Tuesday, 23 October 2018

குந்தப்பள்ளி கல்வெட்டு 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தப்பள்ளி என்ற கிராமத்தில் ராமன் என்பவரது வயலில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அறிஞர் அணணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் மற்றும் அத்துறை பேராசிரியர் வாசுகி ஆகியோர் அளித்த தகவலின்பேரில் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினருடன்  சென்று ஆய்வு மேற்கொண்டார்
900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுகல் கல்வெட்டு குந்தப்பள்ளி கிராமத்தில் ராமன் என்பவரது வயலில் உள்ளது
https://youtu.be/SDeH716YCpU
 இது குறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்ததாவது: நடுகற்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் காணப்பட்டாலும் கல்வெட்டுக்களோடு கூடிய நடுகற்கள் குறைந்த அளவே காணப்படுகின்றன. ஒரு பகுதியின் வரலாற்றைத் தெரிந்துக்கொள்ள இத்தகைய கல்வெட்டுக்களே மக்கிய ஆதாரங்களாய் விளங்குகின்றன. எனவே தற்போது கண்டறியப்பட்டுள்ள நடுகல்லுடன் கூடிய கல்வெட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.





இரண்டாக உடைந்துக் காணப்படும் இந்நடுகல்லில் புலியைக் குத்தி வீரன் ஒருவன் இறந்த செய்தி மற்றும் இரண்டு காளைமாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு அதில் ஒன்று இறந்த செய்தி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டு வாசகம்:
1.ஶ்ரீ ராஜேந்திர தேவற்கு யாண்டு இரண்டாவது வி
2. ரியூர் நாட்டு நாட்டு காமுண்ட நித்
3. தவிநோதக கங்கனடியாந் கடிக
4. ாசிங்கன் தம்பி பல புலி குத்திப
5. ட்டாந்  இஷபம் தம்மில் விட்ட
6. து கொண்டு குத்தி ஒன்
7. று களத்தில் பட்டது.



இக்கல்வெட்டு இரண்டாம் ராஜேந்திரனின் இரண்டாம் ஆட்சியாண்டான கி.பி.1053ம் ஆண்டினைச் சேர்ந்ததாகும். இப்பகுதி அக்காலத்தில் விரியூர் நாடு என்று அழைக்கப்பட்டது. மேலும் இப்பகுதியின் தலைவனாக நித்தவிநோதக கங்கன் என்பவன் இருந்துள்ளான். இவனுக்குக் கீழ் இருந்த கடிகாசிங்கன் என்பவனின் தம்பி பல புலிகளைக் கொன்று இறுதியில் ஒரு புலி தாக்கி இறந்துள்ளான். மேலும் இரண்டு காளைமாடுகள் ஒன்றோடொன்று மோதி இறுதியில் அவற்றிலொன்று இறந்துள்ளது
. இநத இரண்டு நிகழ்வுகளிலும் உயிரிழந்த வீரன் மற்றும் காளைக்கும் சேர்த்து இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இடப்பக்கம் இறந்த வீரன் புலியைக் குத்தும் காட்சியும் வலப்பக்கம் இரண்டு காளைமாடுகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக தலைகளை முட்டிக்கொள்ளும் காட்சியும் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனுக்கு எடுப்பதைப் போன்றே சண்டையிட்டு இறந்த காளைக்கும் சிறப்பு செய்யும் வகையில் இங்கு நடுகல் எடுத்திருப்பது சிறப்பாகும்
இக்கல்வெட்டு இரண்டாம் ராஜேந்திரனின் இரண்டாம் ஆட்சியாண்டான கி.பி.1053ம் ஆண்டினைச் சேர்ந்ததாகும். இப்பகுதி அக்காலத்தில் விரியூர் நாடு என்று அழைக்கப்பட்டது. மேலும் இப்பகுதியின் தலைவனாக நித்தவிநோதக கங்கன் என்பவன் இருந்துள்ளான். இவனுக்குக் கீழ் இருந்த கடிகாசிங்கன் என்பவனின் தம்பி பல புலிகளைக் கொன்று இறுதியில் ஒரு புலி தாக்கி இறந்துள்ளான். மேலும் இரண்டு காளைமாடுகள் ஒன்றோடொன்று மோதி இறுதியில் அவற்றிலொன்று இறந்துள்ளது. இநத இரண்டு நிகழ்வுகளிலும் உயிரிழந்த வீரன் மற்றும் காளைக்கும் சேர்த்து இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இடப்பக்கம் இறந்த வீரன் புலியைக் குத்தும் காட்சியும் வலப்பக்கம் இரண்டு காளைமாடுகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக தலைகளை முட்டிக்கொள்ளும் காட்சியும் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனுக்கு எடுப்பதைப் போன்றே சண்டையிட்டு இறந்த காளைக்கும் சிறப்பு செய்யும் வகையில் இங்கு நடுகல் எடுத்திருப்பது சிறப்பாகும்
இந்த ஆய்வில்  காப்பாச்சியாளர் கோவிந்த ராஜ். பேராசிரியர் வாசுகி. விஜயகுமார். எம்.என் .ரவி. தமிழ்ச்செல்வன் . மதிவாணன். காவேரி டேவீஸ் ஆகியோர் ஈடுபட்டனர்


 youtube link

https://www.youtube.com/watch?v=Ej8kQUw0HGI
 
இந்த ஆய்வில்  காப்பாச்சியாளர் கோவிந்த ராஜ். பேராசிரியர் வாசுகி. விஜயகுமார். எம்.என் .ரவி. தமிழ்ச்செல்வன் . மதிவாணன். காவேரி டேவீஸ் ஆகியோர் ஈடுபட்டனர்






http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/oct/24/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3025833.html


https://www.dailythanthi.com/News/Districts/2018/10/24032526/The-900yearold-Chola-periodic-inscription-in-Kundapalli.vpf

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=445282



உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

17th Century Hero Stones - Vijayanagara Period -17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் - விஜயநகர காலம்

குதிரை தாவும் நிலையில் காட்டப்பட்டுள்ளது அதன்மேல் ஒரு வீரன் குதிரையின் கடிவாளத்தை பிடித்த வாரும் மறுக்கையில் வாளை ஏந்தியவாறும் காட்டப்பட்டு...