 

https://maps.app.goo.gl/Rn3dcrk5VkU4G5d26



உலகம் அழிந்து போன பெருமாள் கோயில்

 

https://maps.app.goo.gl/81M1fFiR2byRZj1P7

















குடிமேனள்ளி வீட்டருகே இருக்கும் இரண்டு நடுகற்கள்

 





பண்ணப்பள்ளி நடுகல்

 


https://maps.app.goo.gl/h3wW9RpYCdUs82927



செல்லகுட்டப்பட்டி ஆத்தோரம் வீட்டின் பக்கத்தில் உள்ள நடுகல்

 




சூளகிரி அருகே உள்ள மாரண்டபள்ளி பஞ்சாயத்தில் இருக்கும் தொட்டனூர் என்ற ஊரில் கோயில் நிலத்தில் உள்ள கல்வெட்டு

  650 வருடங்களுக்கு முன் சூளகிரியின் பெயர் அஸ்தகிரி ஓசூர் அறம் கிருஷ்ணன் அவர்கள் கொடுத்த தகவலின் படி கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் கிருஷ்...