Tuesday, 6 January 2026

தமிழகத்தில் முதன்முறையாக ‘பள்ளிப்படை நடுகல்’ கண்டுபிடிப்பு -Discovery of a New Type of Pallippadai Hero Stone for the First Time in Tamil Nadu #khrdt.in

தமிழகத்தில் முதன் முறையாக புதுவகை பள்ளிப்படை நடுகற்கள் கண்டுபிடிப்பு-Discovery of a new type of 'Pallippadai' hero stones for the first time in Tamil Nadu." விளக்கம் கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ் #கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் https://youtu.be/ibQvURPjkok
இந்த நடுகல் குரும்பட்டி தென்னந்தோப்பில் உள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழகத்தில் முதன் முறையாக புதுவகை பள்ளிப்படை நடுகற்கள் கண்டுபிடிப்பு: காவேரிப்பட்டணத்தை அடுத்த குரும்பட்டி சாமுண்டியம்மன் வனத்துக்கு அருகே உள்ள தனியார் தென்னந்தோப்பு மற்றும் காவேரிப்பட்டணம் தேர்பேட்டை வினாயகர் கோயிலின் கருவறை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பலகைக் கற்களில் ஒரே அமைப்பில் நடுகல் இருப்பதை பாறை ஓவிய ஆர்வலர் சதாநந்தன் கிருஷ்ணகுமார் கண்டறிந்து அளித்த தகவலின்பேரில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் மற்றும் தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டது. இதுகுறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது: இறந்தோருக்கு கல்லில் நினைவுச்சின்னம் எடுக்கும் பழக்கம் புதிய கற்காலம் முதலே இருந்துவந்துள்ளது. முதலில் பெரிய கற்களை சிறிய கற்களின்மீது தூக்கி வைத்து நினைவுச் சின்னங்களை உருவாக்கினார்கள். பின்னர் இரும்பு காலத்தில் பலகைக் கற்களைக் கொண்டு வீடு போல் உருவாக்கி அதனுள் இறந்த வீரனின் எலும்புகள் மற்றும் அவன் பயன்படுத்திய பொருட்களை வைத்து நினைவுச் சின்னங்களை எழுப்பினர். தென்னிந்திய இரும்புக் காலத்தை பெருங்கற்படைக் காலம் என்று கூறும் அளவுக்கு முதுமக்கள் தாழி, சுடுமண் ஈமப் பேழை, கல்வட்டம், குத்துக்கல், கற் திட்டை, கற் பதுக்கை போன்று பல வகைகளில் இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன. கற்திட்டைகளில் இறந்த வீரனின் உருவம் வரையப்பட்டன. இதுவே பின்னர் வீரனின் உருவம் தாங்கிய நடுகற்களாகின. சங்க காலத்தில் இத்தகைய பெருங்கற்படைகளோடு நடுகற்களும் இருந்துள்ளதை சங்க இலக்கியங்கள் விவரிக்கின்றன. இதற்கு சம காலத்திலேயே மதுரையை சுற்றியுள்ள மலைகளில் தமிழி எழுத்துகளோடு கூடிய கற் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை பாழி என்றும் பள்ளி என்றும் அழைப்பர். இவை இறந்த சமணத் துறவியருக்காக உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் இதுகுறித்து சங்க இலக்கியங்களில் குறிப்பேதும் இல்லை. வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் பழக்கத்தைப் போன்று இறந்த மன்னர்களுக்கு எடுக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் பள்ளிப்படை என்று அழைக்கப்பட்டன. அவை கோயிலாகவே எடுக்கப்பட்டதால் பள்ளிப்படைக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. பல்லவ மன்னன் கம்பவர்மனின் 8ம் ஆட்சியாண்டில் கங்க மன்னன் பிருதிவீபதி போர்க்களத்தில் இறந்துவிட அவனுடைய மகன் இராசாதித்த மகாதேவன் தன் தந்தை பள்ளிப்படுத்தவிடத்து சோழபுரத்தில் பள்ளிப்படை கோயில் எடுப்பித்தான் என கல்வெட்டு கூறுகிறது. ஆந்திர மாநிலம் திருக்காளத்தியை அடுத்த தொண்டைமான் பேராற்றூரில் தந்தை கோதண்டராமனான முதலாம் ஆதித்தனுக்கு மகன் முதலாம் பராந்தகன் பள்ளிப்படைக் கோயில் எடுத்துள்ளான். ஆதீத்தேஸ்வரம் என்ற இப்பள்ளிப்படைக் கோயில் இரு தளமுடைய கற்றளியாக உள்ளது. முதலாம் ராஜராஜன் தன் பாட்டனான அரிஞ்சயனுக்கு எடுத்த பள்ளிப்படைக் கோயில் வேலூர் மாவட்டம் மேல்பாடியில் அரிஞ்சிகை ஈஸ்வரம் என்ற பெயரில் உள்ளது. தன் சிற்றன்னை பஞ்சவன் மாதேவிக்கு பட்டீஸ்வரத்தில் முதலாம் ராஜேந்திரன் பஞ்சவன் மாதேவீஸ்வரம் என்ற பள்ளிப்படைக் கோயிலை எடுப்பித்துள்ளான். இவையாவும் சோழமன்னர் குடும்பத்தாருக்கானவையாகும். வீரர்கள் இறந்தப்பின் அவரை இரண்டு தேவலோக மகளிர் சொர்க்கத்துக்கு தூக்கிச்செல்லும் காட்சி காட்டப்பட்டிருக்கும். பல நடுகற்களில் வீரன் இறந்தபின் மேல்பகுதியில் அவர் சிவ லிங்கத்தை வழிபடுவதுபோல் காட்டப்பட்டிருப்பார். இவை எல்லாம் வீரர்களுக்கானது. இப்போது காவேரிப்பட்டணம் தேர்பேட்டை வினாயகர் கோயிலின் கருவறை மற்றும் காவேரிப்பட்டணத்தை அடுத்த குரும்பட்டி சாமுண்டியம்மன் வனத்துக்கு அருகே உள்ள தனியார் தென்னந்தோப்பு ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பலகைக் கற்களில் உள்ளவை மேற்குறிப்பிட்ட நடுகல்லுக்கும் பள்ளிப்படைக்கும் இடைப்பட்ட வகையைச் சேர்ந்ததாகும். அதாவது இறந்தவன் பள்ளிப்படை எடுக்கும் அளவுக்கு ஒரு பெரிய மன்னனல்ல. ஆனால் நடுகற்களில் காட்டப்படும் சாதாரண வீரனும் அல்ல. அவர் ஒரு குறுநிலத் தலைவன். எனவேதான் வீரனைப் போன்று நடுகல்லாகவும் இல்லாமல் மன்னர்களைப்போன்று பள்ளிப்படையாகவும் இல்லாமல் புதுமையாக நினைவுச் சின்னம் எடுத்திருக்கிறார்கள். இவை சுமார் 15ம் நூற்றாண்டுக் கலை அமைதியில் அமைந்துள்ளன. நான்கடிக்கு நான்கு அடி சதுர பலகைக் கல். இதில் ஒரு கோயில் காட்டப்பட்டிருக்கிறது. அதன் கருவறையில் லிங்கம் உள்ளது. இரு புறமும் இரண்டு நந்திகள் லிங்கத்தைப் பார்த்தவண்ணம் அமர்ந்துள்ளன. இவை அனைத்தும் ஒரு கோயிலைக் குறிக்கின்றன. இவற்றோடு இதில் காட்டப்பட்டுள்ள சில அடையாளங்களை பார்க்கும்போது இது ஒரு கோயில் மட்டுமல்ல. நினைவுக்கல் என்பது தெரியவருகிறது. முதலாவது, கோயில் விமானத்தின் இருபுறமும் சந்திரர் சூரியனின் கோட்டுருவங்கள் காட்டப்பட்டுள்ளன. இது சூரியர் சந்திரர் இருக்கும்வரை இறந்த இப்பெருமகனாரின் புகழ் நிலைத்திருக்கும் என்பதின் அடையாளமாகும். அடுத்து முக்கியமானது லிங்கத்தின் இருபுறமும் காட்டியிருக்கும் குடை மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் கோட்டுருவங்களாகும். இவை ஒரு தலைவனின் அடையாளங்களாகும். அதாவது இறந்தவரின் அடையாளமாக லிங்கமும், அவரொரு தலைவன் என்பதைக் குறிக்க குடை மற்றும் கண்ணாடியும் காட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு கீழே நேராய் நம்மைப் பார்த்து அமர்ந்துள்ள சிம்மமும் அதனை நோக்கி இரு புறமும் நடந்து வரும் யானைகளும் காட்டப்பட்டுள்ளன. இவை இறந்த தலைவனின் பலத்தைக் குறிப்பனவாகும். எனவே இதனை பள்ளிப்படை நடுகல் எனக் குறிப்பிடலாம். பள்ளிப்படைக் கோயில்கள் தனியாகவும் நடுகற்கள் தனியாகவுமே இதுவரை பதிவாகி உள்ளன. இரண்டும் இணைந்து தமிழகத்தில் இதுவரை இப்படி ஒரு நடுகல் ஆவணப்படுத்தப்படவில்லை. எனவே இதுவே தமிழகத்தின் முதல் பள்ளிப்படை நடுகல்லாகும். தலைவன் தலைவி அமர்ந்த நிலையில் காணப்படும் நடுகல்லொன்று இப்பகுதியில் இருந்து கொண்டுசென்று தற்போது கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இத்தலைவன் யார் என்பது குறித்து கல்வெட்டுகள் இல்லை. இத்தலைவனுக்கும் பள்ளிப்படை நடுகற்களுக்கும் தொடர்பு இருக்கலாம். இது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்த ஆய்வில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு செயலர், தமிழ்செல்வன், பொருளாளர் விஜயகுமார், ஆசிரியர் பாலாஜி, கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவக்குமார், பாறை ஓவிய ஆர்வலர் சதாநந்தன் கிருஷ்ணகுமார், மாருதி மனோகரன், நிலத்துக்கு சொந்தக்காரரான மாதேஸ், அவரது தாய், அவரது மகன் ஆகியோர் உடனிருந்தனர். சதாநந்த கிருஷணகுமார் கண்டறிதல வீர்ர்களுக்கு நடுகல் எடுப்பது போல் மன்னருக்கு நடுகல் எடுக்க முடியுமா மன்னனுக்கு மண்டபம் மாதிரி எடுத்தால் எத்தனை நான் வழிபாட்டில் இருக்கும். எனவே மன்னர்களுக்கு நடுகல்லுக்கு பதில் பள்ளிப்படை கோயிலாக கட்டினார்கள் மேல்பாடியில் உள்ள அரிஞ்சய சோழனின் பள்ளிப்படை சிறிய கற்றளியாகும். இக்கோவிலில் உள்ள கல்வெட்டு ‘பள்ளிப்படையான அரிஞ்சிகை ஈஸ்வரம்‘ என இக்கோவிலைக் குறிப்பிடுகிறது. இக்கோயிலுக்கு அருகில் வடக்குப் பகுதியில் சிவனுக்காக தனியாக மற்றொரு கோவில் ஒன்று உள்ளத Discovery of a New Type of "Pallippadai" Hero Stone for the First Time in Tamil Nadu Based on information provided by rock-art enthusiast Sadanandan Krishnakumar, a joint study was conducted by the Krishnagiri Historical Research and Documentation Group, the Krishnagiri Museum, and the Tamil Nadu Institute of Archaeological Research. They identified identical hero stones in two locations: a private coconut grove near the Chamundiamman Forest in Kurumpatti (near Kaveripattinam) and the sanctum sanctorum of the Therpettai Vinayaka Temple in Kaveripattinam. Historical Context of Memorials Govindaraj, Secretary of the Tamil Nadu Institute of Archaeological Research, shared the following details: The practice of erecting stone memorials for the deceased has existed since the Neolithic period. Initially, large stones were placed over smaller ones. During the Iron Age, slab stones were used to create house-like structures (cists) containing the bones and belongings of deceased warriors. In South India, this era is known for various megalithic monuments like urn burials, sarcophagi, stone circles, menhirs, dolmens, and cists. Eventually, figures of warriors were carved on these dolmens, evolving into "Hero Stones" (Nadukal). Pallippadai vs. Hero Stones While Hero Stones were for warriors, memorials for deceased kings were called Pallippadai. Because they were built as temples, they are known as Pallippadai Temples. Examples: King Parantaka I built the Aditteswaram temple for his father, Aditya I. Rajaraja I built the Arinjigai Iswaram at Melpadi for his grandfather, Arinjaya Chola. Rajendra I built the Panchavan Madhiswaram at Pattiswaram for his stepmother. The Significance of the New Discovery The stones found in Kaveripattinam and Kurumpatti represent a middle ground between a standard Hero Stone and a Royal Pallippadai. The deceased was likely not a great king (warranting a full temple) but was more than a common warrior—he was a Chieftain (Kurunila Thalaivan). Features of the Pallippadai Hero Stone (15th Century): Structure: A 4x4 foot square stone slab. Imagery: It depicts a temple with a Lingam in the sanctum, flanked by two Nandis. Celestial Symbols: Etchings of the Sun and Moon on either side of the temple tower signify that the chieftain's fame will last as long as they exist. Symbols of Authority: Etchings of a royal umbrella (Kudai) and a mirror (Kannadi) flank the Lingam, marking the individual as a leader. Power Symbols: Below these, a lion faces forward, flanked by two elephants, symbolizing the chieftain’s strength. This is the first time in Tamil Nadu that a "Pallippadai" (tomb-temple style) and a "Nadukal" (hero stone) have been documented as a combined single entity. While a hero stone depicting a seated chieftain and his wife from this area is currently in the Krishnagiri Museum, there are no inscriptions to identify this specific leader yet. Research is ongoing. Summary of Sadanandan Krishnakumar’s Findings: While warriors received hero stones, it was deemed insufficient for kings. To ensure long-term worship and legacy, kings were honored with Pallippadai Temples instead of simple stones. For example, the Arinjaya Chola Pallippadai at Melpadi is a small stone temple (Kattrali) specifically identified in inscriptions as "Pallippadai Arinjigai Iswaram."ு .
https://maps.app.goo.gl/iVYK1Pv5SzCexkeJA
கீழ் உள்ளது காவேரிப்பட்டிணம் தேர்ப்பட்டியில் வினாயகர் கோயிலில் உள்ளது
<
div class="separator" style="clear: both;">
இந்த காவேரிப்பட்டிணத்து அரசனுக்காகவே இந்த பள்ளிப்படை நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம்
.காவேரிப்பட்டிணம் அரசரின் நடுகல்லும் பள்ளிப்படையும் - புதுவகை பள்ளிப்படை நடுகற்கள் கண்டுபிடிப்பு- 'Pallippadai' hero stones https://youtu.be/CbqMLa-WPGc

Saturday, 3 January 2026

நெக்குந்தி விஜயநகர கால நடுகல் - Nekkundi Vijayanagara Period Hero Stone கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் khrdt

இது நெக்குந்தி வயலில் காணப்படும் விஜயநகரர் காலத்து நடுகல் இது ஒரு சதிக்கல் வகையாகும். இவர் ஊருக்காக பூசலில் இறந்து விட்டதால் அவருக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இவரின் இரண்டு மனைவிகளும் உடன்கட்டை ஏறி இறந்துள்ளனர்

தமிழகத்தில் முதன்முறையாக ‘பள்ளிப்படை நடுகல்’ கண்டுபிடிப்பு -Discovery of a New Type of Pallippadai Hero Stone for the First Time in Tamil Nadu #khrdt.in

தமிழகத்தில் முதன் முறையாக புதுவகை பள்ளிப்படை நடுகற்கள் கண்டுபிடிப்பு-Discovery of a new type of 'Pallippadai' hero stones...