Monday, 16 June 2025

சந்தூர் - கல்வெட்டு - விஜயநகரர் மன்னர் வீரப்பிரதாபதேவராயர் காலம் 1520

த.நா.அ.தொல்லியல்துறை தொடர் எண் : 88 /1973 மாவட்டம் : கிருஷ்ணகிரி ஆட்சி ஆண்டு : சக ஆண்டு 1442 வட்டம் : கிருஷ்ணகிரி வரலாற்று ஆண்டு : கி.பி. 1520 ஊர் : சந்தூர் இந்தியக் கல்வெட்டு மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை : எழுத்து : தமிழ் முன் பதிப்பு : அரசு : விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண் : 1 மன்னன் : வீரப்பிரதாபதேவராயர் இடம் : கழனியிலுள்ள தனிக்கல். குறிப்புரை: கவுண்டர் செம்பாவை ஈராண்டை மாரப்பன் என்பவர் ஏரியைத் தூரெடுத்துக் (மணவொழுக்கி) கட்டியமைக்காக அவருக்கு அந்த ஏரியின் முதல்மடைப் பாசணத்தில் 500 குழி நிலம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த நிலம் தவிர பிற நிலங்களிலிருந்து வரும் கவுண்டு மாணிய வருவாயில் பத்தில் ஒரு பங்கு தரப்பட்டது என்ற செய்தியும் நிலம் 24 அடிக் கோலால் அளக்கப்பட்டது என்ற செய்தியும் இக்கல்வெட்டால் அறியப்படுகின்றன.

No comments:

Post a Comment

மகராசகடை கற்திட்டைகள்

  https://maps.app.goo.gl/MCkqkAxy2iNbhR8Q8