Friday 3 April 2020

93.150 ஆண்டுக்கு முன்- சின்ன ஒரப்பம் -சிவத்தாண்ட தேவர் கோயில் இருந்ததற்கான ஆதாரம் -MUSEUM &KHRDT HISTORY OF KRISHNAGIRI

சின்னஒரப்பம் சிவதாண்டவ தேவர் கோயில் கல்வெட்டு 
 எழுத்து உள்ளதா என ஆய்வு செய்யும் காப்பாச்சியர் கோவிந்தராஜ்  ,உடன் கணேசன்.
 ஊர் மக்கள் யாரும் தொடவில்லை ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு நாங்களே படிஎடுக்க அக்கல்லை எடுத்தோம்
செல்வகுமார். காப்பாச்சியர் ,கணேசன்

 படிஎடுக்கும் பணியில்

 ஊரில் ஒரு கதை சொல்லப்பட்டது. அந்த கல்லில் உள்ள எழுத்துக்களை படித்துவிட்டால். தலை வெடித்துவிடுமாம். அதை எடுத்தால் எழு கொப்பரை பணம் வெளியே வருமாம் என்று கூறி அதை தொடக்கூட யாரும் வரவில்லை .அருகே வர அச்சப்பட்டு தொலைவிலே நின்றார்கள். இதுவும் சில வகையில் நல்லதுதான் அந்த கல்வெட்டுகள் பத்திரமாக உள்ளதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.
கல்வெட்டு வாசகம்
                           1. ஸ்ரீ சிவத்தா
                           2. ண்ட தேவர்
                           3. க்கு சிங்க(ந்)
                           4. விட்ட(து) இத
                           5. ன்மத்து..

150 ஆண்டுகளுக்கு முன்னர் சிவத்தாண்ட தேவர் என அழைக்கப்படது. அக்கோயிலுக்கு சிங்கன் என்பவன் நில தானம் அளித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.. இன்னும் அந்த கோவிலின் எச்சங்கள் அங்கு காணப்படுகின்றன .

இதே கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்னும் இந்த இடத்திலேயே இருந்தது அதற்கான ஆதாரம்

https://jsrkrishnaji.blogspot.com/2019/04/blog-post.html 

ஆய்வுப்பணியில்-
காப்பாச்சியர் கோவிந்தராஜ்
                                   கிருஷ்ணன்
                                   செல்வகுமார்    ,கணேசன் உடன் தமிழ்செல்வன் 

                   
எங்களால் இயன்றது . நன்றி 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                790453987

தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.


No comments:

Post a Comment