அரசு அருங்காட்சியகம் & KHRDT கிருஷ்ணகிரி வரலாறு-by JSR கிருஷ்ணாஜி அறக்கட்டளை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Wednesday, 24 September 2025
Tuesday, 16 September 2025
Thursday, 27 March 2025
மாவட்ட ஆட்சியர் சந்திப்பு 26.3.25
மரபுநடை - கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியால் மகளிர் தினத்தில் 2018ல் தொடங்கப்பட்டு அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை இவற்றுடன் இணைந்து – கடந்த 6 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி வரலாற்று தடையங்களை ஆவணப்படுத்தியும் 150 புதிய கல்வெட்டுகளை கண்டறிந்தும் பல தொல்லியல் தடயங்களை தொடர்ந்து கண்டறிந்தும் வருகிறது கிருஷ்ணகிரி வரலாற்றில் புதிய பக்கங்களை சேர்த்து வருகிறது. – இது மட்டுமல்லாமல் வருடத்திற்கு இரண்டு முறை கிராமப்புற மாணவர்களுக்கு தொல்லியல் , வரலாற்று களப்பயணத்தை நடத்திவருகிறது. கிராமங்களில் பள்ளி அருகே உள்ள வரலாற்று தடையங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று மாணவர்களைத் தேடி வரலாறு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது . .தற்போது அகழ்வாய்வு செய்யப்படும் சென்னானூர் அகழ்வாய்வு தளத்தையும் இக்குழு கண்டறிந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் சென்னானூர் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது . இக்குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் மரபு நடையை தொடங்க உள்ளது . இது முழுக்க பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது . இந்த நிகழ்வினை 29.03.25 காலை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்க ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் குறைவாகக் காண்க
Subscribe to:
Comments (Atom)































































