Thursday, 27 March 2025

மாவட்ட ஆட்சியர் சந்திப்பு 26.3.25

மரபுநடை - கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியால் மகளிர் தினத்தில் 2018ல் தொடங்கப்பட்டு அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை இவற்றுடன் இணைந்து – கடந்த 6 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி வரலாற்று தடையங்களை ஆவணப்படுத்தியும் 150 புதிய கல்வெட்டுகளை கண்டறிந்தும் பல தொல்லியல் தடயங்களை தொடர்ந்து கண்டறிந்தும் வருகிறது கிருஷ்ணகிரி வரலாற்றில் புதிய பக்கங்களை சேர்த்து வருகிறது. – இது மட்டுமல்லாமல் வருடத்திற்கு இரண்டு முறை கிராமப்புற மாணவர்களுக்கு தொல்லியல் , வரலாற்று களப்பயணத்தை நடத்திவருகிறது. கிராமங்களில் பள்ளி அருகே உள்ள வரலாற்று தடையங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று மாணவர்களைத் தேடி வரலாறு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது . .தற்போது அகழ்வாய்வு செய்யப்படும் சென்னானூர் அகழ்வாய்வு தளத்தையும் இக்குழு கண்டறிந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் சென்னானூர் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது . இக்குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் மரபு நடையை தொடங்க உள்ளது . இது முழுக்க பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது . இந்த நிகழ்வினை 29.03.25 காலை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்க ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் குறைவாகக் காண்க

No comments:

Post a Comment

புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு ஓசூர்

தமிழகத்தில் முதல்முறையாக புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, பள்...