அரசு அருங்காட்சியகம் & KHRDT கிருஷ்ணகிரி வரலாறு-by JSR கிருஷ்ணாஜி அறக்கட்டளை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 3 March 2026
விஜயநகர கால அரிய நீர்பாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு. எயில்நாட்டு - கல்லோகச் சக்கரவர்த்தி அனவேந்தார்
வெங்கடாபுரம் கல்வெட்டு
இடம்: ஊத்தங்கரை வட்டம், நடுப்பட்டி பஞ்சாயத்து, வெங்கடாபுரம் பழனி கவுண்டர் என்பவரது நிலத்தில், புளிய மரத்தடியில் உள்ள பாறையில் உள்ள கல்வெட்டு.
காலம்: பொ.ஆ. 17ம் நூற்றாண்டு.
youtube link
ஊத்தங்கரையை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் விஜயநகர கால அரிய நீர்பாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு. எயில்நாட்டு - கல்லோகச் சக்கரவர்த்தி அனவேந்தார் ஆட்சியின் கீழ்
https://youtu.be/SAFLktTXPMg
ஊத்தங்கரையை அடுத்த வெங்கடாபுரத்தில் அரிய நீர்பாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, கிருஷ்ணகிரி அருங்காட்சியகம், தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டு இம்மாவட்டத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கண்டறிந்து வெளிப்படுத்திவருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊத்தங்கரை வட்டத்தில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது கெண்டயனூர் லட்சுமணன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் வெங்கடாபுரம் பழனி கவுண்டர் என்பவரது நிலத்தில், புளியமரத்தின் அடியில் உள்ள பாறையில் சுமார் 400 ஆண்டுகளுக்குமுற்பட்ட காலத்தை சேர்ந்த கல்வெட்டை கண்டறிந்து படித்து ஆய்வு செய்யப்பட்டது. இது ஒரு அரிய கல்வெட்டு என்று கூறிய தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலரும், கிருஷ்ணகிரி அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியருமான கோவிந்தராஜ் மேலும் இதுபற்றி கூறியதாவது: தமிழகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர் போன்ற பெருவேந்தர்கள் காலத்தில் பல ஏரிகளை வெட்டி நீர் பாசனத்தை பெருக்கி விவசாயம் வளர்க்கப்பட்டதை பல கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம். ஆனால் மேட்டு நிலப்பகுதியாகிய கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதியில் இத்தகையப் பணிகளைக் காண்பது அறிது. மேலும் பெரிய மன்னர்களின் நேரடி கவனத்தை இப்பகுதி பெறவில்லை. சங்க காலம் முதலே குறுநிலத் தலைவர்களாலேயே ஆளப்பட்டு வந்துள்ளது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டுகூட இப்பகுதியை எந்த விஜயநகர மன்னர் ஆண்டார் என்பதைக் குறிப்பிடாமல் அப்போது இப்பகுதியை “கலிலோக சக்கரவர்த்தி அனவேந்தராமப் பெருமாள்” என்னும் தலைவன் ஆண்டுவந்ததாகக்கூறுகிறது. அப்போது பள்ளி இனத்தை சேர்ந்த “கொடுக்கன் மாசாத்தன்” என்பவன் குப்பை நத்தத்தில் குட்டை ஒன்றை சொந்தமாக வெட்டி அந்த நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்து அதில் விளையும் நெல்லில் ஒரு பகுதியை வரியாக செலுத்துவேன் என்று இக்கல்வெட்டு வாயிலாக உறுதியளித்துள்ளான். இதற்கு சம்மதம் தெரிவித்து நாட்டவர்களும், சீயாலமுடையாரும் கையெழுத்திட்டுள்ளனர்.இக்கல்வெட்டு காணப்படும் பாறைக்கு 100 அடி முன்னால் ஒரு குட்டை தற்போதும் காணப்படுகிறது. எனவே இந்த கல்வெட்டின் வாயிலாக 400 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டுப் பகுதியான இங்கு குட்டை வெட்டி நீர்வளத்தைப் பெருக்கி விவசாயத்தை வளர்க்க இப்பகுதியை ஆண்ட குறுநிலத் தலைவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
மேலும் இக்கல்வெட்டு குறிப்பிடும் குப்பை நத்தம் என்ற பெயரில் 2 கிலோமீட்டர் தொலைவில் ஊர் ஒன்று உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாபுரமும் குப்பைநத்தத்தின் ஒரு பகுதியாக இருந்ததை இக்கல்வெட்டு வாயிலாக தெரிந்துக் கொள்கிறோம். எயில்நாடு என்னும் பகுதி கிருஷ்ணகிரி வட்டத்தை குறிப்பதாக இதுவரை கருதி வந்தோம். ஆனால் இக்கல்வெட்டு 400 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்தங்கரை வட்டத்தின் இப்பகுதியும் எயில் நாட்டிற்குள் இருந்ததை தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டார்.
இக்கல்வெட்டு ஆய்வின்போது கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவக்குமார், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு செயலர் தமிழ்செல்வன், ஆசிரியர் பாலாஜி , மூ.சினேகா
முனைவர் பட்ட ஆய்வாளர்
பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
map
https://maps.app.goo.gl/opqtQ93EZMNY5E8N6
00000
Sunday, 1 March 2026
10 ஆம் நூற்றாண்டு இளவம்பாடி நடுகல் கல்வெட்டு - நடுகல்லின் உருவ அமைப்பு அந்த காலகட்டத்தில் எப்படி மாறியது என்பதற்கான சிறந்த உதாரணம்
10 ஆம் நூற்றாண்டு இளவம்பாடி நடுகல் கல்வெட்டு - நடுகல்லின் உருவ அமைப்பு அந்த காலகட்டத்தில் எப்படி மாறியது என்பதற்கான சிறந்த உதாரணம்
"The 10th-centuryelavambadi Hero Stone inscription serves as an excellent example of how the physical structure and iconography of hero stones evolved during that period."
https://youtu.be/jffIjP0322k
10 ஆம் நூற்றாண்டு இளவம்பாடி நடுகல் கல்வெட்டு - நடுகல்லின் உருவ அமைப்பு அந்த காலகட்டத்தில் எப்படி மாறியது என்பதற்கான சிறந்த உதாரணம்
https://maps.app.goo.gl/opqtQ93EZMNY5E8N6
https://maps.app.goo.gl/opqtQ93EZMNY5E8N6
Wednesday, 18 February 2026
ஓசூர் 'கெனில்வொர்த் கோட்டையின்' (Kenilworth Castle)
ஓசூர் கெனில்வொர்த் கோட்டை மாளிகை 1. அறிமுகம் மற்றும் பின்னணி ஆங்கிலேயர்
ஆட்சிக்காலத்தில், சேலம் மாவட்டத்தின் கலெக்டராக இருந்த ஹாரி பிரட் (Harry Brett)
என்பவரால் ஓசூரில் இம்மாளிகை கட்டப்பட்டது. 1861 முதல் 1864 வரை ஓசூர் மாவட்டத்
தலைநகராக இருந்த காலத்தில், இங்கிலாந்தின் புகழ்பெற்ற 'கெனில்வொர்த் கோட்டையின்'
மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது. 2. கட்டிடக்கலை மற்றும்
வடிவமைப்பு • கட்டடக்கலை பாணி: கோதிக் (Gothic) பாணி. • வடிவமைப்பு: இங்கிலாந்தின்
வார்விக்ஷையர் (Warwickshire) பகுதியில் இருந்த 7 ஏக்கர் பரப்பளவிலான கெனில்வொர்த்
கோட்டையின் அமைப்பை ஒட்டி இது கட்டப்பட்டது. சர் வால்டர் ஸ்காட் எழுதிய புதினத்தில்
விவரிக்கப்பட்ட கோட்டையின் சிறப்புகளை அடிப்படையாகக் கொண்டு இதன் வரைபடம்
உருவாக்கப்பட்டது. • சிறப்பம்சங்கள்: இத்தாலிய பாணியிலான கூரை அமைப்புகள் மற்றும்
மாளிகையைச் சுற்றிப் பாதுகாப்பு அகழிகள் அமைக்கப்பட்டிருந்தன. • பொறியாளர்:
ஹமில்டன் (Hamilton) என்ற ஆங்கிலேயப் பொறியாளரின் மேற்பார்வையில் இப்பணிகள்
நடைபெற்றன. 3. வரலாற்றுத் தகவல்கள் மற்றும் துயரச் சம்பவங்கள் இம்மாளிகையின் வரலாறு
எதிர்பாராத திருப்பங்களும் சோகங்களும் நிறைந்தது: • காதல் நிமித்தம்: தனது வருங்கால
மனைவி (லண்டனைச் சேர்ந்த செல்வச் சீமாட்டி), "லண்டனில் உள்ளதை போன்ற மாளிகை
இருந்தால் மட்டுமே ஓசூர் வருவேன்" என்று நிபந்தனை விதித்ததால் பிரட் இதனை
உருவாக்கினார். • பதவி நீக்கம்: அரசுப் பணத்தைக் கையாடல் செய்து இம்மாளிகையைக்
கட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஹாரி பிரட் பதவி நீக்கம் செய்யப்பட்டார். •
பயன்படுத்தப்படாத மாளிகை: ஹாரி பிரட்டின் மனைவி ஓசூருக்கு வரவில்லை. சில
குறிப்புகளின்படி அவர் வரும் முன்பே இறந்துவிட்டார் அல்லது திருமணம் நின்று போனது.
இதனால், "கட்டின மாளிகையில் ஒருநாளும் வசிக்கவில்லை" என்ற பழமொழி ஓசூர் மக்களிடையே
உருவானது. • விற்பனை: 1871-இல் இக்கோட்டையைச் சென்னை மாகாண அரசுக்கு விற்றுவிட்டு
பிரட் லண்டன் திரும்பினார். 4. பிற்காலப் பயன்பாடு பிரட்டிற்குப் பிறகு சேலம்
மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற வால்டன் இல்லியட் லோக்கார்ட் (Walton Elliot
Lockhart), ஓசூரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த மாளிகையிலேயே தனது மனைவியுடன்
வசித்தார். துரதிர்ஷ்டவசமாக, உடல்நலக் குறைவால் அவர் இந்த மாளிகையிலேயே காலமானார்.
5. தற்போதைய நிலை காலப்போக்கில் நகர வளர்ச்சியால் இந்த பிரம்மாண்டமான கட்டிடம்
இடிக்கப்பட்டு மறைந்துவிட்டது.
Subscribe to:
Comments (Atom)
விஜயநகர கால அரிய நீர்பாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு. எயில்நாட்டு - கல்லோகச் சக்கரவர்த்தி அனவேந்தார்
வெங்கடாபுரம் கல்வெட்டு இடம்: ஊத்தங்கரை வட்டம், நடுப்பட்டி பஞ்சாயத்து, வெங்கடாபுரம் பழனி கவுண்டர் என்பவரது நிலத்தில், புளிய மரத்தடியில் உள்ள...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6



















































